About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, November 3, 2014

”கீதா விருது” - புதிய விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் ! [ Part-3 of 4 ]


அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

தங்கள் அனைவரின் ஒத்துழைப்பினாலும், உற்சாகமான ஈடுபாடுகளினாலும், நமது சிறுகதை விமர்சனப்போட்டிகள், திட்டமிட்டபடி வெகு அழகாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. 

இந்த மாபெரும் விழா வெகு அமர்க்களமாக நிறைவு பெற்றதில் எனக்கு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

இந்த மகிழ்ச்சியான என் மனநிலையில், புதிதாக மேலும் சில விருதுகளை [பரிசுகளை] அறிமுகப்படுத்தி இந்த மாபெரும் விழாவினை நிறைவுக்குக்கொண்டுவர விரும்புகிறேன்.

புதிதாகவும் கூடுதலாகவும் 

இப்போது அறிமுகப்படுத்தும் நான்கு விதமான

விருதுகளின் மொத்தப் பரிசுத்தொகை :

ரூபாய்:



 

முதல் விருதுக்கான அறிவிப்பு பற்றிய 

வெளியீட்டுக்கான ணைப்பு: 

http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html

[ ஜீவீ  + வீஜீ விருது ]

 

இரண்டாம் விருதுக்கான அறிவிப்பு பற்றிய 

வெளியீட்டுக்கான ணைப்பு: 

http://gopu1949.blogspot.in/2014/11/part-2-of-4.html

[ சேஷ் விருது ]

 


மூன்றாம் அறிவிப்பு

கீதமஞ்சரி

  ’கீதா ’ விருது  




இந்த நம் சிறுகதை 
விமர்சனப்போட்டிகளில் 
மிக அதிகமாக 
வெற்றிவாகை சூடி
முதலிடம் வகிக்கும்
*ஆட்டநாயகி*
*விமர்சன வித்தகி*  
கீதமஞ்சரி
திருமதி. கீதா மதிவாணன் 
அவர்களின் சாதனைகளை
கெளரவிக்கும் விதமாக இந்த விருதுக்கு
‘கீதா விருது’
எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

-oOo-




VGK-01 To VGK-40
ஒட்டுமொத்த
வெற்றியாளர்களின்
பட்டியலில் 20% .... அதாவது
  எட்டு முறைகள்  அல்லது
 எட்டு முறைகளுக்கு மேல்
பரிசுகளை வென்றுள்ளவர்களுக்கு 
இந்த விருது வழங்கப்படுகிறது. 


இதற்கான பரிசுத்தொகை: 

முதலிடம்  ரூ. 150 

இரண்டாம் இடம் ரூ. 125 

மூன்றாமிடம் ரூ. 100

நான்காம் இடம் - தலா ரூ. 50
[ ஆறு நபர்களுக்கு ]





இந்த ’கீதா’ விருதினைப் பெற 
தகுதியுடையோர் பட்டியல் இதோ:

 

முதலிடம்
    

’கீதமஞ்சரி’
திருமதி.
 கீதா மதிவாணன்
அவர்கள்

 32 வெற்றிகள் 


 



இரண்டாமிடம்

      

’மணிராஜ்’
திருமதி:
 இராஜராஜேஸ்வரி
அவர்கள்

 28 வெற்றிகள்  

 


மூன்றாமிடம்

  

'காரஞ்சன் (சேஷ்)’ 
 திரு. 
 E.S. சேஷாத்ரி 
அவர்கள்.

 26 வெற்றிகள் 

 




நான்காமிடம்



 
i] திரு. ரவிஜி அவர்கள் 
[மாயவரத்தான் MGR] 

16  வெற்றிகள் 




  

ii] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் 

    [எண்ணங்கள்]   


15 வெற்றிகள்



  

iii] திருமதி. ராதாபாலு அவர்கள் 

[என் மன ஊஞ்சலிலே] 


11  வெற்றிகள்

    

iv] திருநிறைச்செல்வன் 

         அரவிந்த் குமார் அவர்கள்   
        

10  வெற்றிகள் 




  

v] திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 
       [அரட்டை]     


 9 வெற்றிகள்




   

vi] திருமதி. கலையரசி அவர்கள் 
       [ஊஞ்சல்]     


 8 வெற்றிகள்



  


 




மற்றொரு 
’புதிய மற்றும் கூடுதல் விருது ’
பற்றிய அறிவிப்பு 
05.11.2014 புதன்கிழமை காலை வெளியிடப்படும்.

காணத்தவறாதீர்கள் !



என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

44 comments:

  1. யாரையுமே விட்டு வைக்கலை போலிருக்கே. குறைந்த அளவில் பரிசுகளைப் பெற்ற என் போன்றோரைக் கூட இந்த விருதில் சேர்த்தது உங்கள் பெருந்தன்மை. அதுவும், "கீதா விருது" என கீதமஞ்சரியின் பேரில் வழங்கப்படும் இந்த விருதில் ஒரு "கீதா"வான நானும் இடம்பெற்றது மகிழ்ச்சியைத் தருகிறது.

    ReplyDelete
  2. என்னுடன் சேர்ந்து பரிசுகளைப் பெறும் திருமதி கீதமஞ்சரி, ராஜராஜேஸ்வரி, திரு சேஷாத்ரி, திரு ரவிஜி, திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம், திருமதி கலையரசி, திருமதி ராதா பாலு, திரு அர்விந்த் குமார் ஆகியோருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.

    ReplyDelete
  3. சிறுகதை விமர்சனப்போட்டிகளில் மிக அதிகமாக
    வெற்றிவாகை சூடிமுதலிடம் வகிக்கும்*ஆட்டநாயகி*
    *விமர்சன வித்தகி* கீதமஞ்சரி திருமதி. கீதா மதிவாணன்
    அவர்களின் சாதனைகளை கெளரவிக்கும் விதமாக விருதுக்கு
    ‘கீதா விருது’ என்றே பெயர்சூட்டப்பட்ட அருமையான விருது பெற்றவர்களுக்கு அன்பான வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  4. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
    அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக அருமையான விருதுகளைக் கொடுத்து உற்சாகமூட்டும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  5. உண்மையிலேயே பரிசு மழை ! அனைவருக்கும் நல்வாழ்த்துகள் !

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  7. எப்படி இப்படி மிகத் துல்லிதமாக
    சிறப்பாகச் செய்கிறீர்கள் என மலைத்துப்போகிறோம்
    தனியாக ஒரு அலுவலகம் வைத்துச்
    செய்தால் கூட இத்தனை நேர்த்தியாக விடுதல் ஏதும்
    இல்லாமல் செய்தல் அரிதுதான்
    பதிவுலகில் இது ஒரு பிரமிப்பூட்டும் விஷயம்தான்
    ஆவலுடன் தினமும் தொடர்கிறோம்..

    ReplyDelete
  8. விருது பொற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    விருதுகளை திறம்பட அறிவித்து,நடத்தி,வழங்கி,ஊக்கப்படுத்தும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வெற்றி பெற்றிருப்பவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். விருதுகளுக்குப் பெயர் கொடுத்திருப்பது புதுமையான ஐடியா. பாராட்டுகள். புதுசு புதுசா யோசிக்கறீங்க! பாராட்டுகளும், வாழ்த்துகளும்...(இந்த இடத்துல உங்க பதிவுல போட்டிருக்கற அந்த கை தட்டற படத்தைப் போட்டுக் கொள்ளவும்!) :)))

    ReplyDelete
  10. விமர்சன வித்தகி பெயரில் விருது பெறுவதில் பெரு மகிழ்ச்சி! எல்லோருக்கும் அடுத்தடுத்த பரிசுகளால் இன்ப அதிர்ச்சி! என்னுடன் விருதுபெறும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! வாழ்த்திய/வாழ்த்தப்போகும் நல்லிதயங்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  11. 'கீதா விருது' என்ற சிறப்பான விருது ஒன்பது பதிவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது!

    விருது பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  12. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! விரைவில் உங்களை நேரில் சந்திக்க இருக்கிறேன்.

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. வணக்கம்
    ஐயா.
    மிகச்சிறப்பாக போட்டிகள் நடத்தி பலருக்கு விருது வழங்கியுள்ளீர்கள் எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. இதற்கு முன்னர் பதிவர்களின் பெயர்களில் இது போல் யாரும் விருது ஏற்படுத்தியிருப்பார்களா என்பது சந்தேகமே. சேஷ் என்ற பெயரிலும் கீதா என்ற பெயரிலும் விருதுகள் ஏற்படுத்தி அசத்திவிட்டீர்கள்.
    எட்டு பரிசுகள் மட்டுமே வென்ற எனக்கும் விமர்சன வித்தகியின் விருது கிடைத்திருப்பதில் அளவிலா மகிழ்ச்சி. போட்டியில் பங்கு பெற்ற அனைவருமே ஏதாவது ஒரு பரிசு பெற வேண்டும் என்ற உங்கள் எண்ணம் போற்றிப்பாராட்டத்தக்கது. கோபு சார் அவர்களுக்கும் வாழ்த்திப்பாராட்டிய அனைத்து நல்லிதயங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  15. இன்று ‘கீதா விருது’ பெற்றுள்ள திருமதி ஞா. கலையரசி அவர்கள் அதற்கான தன் மகிழ்ச்சியினையும், ஏற்கனவே ’VGK-09 அஞ்சலை’ சிறுகதைக்கு வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த, பரிசுக்குத் தேர்வான தனது விமர்சனத்தையும், இன்று அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://unjal.blogspot.in/2014/11/3.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் கோபு [VGK]
    ooooooooooooooooooooooooooo

    ReplyDelete
  16. விருது இருக்குதானு கேட்கறீங்களோனு நெனச்சேன் ;-)

    ReplyDelete
  17. சாதா விருதுனாலும் பரவாயில்லை .. கீதா விருதாச்சே? சும்மாவா?

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. என் பெயரிலும் விருது வழங்கப்பட்டிருப்பது மிகவும் பெருமையாகவும் மகிழ்வாகவும் உள்ளது. ஜீவி சார் குறிப்பிட்டது போல் எண்ணம், செயலாக்கம், பரிசுத்தொகை அனைத்தும் தங்களுடையதாயிருக்க, விருதின் பெயரில் போட்டியாளர்களை சிறப்பிக்கும் தங்கள் தயாளகுணம் கண்டு வியக்கிறேன்.

    போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பரிசுகள் வழங்கியதோடு போட்டிகளில் பங்கேற்று முடித்த பிறகும் அனைவரையும் சிறப்பிக்கும் வண்ணம் பரிசுகளும் விருதுகளும் வழங்குவது தங்களுடைய பெருந்தன்மையையும் வள்ளன்மையையும் காட்டுவதாகவே உள்ளது.மனம் நிறைந்த நன்றி கோபு சார்.

    இவ்விருதினை என்னோடு பெற்றுக்கொண்ட திருமதி இராஜராஜேஸ்வரி மேடம், திரு. சேஷாத்ரி அவர்கள், திரு. ரவிஜி அவர்கள், திருமதி கீதா மேடம், திருமதி ராதாபாலு மேடம், திரு. அரவிந்த் குமார் அவர்கள், திருமதி இராஜலக்ஷ்மி மேடம், என் அன்புக்குரிய கலையரசி அக்கா அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    அப்பாதுரை சாரின் நகைச்சுவையை ரசித்தேன். :)

    ReplyDelete
  19. விருது பெற்ற எங்கள் அனைவரையும் வாழ்த்திப்பாராட்டிய அனைவருக்கும் அன்பான நன்றி.

    ReplyDelete
  20. ஆட்டநாயகி*
    *விமர்சன வித்தகி*
    கீதமஞ்சரிக்கு வாழ்த்துக்கள். சாதனை அரசிக்கு வாழ்த்துக்கள்.வாழக வளமுடன்.

    கீதா விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  21. வெற்றியாளர்கள் அனைவருக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. எத்தனை சிந்தனை எத்தனை ஒழுங்கமைப்பு. இத்தனையும் செய்வதற்கு உங்களால் மட்டுமே முடியும் பார்த்துப் பார்த்து அனைவரையும் பாராட்டும் உங்கள் பண்புக்கு முதலில் பாராட்டுக்கள். அடுத்து வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள். கீதா விருது நல்ல எண்ணம்.

    ReplyDelete
  23. அசத்தலான பரிசுகள். அருமையான தேர்வுகள். வெற்றியடைந்த யாவருக்கும் என் நல் வாழ்த்துகள். அன்புடன்

    ReplyDelete
  24. எத்தனை எத்தனை பரிசுகள்..... உங்களின் உழைபினைக் கண்டு அசந்து போய் நிற்கிறேன்....

    கீதா விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. ’சேஷ் விருது’ க்கான முதலிடமும் மற்றும் ’கீதா விருது’ க்கான மூன்றாமிடமும் பெற்றுள்ள சாதனையாளர் திரு. E S சேஷாத்ரி அவர்கள், தான் இதுவரை பெற்ற தொடர் வெற்றிகளான VGK-25 TO VGK-40 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து தன் வலைத்தளத்தினில் இன்று தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.

    அதற்கான இணைப்பு:

    http://esseshadri.blogspot.com/2014/11/blog-post.html

    அவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  26. எனக்கும் ஒரு விருது! மிகமிக மகிழ்ச்சியாக இருக்கு கோபு சார்! 'நெல்லுக்கு இறைத்த நீர் சிறிது புல்லுக்கும் பாய்வது போல்' நிறைய பரிசுகள்,விருதுகள் பெற்றவர்களுடன் எனக்கும் ஒரு விருது கிடைத்தது என்னை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. மிக்க நன்றி.

    பரிசு பெற்ற மகிழ்ச்சியை விட விருது பெற்றது வித்யாசமான அனுபவம். மேடை இல்லை...மைக் இல்லை...ஆடியன்ஸ் இல்லை...ஆனாலும் பல கைத்தட்டல்களுடன் விருது வாங்கிய சந்தோஷம் வீட்டில் அமர்ந்து, துளியும் சிரமம் இல்லாமல் பெற்ற மகிழ்ச்சியை என்ன சொல்ல?

    சாதனை செய்தவர்களின் பெயரிலேயே விருதுகளைக் கொடுத்து கௌரவிக்கும் தங்கள் பெருந்தன்மைக்கு பாராட்டுகள் பல. இன்னும் என்னென்ன புதுமைகள் வைத்திருக்கிறீர்கள்?

    முதலிடம் பெற்ற திருமதி கீதா, இரண்டாம் இடம் பெற்ற திருமதி ராஜராஜேஸ்வரி, மூன்றாம் இடம் பெற்ற சேஷ், அடுத்த இடங்களைப் பெற்ற திரு ரவிஜி, திருமதி கீதா சாம்பசிவம்,செல்வன் அரவிந்த், திருமதி ராஜலக்ஷ்மி, திருமதி கலையரசிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    என்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  27. ஒரே கூட்டமாக்கீதே மேட்டர் எதுனாவது'கீதா'ன்னு எட்டிப்பாத்த எனக்கே 'கீதா விருது' குடுத்துக்கீறாரு நம்ப வைகோ வாத்யாரு! விருத கெலிச்சிருக்குற எல்லாத்துக்கும் என்னொட வாழ்த்த சொல்லிக்கிறேன்! இன்னும் எதுனாவது புதுசா கீதான்னு நாளக்கு பாக்கலாம்! வணக்கம் வாத்யாரே! - என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்

    ReplyDelete
  28. ஒரே கூட்டமாக்கீதே மேட்டர் எதுனாவது'கீதா'ன்னு எட்டிப்பாத்த எனக்கே 'கீதா விருது' குடுத்துக்கீறாரு நம்ப வைகோ வாத்யாரு! விருத கெலிச்சிருக்குற எல்லாத்துக்கும் என்னொட வாழ்த்த சொல்லிக்கிறேன்! இன்னும் எதுனாவது புதுசா கீதான்னு நாளக்கு பாக்கலாம்! வணக்கம் வாத்யாரே! - என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்

    ReplyDelete
  29. 'கீதா விருது’ பெற்றுள்ள நம் அன்புக்குரிய திருமதி. ராதாபாலு அவர்கள், அவர்களின் மகிழ்ச்சியினை தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாகப் பகிர்ந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அதற்கான இணைப்பு:

    http://enmanaoonjalil.blogspot.com/2014/11/blog-post.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    தன் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்து மகிழ்ந்து / மகிழ்வித்துள்ள, நம் அன்புக்குரிய ராதாபாலு அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  30. வெற்றி விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சிக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ளோர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அடுத்தடுத்த, இந்த வெற்றிவிழா நிகழ்ச்சிகள் வெளியீட்டு வேலைகளிலும், அதையடுத்து உடனடியாக வரவிருக்கும் என் வெளிநாட்டுச்சுற்றுலா வேலைகளிலுமான பல்வேறு ஆயத்தப்பணிகளில் மூழ்க வேண்டியிருப்பதால், அன்புடன் வருகை தந்துள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் அளித்து கெளரவிக்க மனதில் நான் நினைத்தும்கூட அது PRACTICALLY NOT POSSIBLE ஆகவே உள்ளது.

    இது உங்கள் வீட்டு விழா என்பதையும், நம் வீட்டு விழா என்பதையும் யாரும் தயவுசெய்து மறக்காதீங்கோ. நமக்குள் FORMALITIES எல்லாம் எதற்கு?

    தினமும் வருகை தந்து, மனம் திறந்துபேசி, கருத்துக்கள் அளித்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அனைவரையும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள் கோபு [VGK]

    ReplyDelete
  31. பரிசுமழையில் நனைந்த அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

    தங்களின் உழைப்பு மிகவும் பாராட்டுதலுக்குரியது சார்.

    ReplyDelete
  32. மாயவரத்தான் MGR என்கிற திரு. ரவிஜி அவர்கள் தான் பெற்றுள்ள இந்த விருதினைப்பற்றி தன் பதிவினில் சிறப்பித்து எழுதியுள்ளார்கள்.

    அதற்கான இணைப்பு:

    http://mayavarathanmgr.blogspot.in/2014/11/blog-post.html

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திரு. ரவிஜி அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    என்றும் அன்புடன் VGK

    ReplyDelete
  33. பரிசு மழை அல்ல, சூறாவளி அடிக்கிறது.

    ReplyDelete
  34. இன்னும் என்ன மாதிரில்லாம் வித்தியாசமான பரிசுகளை அறிவிக்க போறீங்க

    ReplyDelete
  35. கோடி, கோடியா பணம் வெச்சு இருக்கறவனுக்குக் கூட இப்படி பரிசு கொடுக்க மனசு வராது.

    கோபு அண்ணா

    நீங்கள் இன்னும் பல வருடங்கள் வாழ்வாங்கு வாழ்ந்து, இன்னும் பல கதைகள் எழுதி பல போட்டிகள் நடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  36. புதிய புதிய பரிசா கெலிச்சவங்க அல்லாவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  37. புதிய புதிய பரிசா கெலிச்சவங்க அல்லாவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  38. புதிய பரிசுகளை வென்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  39. விமர்சன வித்தகி பெயரில் விருது பெறுவதில் பெரு மகிழ்ச்சி! எல்லோருக்கும் அடுத்தடுத்த பரிசுகளால் இன்ப அதிர்ச்சி! என்னுடன் விருதுபெறும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! வாழ்த்திய/வாழ்த்தப்போகும் நல்லிதயங்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. December 20, 2015 at 2:31 PM

      //விமர்சன வித்தகி பெயரில் விருது பெறுவதில் பெரு மகிழ்ச்சி! எல்லோருக்கும் அடுத்தடுத்த பரிசுகளால் இன்ப அதிர்ச்சி!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      Delete
  40. 'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html

    தலைப்பு: ’இன்று போல் என்றும்’

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  41. அன்புடையீர்,

    அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளையார் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.

    ‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் நேற்று ‘பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி?’ என ஓர் சமையல் குறிப்புக்கான மிகச்சிறிய மூன்று நிமிடம் + 45 வினாடிகளுக்கான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைக் கண்டு மகிழ இதோ ஓர் இணைப்பு:

    https://www.youtube.com/watch?v=t6va0K3KDtc&feature=youtu.be

    மேற்படி வீடியோவில் 0:55 முதல் 1:25 வரை சுமார் 30 வினாடிகள் மட்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றியும், அதன் அடிவாரத்தில் வசித்துவரும் அடியேனைப்பற்றியும் ஏதேதோ புகழ்ந்து சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில், 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் கலந்து கொண்டு ஒன்பது முறைகள் (4 முதலிடம், 4 இரண்டாம் இடம், ஒரு மூன்றாம் இடம்) வெவ்வேறு பரிசுகளையும், கீதா விருதும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டிகளில் முதன் முறையாக, முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெண் பதிவர் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு சில இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html

    http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html

    http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/09/vgk-34-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html

    http://gopu1949.blogspot.com/2014/10/4.html

    http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete