என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 9 ஆகஸ்ட், 2014

VGK 28 / 03 / 03 - THIRD PRIZE WINNER - வாய் விட்டுச் சிரித்தால்





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :



 VGK-28  

 வாய் விட்டுச் சிரித்தால் 


இணைப்பு:



 



  

   

 

 





மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 




நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  



ஐந்து




  








இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 







  


மற்றவர்களுக்கு: 







    


முத்தான மூன்றாம் பரிசினை 


 வென்றுள்ளவர் 



திருமதி 


 ராதாபாலு  



அவர்கள்



வலைத்தளங்கள்: 

” எண்ணத்தின் வண்ணங்கள் ”
http://radhabaloo.blogspot.com/


“அறுசுவைக் களஞ்சியம் ”
http://arusuvaikkalanjiyam.blogspot.com/


“ என் மன ஊஞ்சலில் “
http://enmanaoonjalil.blogspot.com/




 



முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள



திருமதி 



 ராதாபாலு  




அவர்களின் விமர்சனம் இதோ:





வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்! நம் கோபு ஸாரின் கதைகளைப் படித்தாலோ சிரித்து, சிரித்து எந்த நோயும் நம் அருகிலேயே வராது!

வித்யாசமான, வேடிக்கையான நடைமுறைகளைக் கொண்ட ஒரு மருத்துவ மனையைப் பற்றிய நகைச்சுவை கதை! படிக்கும்போது 'அட...இப்படியும் ஒரு ஆஸ்பத்திரியா' என்ற எண்ணம் தோன்றினாலும், கதையின் சுவாரசியத்தில் முழுக் கதையையும் படித்து முடித்து விடும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை! அதுதான் கதாசிரியரின் ஸ்பெஷாலிட்டி!

முன்கோபி கதாநாயகனுக்கேற்ற பொருத்தமான பெயர் கோபி! சலிப்பு, கொதிப்பு, கடுப்பு, கோபம், எரிச்சல் (ஆசிரியர் எழுதியுள்ள {எரிச்சல்} இந்த அனுபவம் ஆண்கள் மட்டுமே அறிந்தது!) இவற்றை பிறவியிலேயே பெற்றதுடன் யாராலும் விரும்பப் படாதவனாக இருந்தவனுக்கு சிரிப்பும் 'பை...பை..'சொல்லி விட்டது போலும்!

பாவம்...ஏற்கெனவே கடுகடு, சிடுசிடு கோபியின் எரிச்சலை ஒரு குட்டியூண்டு  கல் இடறி ரத்தக்காயம் வேறு! அவன் முகத்தை கற்பனை செய்யவே முடியவில்லை! 

மருத்துவமனை நர்ஸ்களை வெள்ளைப் புறாக்களாக கற்பனை செய்யும் ஆசிரியரின் ரசனையை என்ன சொல்ல! இது போன்ற உவமைகள் கதைக்கு சுவாரசியம் கூட்டும் 'எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ்'!

அவசரமாக டாக்டரைப் பார்க்க வேண்டும் என்றவனை சட்டை, பனியனை அவிழ்க்கச் சொல்வது வேடிக்கையாக இருந்தாலும், ஏன் அப்படி என்ற கேள்வி கதையை மேலும் படிக்கத் தூண்டுகிறது.

அந்த மருத்துவமனையில் அதுதான் சட்டம் என்று கொரியர்காரர் சொன்னபோது 'இது ஏதோ பைத்தியக்கார ஆஸ்பத்திரியோ' என்ற சந்தேகம் ஏற்படுகிறது! 

காலில் அடிபட்ட காயத்தைப்பற்றிக் கவலைப்படாமல், கண்ட டெஸ்ட்டுகளையும் எடுப்பதுதான் இங்கு சட்டம் என்பது கோபியைவிட நமக்கு அதிக கோபத்தை ஏற்படுத்துகிறது!

வரும் நோயாளிகளை இந்த சட்டங்களைச்சொல்லி அல்லல் படுத்துவது அளவில்லாத ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது!

ஆனால் கொரியர்காரரும் தினமும் இது போன்ற டெஸ்ட்டுகள் முடிந்த பின்பே டாக்டரைப் பார்க்க முடியும் என்பது வலியை மறந்து சிரித்த கோபியைப் போலவே நம்மையும் வாய்விட்டு, வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது!! இவை கதைக்கு ஆசிரியர் கொடுத்த 'ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்'!

எப்படியோ சிரிப்பு என்றால் என்னவென்றே தெரியாத, சிடுசிடு கடுகடு கோபியையும் சிரிக்க வைத்த பெருமை அந்த நகரின் பிரபல ஆஸ்பத்திரிக்கு கிடைத்து விட்டது! அதில் கதாசிரியருக்கும் பங்கு உண்டே!!

