About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, March 20, 2015

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-4


 




பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. 

இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம்  மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.

பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. 

என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக  இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். 

எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........

10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%
அதாவது 22 பதிவுகள் மட்டுமே.

11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30% 
அதாவது 220 பதிவுகள்.

41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50% 
அதாவது 367 பதிவுகள்.

50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 17%
அதாவது 126 பதிவுகள். 

பின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது. 

1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை

2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை

3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை

4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை

5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்

என பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும்  சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, சேமித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.




 பட்டியல் எண்: 1 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/1.html
 பட்டியல் எண்: 2 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/2.html
பட்டியல் எண்: 3 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/3.html

பின்னூட்ட எண்ணிக்கைகளில்
பின்னிப்பெடலெடுத்துள்ள என் பதிவுகளைப் பற்றி
இங்கு தினமும் பட்டியலிட விரும்புகிறேன்.

பட்டியல் எண்: 4 
பின்னூட்ட எண்ணிக்கைகள் 
91 முதல் 100 வரை



TOTAL NUMBER OF COMMENTS : 92



http://gopu1949.blogspot.in/2013/10/58.html
உபவாஸம் [பட்டினி கிடத்தல்]

TOTAL NUMBER OF COMMENTS : 93




http://gopu1949.blogspot.in/2012/07/blog-post.html
அலைகள் ஓய்வதில்லை ... விருது-8



TOTAL NUMBER OF COMMENTS : 95




http://gopu1949.blogspot.in/2011/12/5-of-5.html
தேடி வந்த தேவதை - இறுதிப்பகுதி 5 / 5



TOTAL NUMBER OF COMMENTS : 96 Each




http://gopu1949.blogspot.in/2011/07/6.html
மலரும் நினைவுகள் .. 

கலைகளிலே அவள் ஓவியம் !


http://gopu1949.blogspot.in/2012/06/blog-post.html
உலகின் விசித்திர விமானங்கள் ... விருது-6



TOTAL NUMBER OF COMMENTS : 98




http://gopu1949.blogspot.in/2012/06/awesome-blogger-award.html
மேலும் ஓர் புதிய விருது-7  AWESOME BLOGGER AWARD



TOTAL NUMBER OF COMMENTS : 100




http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html

HAPPY இன்று முதல் HAPPY !





அவ்வப்போது என் பதிவுகளுக்கு அருமையாகவும், திறமையாகவும், வித்யாசமாகவும் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளவர்களில், என்றும் என் நினைவினில் பசுமையாக நிற்கும் சில அன்புள்ளங்கள் :

FIRST CIRCLE - GENTS: 60

திருவாளர்கள்:

’பூ வனம்’ ஜீவி ஐயா அவர்கள்
’கைகள் அள்ளிய நீர்’ சுந்தர்ஜி அவர்கள்
அன்பின் சீனா ஐயா அவர்கள்
ரிஷபன் அவர்கள்
’தீதும் நன்றும் பிறர்தர வாரா’ S. ரமணி ஐயா அவர்கள்
’எனது எண்ணங்கள்’ தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்
’ஆரண்ய நிவாஸ்’ ராமமூர்த்தி அவர்கள்
’மூன்றாம் சுழி’ அப்பாதுரை அவர்கள்
ரவிஜி [மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.] அவர்கள்
D. சந்திரமெளலி அவர்கள்

United Smart Skills VENKAT அவர்கள்
வெங்கட் நாகராஜ் அவர்கள்
பட்டாபிராம அண்ணா அவர்கள்
T. அனந்தசயனம் அவர்கள்
J. அரவிந்த்குமார் அவர்கள்
ஸ்ரீநிவாஸன் ராமகிருஷ்ணன் அவர்கள்
Dr. ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அவர்கள்
நாகராஜன் நாராயணன் அவர்கள்
சுந்தரேசன் கங்காதரன் அவர்கள்
G. கணேஷ் அவர்கள்

G. சந்தானம் அவர்கள்
G. ராமபிரஸாத் அவர்கள்
G. ஸ்ரீதர் அவர்கள்
துரை செல்வராஜ் ஐயா அவர்கள்
கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
வாஸன் அவர்கள்
மகேந்திரன் அவர்கள்
மதுமதி அவர்கள்
மணக்கால் அவர்கள்
முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள்

கே.பி. ஜனா அவர்கள்
அ. முஹமது நிஜாமுத்தீன் அவர்கள்
A.R. ராஜகோபாலன் அவர்கள்
E.S. சேஷாத்ரி அவர்கள் 
’அவர்கள் உண்மைகள்’ அவர்கள்
சென்னை பித்தன் ஐயா அவர்கள்
ஹரணி ஐயா அவர்கள்

புலவர் சா. இராமாநுசம் ஐயா அவர்கள்

கலாநேசன் அவர்கள்
ஸ்ரீராம் அவர்கள்

K.G. கெளதமன் அவர்கள்
திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
சேட்டைக்காரன் வேணு அவர்கள்
வேடந்தாங்கல் கருன் அவர்கள்
எல். கே. [கார்த்திக்] அவர்கள்
RVS அவர்கள்
மோகன்ஜி அவர்கள்
பரிவை சே. குமார் அவர்கள்
ரியாஸ் அஹமது அவர்கள்
முனைவர் இரா. குணசீலன் அவர்கள்

தளிர் S. சுரேஷ் அவர்கள்
களம்பூர் பெருமாள் செட்டியார் அவர்கள்
துளஸிதரன் V. தில்லையக்காது அவர்கள்
அஜீம்பாஷா அவர்கள்
Dr. B. ஜம்புலிங்கம் ஐயா அவர்கள்
அட்வகேட் P.R. ஜெயராஜன் அவர்கள்
சொக்கன் சுப்ரமணியன் அவர்கள்
சிட்டுக்குருவி  விமலன் அவர்கள்
பால கணேஷ் அவர்கள்
GMB ஐயா அவர்கள்

இந்த FIRST CIRCLE நண்பர்களில் வேறுசிலரின் பெயர்களை நான் ஏதோ ஒரு அவசரத்திலோ அல்லது மறதியிலோ இங்கு குறிப்பிடாமல் விட்டிருக்கலாம். 

அவர்கள் என்னை தயவுசெய்து மன்னிப்பார்களாக !

-=-=-=-=-=-=-

SECOND CIRCLE நண்பர்கள் என்றதோர் பட்டியலும் ஆங்காங்கே என் பதிவுகளிலிருந்து RANDOM ஆக எடுத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது. அது பிறகு ஒரு நாள் வெளியிடப்படும்.

நாளைய தினம் இதேபோல FIRST CIRCLE பெண் பதிவர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்கு இன்று இடம்பெற்றுள்ள பதிவுலக நண்பர்கள் + நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

-=-=-=-=-=-=-


 

தொடரும்



என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]

44 comments:

  1. ஆவ்வ்வ் தற்செயலாக இன்று புளொக் பக்கம் வந்தேன்.. இப்பதிவு கண்ணில் பட்டது இல்லையெனில் மிஸ் பண்ணியிருப்பேன்

    ReplyDelete
    Replies
    1. athira March 20, 2015 at 3:43 PM

      அன்புள்ள அதிரா,

      வாங்கோ, வணக்கம்.

      //ஆவ்வ்வ் தற்செயலாக இன்று புளொக் பக்கம் வந்தேன்.. இப்பதிவு கண்ணில் பட்டது இல்லையெனில் மிஸ் பண்ணியிருப்பேன்//

      நீங்க நிறையவே மிஸ் பண்ணிட்டீங்கோ :)

      இந்தத்தொடரின் பகுதி-1 இல் உங்களைப்பற்றிய சிறப்புச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. :)))))

      http://gopu1949.blogspot.in/2015/03/1.html

      இது ஒரு தகவலுக்காக மட்டுமே.

      [குழந்தைகள் இருவரும் நலம் தானே ?]

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
  2. என்னமாதிரி பின்னிப் பிரித்து கணக்குப் போட்டு வகைப்படுத்துறீங்க... நினைத்துப் பார்க்கவே முடியல்ல கோபு அண்ணன்.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து இதே உற்சாகத்தோடு எழுதுங்கோ... நான் தொடர்ந்து வராவிட்டாலும் அப்பப்ப வருகிறேன்ன்.

    ReplyDelete
  3. அருமை.. வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  4. உங்கள் பதிவுகளின் பின்னுட்டங்களைப் பிரித்துத் தொகுத்து அசத்துகிறீர்கள் கோபு சார். தொடருங்கள்....
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் வரிசையில் – முதல் வட்டத்தின் (ஆண்கள் 60) பட்டியலில் எனது பெயரும் இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி

    ReplyDelete
  6. உங்கள் நினைவினில் பசுமையாக நிற்கும் சில அன்புள்ளங்கள் வாழ்க!
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    பின்னூட்டங்கள் கொடுப்பவர்களை சிறப்பிக்கும் உங்கள் அன்பு உள்ளம் வாழ்க!

    ReplyDelete
  7. ஒரு ஆய்வே நடத்தி விட்டீர்கள் ஐயா !
    தொடரட்டும்

    ReplyDelete
  8. மிகவும் மகிழ்ச்சி ஐயா... அனைவருக்கும் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  9. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  10. yathavan nambi March 21, 2015 at 8:02 AM

    //அன்பின் அருந்தகையீர்! வணக்கம்!//

    வாங்கோ வணக்கம்.

    //இன்றைய... வலைச் சரத்திற்கு, தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது! வருக! வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/ கருத்தினை தருக!

    நட்புடன், புதுவை வேலு//

    தங்களின் அன்பான வருகைக்கும் தங்கமான தகவலுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  11. அடேங்கப்பா !

    உங்களுக்கு மனதுக்குப் பிடித்தாற்போல பின்னூட்டமிடும் FIRST CIRCLE ஆண்கள் அணியிலேயே அறுபது பேர்கள் இருக்கிறார்கள் என்றால் ..............

    நாளை வெளியிடுவதாகச் சொல்லும் பெண்கள் அணியில் இன்னும் எவ்வளவு பேர்கள் இருப்பார்களோ !

    ஜாமாயுங்கள் சார் ....... வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. வை.கோ சார்! உங்க லிஸ்ட்ல நானும் இருப்பது குறித்து மகிழ்ச்சி. நானும் என் பழைய பதிவுகளை அண்மையில் பார்த்துக் கொண்டிருந்த போது உங்களுடிய கிண்டலும் நகைச்சுவையும் இழையோடும் பின்னூட்டங்களை கண்ணுற்றேன். வலைக்கு உங்கள் பங்களிப்பு பாராட்டத் தக்கது. வானவில்லுக்கு மீண்டும் நீங்கள் வரலாம். அன்பு.

    ReplyDelete
  13. ஆஹா! சார் எங்களையும் தாங்கள் இந்த லிஸ்டில் குறிப்பிட்டுச் சிறப்புச் செய்தமைக்கு மிக்க மிக்க நன்றி! நாங்கள் முதலில் பெண்கள் லிஸ்டைத்தான் பார்க்க நேர்ந்தது. அப்படியே பழைய இடுகைக்கு வந்தால் அதில் ஆண்கள் லிஸ்ட். பார்த்தால் எங்கள் தளமும்.....மிக மிக மகிழ்ச்சி.....இன்னும் பல பதிவுகள் நீங்கள் எழுத வேண்டும் சார்! நன்றி நன்றி!

    ReplyDelete
  14. நீங்கள் ஓவியம் வரைவதிலும் கை தேர்ந்தவர் என்பது கலைகளிலே அவள் ஓவியம் பதிவைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். ரூபாய் நோட்டுக்களில் கைவேலை, கேலிச்சித்திரங்கள், . ஆஞ்சந்நேயர் ப்டம் எல்லாமே அசத்தல். எனக்கும் சிறுவயதில் ஓவியம் வரைய மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டில் அனைவருமே சிறுவயதில் கிட்டப்பார்வை காரணமாகக் கண்ணாடி அணிய வேண்டி வந்ததால் படிப்பைத் தவிர வேறு எதுவும் எதுவும் செய்யக் கூடாது என்பது அப்பாவின் கண்டிப்பான உத்தரவு. ஓவியம் வரைந்தால் கண்ணுக்குக் கூடுதல் வேலை, பவர் இன்னும் அதிகமாகுமோ என்ற கவலை அப்பாவுக்கு. இப்போதும் கூட ஓவியம் பெயிண்டிங் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஓவியம் வரையக் கற்றுக்கொள்ளாமலே இவ்வளவு அழகாக வரைந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள் கோபு சார்! உங்கள் பன்முகத் திறமை வியக்க வைக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. Kalayarassy G March 21, 2015 at 7:56 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நீங்கள் ஓவியம் வரைவதிலும் கை தேர்ந்தவர் என்பது கலைகளிலே அவள் ஓவியம் பதிவைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். ரூபாய் நோட்டுக்களில் கைவேலை, கேலிச்சித்திரங்கள், . ஆஞ்சநேயர் படம் எல்லாமே அசத்தல்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //எனக்கும் சிறுவயதில் ஓவியம் வரைய மிகவும் பிடிக்கும். இப்போதும் கூட ஓவியம் பெயிண்டிங் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.//

      இவற்றையெல்லாம் கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      //ஓவியம் வரையக் கற்றுக்கொள்ளாமலே இவ்வளவு அழகாக வரைந்திருக்கிறீர்கள்.//

      இளமையில் வறுமையால், ஆசையிருந்தும் எதையும் முறையாக என்னால் கற்றுக்கொள்ள முடியாமல் போனது.

      // பாராட்டுக்கள் கோபு சார்! உங்கள் பன்முகத் திறமை வியக்க வைக்கிறது!//

      தங்களின் பாராட்டுக்களுக்கும், விரிவான [இருப்பினும் விரிவஞ்சி :) சற்றே சுருக்கமான] பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      Delete
    2. Kalayarassy G March 21, 2015 at 7:56 PM

      //ஓவியம் வரைந்தால் கண்ணுக்குக் கூடுதல் வேலை, பவர் இன்னும் அதிகமாகுமோ என்ற கவலை அப்பாவுக்கு.//

      ஒரு பொறுப்புள்ள அப்பா ஸ்தானத்தில் அவரின் அன்றையக் கவலையும் மிகவும் நியாயமானது தான்.

      Delete
  15. இப்படி ஒரு நினைவு கூறல்... எல்லாவற்றையும் பொறுமையாக எடுத்து.. தொடுத்து... அருமை ஐயா...
    உங்கள் அன்பில் எனக்கும் ஓர் இடம்...
    நன்றி...

    ReplyDelete
  16. பின்னூட்டம் தொடர்பான இத்தொடரை ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலே இணைப்பாக, சில அன்புள்ளங்கள்
    'முதல் சுற்று' என்ற பகுதியில் எனக்கும் இனிமையான ஓரிடம் கொடுத்துள்ளீர்கள். தங்கள் அன்பிலே தொபுக்கடீர் என விழுந்து நனைந்துவிட்டேன் சார்!
    மறக்க மனம் கூடுதில்லையே!!
    தங்களுக்கு என் அன்பின் நன்றி!!!

    ReplyDelete
  17. இந்தப் பதிவைப் பார்த்தேன். ஏன் கருத்துத் தெரிவிக்காமல் போனேன் என்று புரியவில்லை. என் பெயரையும் உங்கள் அபிமானப் பட்டியலில் சேர்த்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  18. முதல் சுற்றில் டாப் டென்னில் வந்திருப்பது
    மகிழ்வளிக்கிறது.

    அனைத்துப் பதிவுகளையும் முன்போல முழுமையாகப்
    படித்துவிட்டாலும் அதிகமாக பின்னூட்டமிடமுடியாத சூழல்

    எனக்கு பதிவுலகில் கிடைத்த அங்கீகாரமே என் எழுத்தை விட
    நான் முழுமையாகப் படித்து முடிந்தவரை அனைவருக்கும்
    பின்னூட்டமிட்டதே

    தங்கள் இந்தத் தொடர் மீண்டும் அப்பணியைத் தொடர
    எனக்கு உற்சாகமளித்துப் போகிறது

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. first circle il ennavar iruppathu kurithu mikka makizhchi sir. avar 2 weeks north east tour il irukkiraar...:)

    ReplyDelete
  20. ஆ! என் பெயரும் இதில் இடம் பெற்றிருப்பது ஒரு இன்ப அதிர்ச்சி. லிஸ்ட்டில் இடம் பெறுமளவு நல்ல பின்னூட்டங்கள் நான் உங்கள் பதிவுகளுக்கு இட்டுள்ளேனா என்ற சந்தேகம் எனக்கு நீங்கள் இந்தத் தொடரைத் தொடங்கும்போது வந்தது. உங்கள் அன்பினால் என் பெயரும் பட்டியலில். நன்றி. நன்றி .

    ReplyDelete
  21. எத்தனைப்பேருடைய பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறீர்கள்...பெருமைக்குரிய விஷயம். நல்ல தரமான எழுத்தும் நட்புறவுடன் பழகும் தங்கள் குணமும் தன்மையும்தான் அனைத்துக்கும் காரணம். மனமார்ந்த வாழ்த்துகள் கோபு சார்.

    ReplyDelete
  22. கமென்ட் போகலைனு நினைக்கிறேன். பொறுமையாக அனைவரின் பெயர்களையும் நினைவு கூர்ந்து அவற்றை வரிசைப் படுத்திய உங்களுக்கு என் வாழ்த்துகள். இங்கு இடம் பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  23. வணக்கம் ஐயா, பெயரை வெளியிட்டு சிறப்பித்ததுடன் மெயில் செய்து நினைவூட்டியமைக்கும் நன்றி! வேலைப்பளு காரணமாக சில நாட்களாக இணையம் வரவில்லை! இன்று வந்து வாசித்து மகிழ்ந்தேன்! தொடரட்டும் உங்களின் இந்த ஊக்கமூட்டும் பணி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. அன்பின் அருமை நணபர் திரு வை.கோ அவர்களே !

    என் பெயர்முதல் பட்டியலிலேயே மூன்றாவதாக வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியினைத் தருகிறது. தங்களீன் சிரமம் பாராத பணி பாராட்டுக்குரியது. அனைவரின் பெயர்களையும் வெளியிட்டு பாராட்டூவது புல்லரிக்க வைக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  25. அன்பின் அருமை நணபர் திரு வை.கோ அவர்களே !

    என் பெயர்முதல் பட்டியலிலேயே மூன்றாவதாக வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியினைத் தருகிறது. தங்களீன் சிரமம் பாராத பணி பாராட்டுக்குரியது. அனைவரின் பெயர்களையும் வெளியிட்டு பாராட்டூவது புல்லரிக்க வைக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  26. :) இந்தப்பகுதிக்கு வருகை தந்து கருத்தளித்துள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். :)

    ReplyDelete
  27. அன்பின் அருமை நணபர் திரு வை.கோ அவர்களே !

    என் பெயர்முதல் பட்டியலிலேயே மூன்றாவதாக வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியினைத் தருகிறது. தங்களீன் சிரமம் பாராத பணி பாராட்டுக்குரியது. அனைவரின் பெயர்களையும் வெளியிட்டு பாராட்டூவது புல்லரிக்க வைக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  28. cheena (சீனா) April 11, 2015 at 7:06 AM

    அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வாங்கோ, வணக்கம்.

    //அன்பின் அருமை நண்பர் திரு வை.கோ அவர்களே !
    என் பெயர்முதல் பட்டியலிலேயே மூன்றாவதாக வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியினைத் தருகிறது. தங்களின் சிரமம் பாராத பணி பாராட்டுக்குரியது. அனைவரின் பெயர்களையும் வெளியிட்டு பாராட்டுவது புல்லரிக்க வைக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    ஒரே பதிவுக்கு இதுபோல மூன்று பின்னூட்டங்களை ஒரே மாதிரியாக ஒரே நேரத்தில் அளிப்பதற்கு பதிலாக, ஜனவரி 2011 முதல் என்னால் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளில் தினமும் 3 அல்லது 4 பதிவுகள் என தேர்ந்தெடுத்துக்கொண்டு, வரிசையாக வருகை தந்து, ஒரே ஒருமுறை பின்னூட்டம் அளித்தீர்களானால், மிகச்சுலபமாக அடுத்த 4-5 மாதங்களுக்குள், என் அனைத்துப்பதிவுகளிலும் தங்களின் பின்னூட்டங்கள் இடம்பெற்று தாங்கள், பரிசினை சுலபமாக வெல்ல இயலும்.

    பரிசுபற்றிய அறிவிப்பு இதோ இந்தப்பதிவினில் உள்ளது:

    http://gopu1949.blogspot.in/2015/03/120404.html

    போட்டியில் வெற்றி வாகை சூட என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  29. தங்களது பதிவுகளை (இப்பதிவு உட்பட) அவ்வப்போது பார்த்து வருகிறேன். நேரமிருக்கும்போது கருத்தினை இட்டுவருகிறேன். உங்களது பதிவுகளைப் பார்க்கும்போது தாங்கள் ஈடுபாட்டோடு மேற்கொள்ளும் பலதரப்பட்ட முயற்சிகளைக் கண்டு வியக்கிறேன். புகைப்படங்களைத் தெரிவு செய்து அமைத்தல், தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தல், நல்ல எழுத்துருக்களைப் பயன்படுத்துதல், அழகான சொல்லாட்சி, நண்பர்களை நினைவுகூர்ந்து பாராட்டும் பாங்கு, போட்டிகளை அமைக்கும்போது தாங்கள் தரும் உத்வேகம் என்ற பல நிலைகளில் தங்களின் பணி போற்றத்தக்கவகையில் உள்ளது. தங்களது எழுத்துப்பணி தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Dr B Jambulingam April 19, 2015 at 8:44 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம். தங்களின் அபூர்வ வருகைக்கு என் முதற்கண் நன்றிகள்.

      //தங்களது பதிவுகளை (இப்பதிவு உட்பட) அவ்வப்போது பார்த்து வருகிறேன். நேரமிருக்கும்போது கருத்தினை இட்டுவருகிறேன்.//

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

      //உங்களது பதிவுகளைப் பார்க்கும்போது தாங்கள் ஈடுபாட்டோடு மேற்கொள்ளும் பலதரப்பட்ட முயற்சிகளைக் கண்டு வியக்கிறேன். புகைப்படங்களைத் தெரிவு செய்து அமைத்தல், தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தல், நல்ல எழுத்துருக்களைப் பயன்படுத்துதல், அழகான சொல்லாட்சி, நண்பர்களை நினைவுகூர்ந்து பாராட்டும் பாங்கு, போட்டிகளை அமைக்கும்போது தாங்கள் தரும் உத்வேகம் என்ற பல நிலைகளில் தங்களின் பணி போற்றத்தக்கவகையில் உள்ளது. தங்களது எழுத்துப்பணி தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், உற்சாகம் அளிக்கும் ஆழமான ஆத்மார்த்தமான பல்வேறு கருத்துகளுக்கும், மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      Delete
  30. பினுனூட்டமிட்டவர்களுக்கு அவர்கள் பெயர் இடம் பெற்றிருப்பதில்தான் எவ்வளவு சந்தோஷம்

    ReplyDelete
  31. மலரும் நினைவுகள் ..
    மலர்ந்த அருமையான பூந்தோட்டமாய் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 9:07 PM

      //மலரும் நினைவுகள் ..
      மலர்ந்த அருமையான பூந்தோட்டமாய் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..//

      தங்களின் அன்பான வருகைக்கும், மலரும் நினைவுகளாகப் பாராட்டி மகிழ்வித்துள்ளதற்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      Delete
  32. இன்னும் உங்கள் சாதனைகள் உங்கள் வலைத் தளத்தில் தொடர மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    காலையில் எழுந்ததும் பல் துலக்குவது போல் உன்கள் வலைத் தளத்திற்கு வருகை தந்தே ஆக வேண்டும்.

    என் தேடலுக்கு இங்கேதானே விடை கிடைக்கிறது.

    ReplyDelete
  33. கமண்டு போட்டுகிட்டவங்களயும் இப்பூடில்லா பெரும படுத்துறீங்களே. இதெல்லா இதுவர எந்த பதிவரும் யோசிச்சி கூட பாக்கத வெசயங்கதா.

    ReplyDelete
  34. பதிவுலக வரலாறில் கமண்ட் போட்டவர்களையும் ஒருவரைக்கூட விடாமல் நன்றி கூறி பெருமைப் படுத்தியிருப்பது நீங்கள் மட்டும்தான். இது மஹா பெரிய இமாலய சாதனைதான்.

    ReplyDelete
  35. கிராஃப் ஏறிக்கிட்டே போகுது..லிஸ்ட்ல நானும்-கூட இருக்கேன். ஹா ஹா!!

    ReplyDelete
  36. என் பெயர் பட்டியலில் இடம்பெற்றது மகிழ்வளிக்கிறது! நன்றி ஐயா!

    ReplyDelete
  37. //இளமையில் வறுமையால், ஆசையிருந்தும் எதையும் முறையாக என்னால் கற்றுக்கொள்ள முடியாமல் போனது.
    //
    பன்முகக்கலைஞனை மெருகேற்றி உருவாக்கியது உங்களுடன் வளமாக வாழ்ந்த வறுமை!

    ReplyDelete