இது பல்துறை மருத்துவமனை மட்டுமல்ல, (ஆண்)பால் துறை.... ஆண்களுக்கு மட்டுமான ஆஸ்பத்திரி போலும்! பெண்களுக்கு இந்த விதிமுறைகள் சரிவராதே!! 

பலவிதமான பதுப்புது மருத்துவ உபகரணங்களை வாங்கிப் போட்டதுடன், வேலைக்கும் பலரை வைத்து, ஷகரில் அதிகபட்ச வாடகையையும் கொடுத்து ஆஸ்பத்திரி நடத்துபவர்களின் ஒரே இலக்கு அப்பாவி மக்களாகிய நாம்தானே?!

நகரின் சிறந்த ஆஸ்பத்திரி என்று வந்து விட்டு அவர்களின் முட்டாள்தனமான விதிமுறைகளைக் கேட்டு, அதனால் ஆத்திரம், கோபம், எரிச்சல் ஏற்பட்டு, அவர்கள் டெஸ்ட் எடுக்கும்போது ரத்தக் கொதிப்பு, ஹைபர் டென்ஷன், ஷுகர்.... இன்னும் பெயர் தெரியாத வியாதிகள் வந்து அந்த மருத்துவமனையின் நிரந்தர நோயாளிகளாக ஆக்குவதே அவர்களின் குறிக்கோள் போலும்! பேஷண்டுகளை அதிகரிக்க ஒரு நல்ல ஐடியா! 

இந்த விஷயத்தை 'கிரிஸ்டல் க்ளியராக' எடுத்துச் சொல்கிறார் நம் ரைட்டர்!

எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் நல்ல உடல்நலத்துடன் மிக ஆக்டிவ்வாக இருந்தார். ஜெனரல் செக்கப்பிற்காக பலரும் பரிந்துரைத்த ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அவர்கள் செய்த பரிசோதனையில், உங்கள் கர்ப்பப்பையில் பிரச்னை... உடனே நீக்க வேண்டும் என்று சொல்ல, பயந்து போய் ஆப்பரேஷன் செய்து கொண்டார். அது முதல் பல பிரச்னைகள். தையல் சரியில்லை, உள்ளே புண் ஆகி விட்டது, மீண்டும் தையல் என்று வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை, மன உளைச்சல், பணச்செலவு....'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக' நன்றாக இருந்த உடம்பைக்கெடுத்துக்கொண்டு விட்டேனே என்று வருத்தப் படுகிறார்.

இந்தக் காலத்தில் டாக்டர்களையும் நம்ப முடிவதில்லை.... நல்ல மருத்துவமனை எது என்று தீர்மானிக்கவும் முடிவதில்லை.

ஒன்றுமில்லாத நோய்க்கெல்லாம் இக்காலத்தில் எப்படி விரிவான(!) மருத்துவம் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை சுருங்கச்சொல்லி விளங்க வைப்பது போல் மிக அழகாக ஆசிரியர் அவருக்கே உரிய நகைச்சுவையுடன், அங்கங்கே ரசனையான வர்ணனைகளுடன், 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்பதைப்போல் எழுதியுள்ள இக்கதையின் முடிவை நம்மிடமே விட்டு நம்மையும் 'ஜட்ஜ்' ஆக்கி விட்டார்!!

என்னைப்பொறுத்தவரை கதாநாயகன் கோபி தன் கால்வலியையும் பொறுத்துக் கொண்டு, 'விட்டேன் பிழைத்தேன்' என்று வேறு ஆஸ்பத்திரிக்கு ஓடியிருப்பான்!!


ராதாபாலு
திருச்சி




  




மனம் நிறைந்த பாராட்டுக்கள்


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




     






//இது பல்துறை மருத்துவமனை மட்டுமல்ல, (ஆண்)பால் துறை.... ஆண்களுக்கு மட்டுமான ஆஸ்பத்திரி போலும்! பெண்களுக்கு இந்த விதிமுறைகள் சரிவராதே!! //

  இல்லை... இது இரு பாலாருக்குமான மருத்துவ மனையே. ஆஸ்பத்திரி வெளி வராந்தா வரவேற்பு பகுதி படத்தில் இரு பாலாரும் அமர்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்களே!

சட்டை கழட்டலெல்லாம் உள் பரிசோதனை கூடத்தில்..  தடுக்கப்பட்ட தனித்தனி பகுதிகளில்   சோதனைகள் ஸ்கிரீன் போட்டுத் தடுத்த தனி அறையில்.
                                                                      
                                                                                 ***************

கண்கள் படத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கையில் நமது ரசனையானது துண்டுபட்டு இன்னும் தனக்கு இசைவான போக்கில் அந்த படத்தை மேலும் ரசிக்கும்.  இதுவே வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்துவதில் படங்களின்  பங்களிப்பு.

உதாரணத்திற்கு:


பல்லை சுத்தம் செய்யும் படத்திற்கு ஒலியும் சேர்த்திருந்தால் நிச்சயம் நாம் பயந்திருப்போம்.

--- 'பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா' கதை விமரிசனப் பகுதியில் விமர்சகர் E.S. சேஷாத்ரி அவர்கள் சொன்னது http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26-02-03-second-prize-winners_26.html ஹஹ்ஹஹா சிரிப்பை வரவழைத்து இல்லையா?.. இதுவே இப்படியான ரசனையின்  அடிப்படை..

--  நடுவர்


      


   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.







இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.





காணத்தவறாதீர்கள் !





அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



 VGK-30 



  மடிசார் புடவை   


விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


14.08.2014




இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

16 கருத்துகள்:

  1. திருமதி ராதாபாலு அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள
    திருமதி ராதாபாலு அவரளுக்கு இனிய வாழ்த்துகள்..

    சிறப்பான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  3. வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்துவதில் படங்களின்
    பங்களிப்பு. பற்றிய நடுவரின் கருத்துரை ரசிக்கவைத்தது .. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. //எப்படியோ சிரிப்பு என்றால் என்னவென்றே தெரியாத, சிடுசிடு கடுகடு கோபியையும் சிரிக்க வைத்த பெருமை அந்த நகரின் பிரபல ஆஸ்பத்திரிக்கு கிடைத்து விட்டது! அதில் கதாசிரியருக்கும் பங்கு உண்டே!!
    என்னைப்பொறுத்தவரை கதாநாயகன் கோபி தன் கால்வலியையும் பொறுத்துக் கொண்டு, 'விட்டேன் பிழைத்தேன்' என்று வேறு ஆஸ்பத்திரிக்கு ஓடியிருப்பான்!!//

    இரசித்தேன்! பரிசுபெற்ற திருமதி ராதாபாலு அவர்களுக்குப் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  5. என்னை பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  6. என் விமரிசனத்தை மூன்றாம் பரிசுக்கு தேர்ந்தேடுத்ததுடன், நான் எழுதிய விமரிசனவரிகளுக்கு விளக்கம் கொடுத்த அன்பு நடுவருக்கு நன்றி!

    கதைக்கான படத்தை நானும் கவனித்துப் பார்த்தேன். எனினும் பெண்களுக்கு இதுபோன்ற ட்ரீட்மென்ட்டை என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை. அதனாலேயே 'அது ஆண்களுக்கு மட்டுமான ஆஸ்பத்திரி' என்று எழுதினேன்.

    எப்படியோ நடுவரிடமிருந்து விளக்கம் கிடைத்து விட்டது!

    என்னை 'எழுதுங்கோ...எழுதுங்கோ...' என்று சொல்லி உற்சாகமும், ஊக்கமும் கொடுக்கும் ஆசிரியருக்கு மிக மிக நன்றி!!

    பதிலளிநீக்கு
  7. அழகான விமர்சனத்தோடு மூன்றாம் பரிசு பெற்றுள்ள திருமதி ராதா பாலு அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். நடுவர் அவர்களின் குறிப்பும் ரசிக்க வைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  8. http://enmanaoonjalil.blogspot.com/2014/08/blog-post_77.html
    திருமதி ராதாபாலு அவர்கள்.

    இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  9. பரிசுபெற்ற திருமதி ராதா பாலு அவர்களுக்கு வாழ்த்துகள்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  10. மூன்றாம் பரிசுபெற்ற திருமதி ராதா பாலு அவர்களுக்கு வாழ்த்துகள். இவங்க நெறய பரிசு வாங்கீட்டாங்க போல இருக்குதே?

    பதிலளிநீக்கு
  11. பரிசு வென்ற திருமதி ராதாபாலு அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. மூன்றாம் பரிசுபெற்ற திருமதி ராதா பாலு அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. பரிசு வென்ற திருமதி ராதாபாலு அவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. திருமதி ராதாபாலு அவர்களுக்கு வாழ்த்துகள். விமரிசனம் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  15. // அவசரமாக டாக்டரைப் பார்க்க வேண்டும் என்றவனை சட்டை, பனியனை அவிழ்க்கச் சொல்வது வேடிக்கையாக இருந்தாலும், ஏன் அப்படி என்ற கேள்வி கதையை மேலும் படிக்கத் தூண்டுகிறது.

    அந்த மருத்துவமனையில் அதுதான் சட்டம் என்று கொரியர்காரர் சொன்னபோது 'இது ஏதோ பைத்தியக்கார ஆஸ்பத்திரியோ' என் சந்தேகம் ஏற்படுகிறது! // ஹா ஹா..வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு