என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 1 அக்டோபர், 2013

58] உபவாஸம் [பட்டினி கிடத்தல்]

2
ஸ்ரீராமஜயம்


 
ப்ருஹதாரண்யத்தில் பட்டினி இருந்து விரதம் இருப்பதைச் சொல்லியிருக்கிறது. ஆத்மாவை அடைவதற்கு, அத்யயனம், யக்ஞம், தானம், தபஸ், உபவாஸம் போன்றவற்றை அனுஷ்டிக்க் வேண்டும் என்பதாக வருகிறது. 

’அநாஸகேந’ என்று உபவாசத்தை சொல்லியிருக்கிறது. அங்கே அஸனம் என்றால் சாப்பாடு. ‘ஆஸ’ என்றால் சாப்பிடுவது.  ’அநாஸகேந’  என்றால் சாப்பிடாமல் இருப்பது. 

சாப்பிடாமல் உபவாசம் இருப்பதால் ஆத்மாவை அடைய முயலுகிறார்கள் என்று இந்த உபநிஷத் சொல்கிறது.

இதற்கு ஆச்சார்யாள் [ஆதி சங்கரர்] ரொம்பவும் ஃபிலாஸபிகலாக பாஷ்யம் செய்திருக்கிறார்.  

சாப்பாடு இல்லாமல் இருப்பது என்பது போஜன நிவ்ருத்தி என்று அர்த்தம் இல்லை. வெறுமனே போஜனத்தை விட்டால் பிராணந்தான் போகுமே தவிர, ஆத்மஞானம் வந்து விடாது. 

அதனால் இங்கே அஸானம் என்று கூறியிருப்பது, ஆசையது போகங்களைத்தான். காம நுகர்ச்சியை விடுமாறே இந்த மந்திரம் சொல்கிறது என்று பாஷ்யம் செய்திருக்கிறார். 

ஆனால் இதுமாதிரி ஆசை அற்றுப்போக பட்டினி கிடந்து உபவாஸம் இருப்பது உதவத்தான் செய்கிறது. அதுவும் ஆச்சார்யாளுக்குத் தெரியாதது அல்ல. 

நம்முடைய பூஜா பத்ததிகள், கோயில், குளம், உத்ஸவம், பண்டிகை விரதம், எல்லாவற்றிற்குமே புனர்ஜீவன் தந்தவர், ஏகாதஸி விரதத்தை அவசியமில்லாதது எனச்சொல்லவே மாட்டார். அவர் இங்கே சொல்வது என்னவென்றால், ஏகாதஸி மாதிரி பக்ஷத்திற்கு ஒருநாள் சுத்தப்பட்டினி போடுவதை அல்ல.

இனிமேல் சாப்பிடுவதே இல்லை என்று உண்ணாவிரதம் இருந்து ஸாதனை பண்ணுவதையே தவறு என்று சொல்கிறார். 

அந்த மாதிரி உடலைச் சித்திரவதை செய்வதால், அந்த வதையை நினைத்தும், அதனை ஸமாளிப்பதிலும், மனஸ் போகுமே தவிர, ஸாதனா லக்ஷ்யத்தில் ஈடுபாடு நிற்காது.

இம்மாதிரி தன்னைத்தானே  குரூரமாக வருத்திக்கொள்கிற வழிகளை ஆசார்யாள் ஒப்புக்கொள்ளாததால்தான் இப்படிச்சொல்கிறார்.  

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவும் எக்ஸ்ட்ரீம்களை வேண்டாம் என்றுதான் சொல்கிறார். 

கீதை 6.16-17 இல் சொல்லப்பட்டிருப்பது:  பெருந்தீனி திங்கிறவனுக்கும் யோகம் வராது. ஒரேயடியாக பட்டினி கிடைக்கிறவனுக்கும் யோகம் வராது. யுக்தமான அளவு மிதமாக சாப்பிடறவனுக்கே யோகம் ஸித்தித்து துக்கத்தைப்போக்கும் என்கிறார்.

ரொம்பவும் தீவிரமாகவும் உபவாஸாதிகளை அனுஷ்டித்தால், எல்லாம் சிதறிப் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும். 

அதனால் படிப்படியாகப் போக வேண்டும் என்பதே நம் ஆசார்யாள், கீதாசார்யனான பகவான் ஆகியோரது அபிப்ராயம். அவர்கள் சொன்னதால் இதனை அழுத்திச் சொல்லும்படியாகியிருக்கிறது.  

”மருந்தென வேண்டாவாக் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்று திருவள்ளுவர் கூறியுள்ளதில், ”வயிற்றில் ஏற்கனவே போட்டது ஜீரணமாகிவிட்டதா என்று தெரிந்த பின்னர் உண்பது ஆரோக்யம்” என்று தெரிகிறது.

காந்தியும் ஆத்ம சுத்திக்காகவே தாம் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். உண்ணாவிரத ஸமயத்தில் தமக்கு புத்தியில் தெளிவு ஏற்பட்டதாகவும், மனஸில் சுத்தி உண்டானதாகவும் சொல்லியிருக்கிறார். 

இப்படியாக உடல் நலத்தோடு, உயிர் நலத்தையும், இம்மையோடு, மறுமையையும், சேர்த்து ஆன்றோர்கள் உபவாஸ  விதிகளைத் தந்திருக்கிறார்கள். முதலில் கஷ்டமாக இருந்தாலும், அப்யாஸத்தால் சமாளித்து விடலாம்.

பக்தி பலத்தோடு, சங்கல்ப பலத்தோடு ஆரம்பித்தால், அதிலே தெரிகிற நல்ல பலனைப் பார்த்தே, நாளுக்கு நாள் உபவாஸ நியமத்தில் ஈடுபாடு வலுக்கும்.

கரும்பைக் கசக்கி கிலேசப்படுத்துவதாலேயே கருப்பஞ்சாற்றை எடுத்து பானம் பண்ணுகிற இன்பம் கிடைக்கிறது. 

இதேபோல் உடம்பைக் கிலேசப் படுத்துவதால்தான் உள்ளத்துக்கு ஸுக ரஸம் கிடைக்கிறது.

oooooOooooo

யானை நாய் போன்ற விலங்குகளுக்கும்  
ஸ்ரீ பெரியவாளிடம் பக்தி உண்டு.


காஞ்சிப்பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக்குப்பம் மடத்தில், 1930ல் தங்கியிருந்தார். அந்த மடத்தில் இருந்த யானை மஹா பெரியவரைக் கண்டால் துதிக்கையைத் தூக்கி நமஸ்காரம் செய்யும்.

பெரியவரும் யானையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவார். 



ஒருநாள் இரவில் யானையைக் கட்டியிருந்த கொட்டகை தீப்பற்றிக் கொண்டது. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. மறுநாள் பாகனும், மடத்து ஆட்களும் காட்டில் யானையைத் தேடி அலைந்தும் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. 



சிலநாட்கள் கழித்து, மடத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் அது நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. பாகன் குளத்தில் இறங்கி, யானையை கொண்டு வர முயற்சித்தான். அது வர மறுத்து அடம்பிடித்தது. 


விஷயமறிந்த பெரியவர் தானே குளத்திற்கு சென்று, யானையை அன்புடன் ஒரு பார்வை பார்த்தார். யானையின் கண்களில் கண்ணீர் பெருகியது. குளத்தை விட்டு வெளியே வந்து அவர் அருகில் நின்றது. பெரியவர் அதைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தார். 


இதேபோல, யானையிடம் சிக்கிய பக்தரைக் காத்த நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. 

சிதம்பரத்தில் ஆடிட்டராக இருந்தவர் பாலசுப்ரமண்யம். இவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. பரம்பரையில் வந்தவர். அவர் மஹாபெரியவரின் தீவிரபக்தர். எப்போதும் சந்திரசேகரா ஈசா என்று உச்சரிக்கும் வழக்கம் கொண்டவர். 

ஒருநாள் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சென்ற ஆடிட்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோயில் யானைக்கு மதம் பிடித்து வந்தவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது ஆடிட்டர் உள்ளே நுழைந்தார். அது அவரை கோபத்துடன் தூக்கியது. அவர் பயத்தில் நடுங்கினார். 

ஆனால், வாய் மட்டும் சந்திரசேகரா ஈசா என்ற நாமத்தை சொல்ல மறக்கவில்லை. அப்போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது.


மதம் கொண்ட யானை ஒரு நிமிஷத்தில் அமைதியானது. ஆடிட்டரை கீழே இறக்கி விட்டுவிட்டு பாகனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து மண்டியிட்டது.  பக்தர்கள் இதைப் பார்த்து அதிசயப்பட்டனர். 





சுவாமிகளின் மீது நாய்க்கும் கூட பக்தி உண்டு. 1927ல் மடத்தில் நாய் ஒன்று வளர்ந்து வந்தது. மடத்து பொருட்களையும், கால்நடைகளையும் பாதுகாத்து வந்தது. சுவாமிகள் ஒவ்வொரு நாளும் நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகி விட்டதா? என்று அக்கறையாய் விசாரிப்பார். அவரைக் கண்டவுடன் அது சுற்றிச் சுற்றிவரும். 



ஒருமுறை சிறுவன் ஒருவன் அந்த நாயைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தினான். அதன் பின் அது பார்ப்பவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தது. மடத்து அதிகாரிகள் நாயை 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கிராமத்தில் கொண்டு விட்டுவிட்டு வந்தனர். 


மஹாபெரியவருக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால், நாயை விட்டு வந்தவர்கள் மடத்திற்கு வருவதற்கு முன் நாய் மடத்திற்கு வந்து சேர்ந்தது. 


மடத்து ஆட்களிடம், நாய் வந்து விட்டதா? என்று கேட்டார் பெரியவர். நாயும் அன்போடு பெரியவரிடம் வந்து நின்று சாந்தமானது. மடத்தில் இருப்பவர்கள் பெரியவர் செய்த அற்புதத்தை எண்ணி வியந்தனர். மடத்து நாய்க்கு இருந்த பக்தி உணர்வு மனிதர்களான நமக்கும் இருக்கட்டும்.

[Thanks to Amruta Vahini 06.09.2013]


oooooOooooo

மகிழ்ச்சிப்பகிர்வு

சமீபத்திய சாதனைக்கிளி



நமது பேரன்புக்குரிய 
பெண் பதிவர்
’எங்கள் உஷா டீச்சர்’

-oOo-

உஷா டீச்சரா? அவர் யார்?

என்று தெரிந்துகொள்ள இதோ இந்த இணைப்புக்குச்செல்லவும்.


முக்கியமாக அதில் உள்ள 
நகைச்சுவை மிகுந்த 
என் பின்னூட்டங்களைப் 
பொறுமையாகப் படித்து ரஸிக்கவும்.


[ஒருகை பத்தாமல் 
இரு கைகளாலும் எழுதும் 
ஆற்றல் உள்ளவர் 
என இந்தப்படமே எனக்குச் 
சொல்லாமல் சொல்கிறது. ;)]

வேலூர் கோட்டை 

எழுத்துலக 
மஹாராணி

’திருமதி 
உஷா அன்பரசு ’ 
அவர்கள்.

இதோ நம் மஹாராணியாரின் வலைத்தளம்

அப்படி என்ன 
இவர் சாதனை செய்துள்ளார்? 
என்கிறீர்களா!

சொல்லுகிறேன், 
கேளுங்கோ !

படைக்கும் கடவுள் பிரும்மா 
எனச்சொல்லுவார்கள்.


நம்மையெல்லாம் படைத்த 
பிரும்மாவையே
நம் உஷா டீச்சர்
 படைத்துள்ளார் 
என்றால் சும்மாவா!!!!

சமீபத்தில் நடைபெற்ற 
தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். 
நினைவுச் சிறுகதைப்போட்டியில் 

இவரின் படைப்பான 
”பிரம்மாக்கள்”
என்ற சிறுகதை
 பரிசினை வென்றுள்ளது.

உஷா டீச்சருக்கு 
என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




போட்டிக்கு வந்திருந்த 1000க்கும்
மேற்பட்ட சிறுகதைகளில்
மிகவும் வடிகட்டி 13 கதைகளை மட்டுமே
பரிசுக்குத் தேர்ந்தெடுத்துள்ளனர்.


இவரின் பரிசு பெற்ற இந்தச் சிறுகதை
24.11.2013 ஞாயிற்றுக்கிழமை 
தினமலர் வாரமலரில் 
வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






காணத்தவறாதீர்கள்.

’தினமலர் நிறுவனர் T.V.R. 
நினைவுச் சிறுகதைப் போட்டி’ 
பரிசினை இவர் மூன்றாவது முறையாக 
இப்போது வென்றுள்ளார் 
என்பது மேலும் ஓர் சுவையான 
ஜில்லென்ற தகவலாகும்.

  
   
அதற்காக நம் உஷா டீச்சருக்கு 
3 ஐஸ்க்ரீம் + 2 இளநீர் + 1 கப் மோர்







  

அடியேன் எழுதிய முதல் சிறுகதை 

“தாயுமானவள்”

இதே பரிசினை 2005ம் ஆண்டு வென்று, 
என்னையும் ஓர் எழுத்தாளன் 
என அங்கீகரித்தது.

மேலும் மேலும் என்னை 
எழுதத்தூண்டிய பெருமையும் 
‘தினமலர் நிறுவனர் TVR நினைவுச் 
சிறுகதைப் போட்டி’யையே சாரும்
என்பதை மிகுந்த மனமகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபற்றிய மேலும் விபரங்களுக்கு 
இணைப்பு இதோ:


  


என் பேரன்புக்குப் பாத்திரமான 
 உஷா டீச்சர் அவர்கள் 
தொடர்ந்து மேன்மேலும் 
பல வெற்றிகளைப்பெற்று
எழுத்துலகில் ஜொலிக்கப்



பிரார்த்திக்கிறேன்.



என்றும் அன்புடன் 
தங்கள் மாணவன்
கோபாலகிருஷ்ணன்.

-oOo-





ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியிடப்படும்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

  


100 கருத்துகள்:

  1. அன்பின் வை.கோ
    //
    வேலூர் கோட்டை

    எழுத்துலக
    மஹாராணி

    ’திருமதி
    உஷா அன்பரசு ’
    அவர்கள்.
    //

    அடேயப்பா - எவ்வளவு பாராட்டுகள் - உஷா அன்பரசு பரிசுகளும் பாராட்டுகளும் பெறத் தகுதியானவர் தான். நல்வாழ்த்துகள் உஷா அன்பரசு - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா) October 1, 2013 at 12:26 AM

      வாங்கோ அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே! வணக்கம் ஐயா.

      // அடேயப்பா - எவ்வளவு பாராட்டுகள் - உஷா அன்பரசு பரிசுகளும் பாராட்டுகளும் பெறத் தகுதியானவர் தான்.//

      ஆமாம் ஐயா, She is my Best Friend. Very Interesting Person. She is well deserved for all our appreciations. எழுத்துலகில் மேலும் மேலும் ஜொலிக்க அவர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் காத்திருக்கிறது என்பதில் ஐயம் இல்லை. தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  2. உஷா டீச்சருக்கு வாழ்த்துக்கள்.அவசியம் நீங்கள் கொடுத்துள்ள இணைப்புகளை எல்லாம் பார்க்கிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாதிகா October 1, 2013 at 12:32 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உஷா டீச்சருக்கு வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      //அவசியம் நீங்கள் கொடுத்துள்ள இணைப்புகளை எல்லாம் பார்க்கிறேன்.நன்றி.//

      சந்தோஷம், நன்றி.

      நீக்கு
  3. வாழ்த்துகள் உஷா அன்பரசுவிற்கு. இங்கே திருச்சி தினமலரில் வருமானு தெரியலை. என்றாலும் வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்கறேன். உங்களுக்கும் வாழ்த்துகள். அமுதமொழி இனிமேல் தான் படிக்கணும். :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam October 1, 2013 at 12:35 AM

      வாங்கோ, வணக்கம்.

      //வாழ்த்துகள் உஷா அன்பரசுவிற்கு.//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      //இங்கே திருச்சி தினமலரில் வருமானு தெரியலை. என்றாலும் வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்கறேன். //

      கட்டாயம் திருச்சியில் கிடைக்கும். 24.11.2013 ஞாயிறு ஒருநாள் ’தினமலர்’ செய்தித்தாள் வாங்கினால் போதும். அத்துடன் வாரமலர் இலவச இணைப்பாகக் கிடைக்கும். அதில் அநேகமாக இவர்களின் கதை இடம்பெற்றிருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.

      //உங்களுக்கும் வாழ்த்துகள்.// மிக்க நன்றி.

      நீக்கு
  4. அன்பின் வை.கோ

    உபவாசம் - பட்டினி கிடத்தல் - பதிவு அருமை - விளக்கங்கள் அத்தனையும் அருமை.

    //
    சாப்பாடு இல்லாமல் இருப்பது என்பது போஜன நிவ்ருத்தி என்று அர்த்தம் இல்லை. வெறுமனே போஜனத்தை விட்டால் பிராணந்தான் போகுமே தவிர, ஆத்மஞானம் வந்து விடாது.

    அதனால் இங்கே அஸானம் என்று கூறியிருப்பது, ஆசையது போகங்களைத்தான். காம நுகர்ச்சியை விடுமாறே இந்த மந்திரம் சொல்கிறது என்று பாஷ்யம் செய்திருக்கிறார்.
    // - அவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப் பெரியவாள்.

    இதனையே தான் கீதையும், குறளும், காந்திஅடிகளும் பேசுகின்றன (ர்) .

    தேர்ந்தெடுத்த சொற்களைக் கொண்டு பதிவு போடப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது .

    சிந்தனை நன்று - பதிவு அருமை - பாராட்டுகள் வை.கோ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வை.கோ

    பெரியவாள் யானை நாய் போன்ற விலங்குகளீடம் பாசம் காட்டுபவர் என்பதனை - நிகழ்வுகளுடன் விளக்கமாகக் கூறி - அழகாகப் பதிவாக்கியமை நன்று நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. //கரும்பைக் கசக்கி கிலேசப்படுத்துவதாலேயே கருப்பஞ்சாற்றை எடுத்து பானம் பண்ணுகிற இன்பம் கிடைக்கிறது.

    இதேபோல் உடம்பைக் கிலேசப்படுத்துவதால்தான் உள்ளத்துக்கு ஸுக ரசம் கிடைக்கிறது.//

    அருமையான பொருளுள்ள ரசமான கருத்து.

    பதிலளிநீக்கு
  7. யானை குறித்த தகவல்களும், நாயைப் பற்றியதும் புதியது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நோன்பு பற்றிய தகவல்கள் அறிந்தேன்.
    யானை கண்ணீர் விட்ட காட்சி கண் முன் வந்து போனது.
    சகோதரி உஷாவிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sasi Kala October 1, 2013 at 12:59 AM

      வாங்கோ, வணக்கம்.

      //சகோதரி உஷாவிற்கு வாழ்த்துக்கள்.//

      தென்றலின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. மனம் என்னும் மத யானையைக் கட்டுப்படுத்தும் வழியை அருமையாக விளக்கியுள்ள பெரியவா
    விலங்குகளையும் அன்பால் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை அருமையாக விளக்கியுள்ளீர்கள்.
    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  10. உஷா அன்பரசு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் October 1, 2013 at 1:56 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உஷா அன்பரசு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. உஷா டீச்சருக்கு மனம் கனிந்த வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலாமகள் October 1, 2013 at 2:01 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உஷா டீச்சருக்கு மனம் கனிந்த வாழ்த்துகள் !//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. நல்வாழ்த்துக்கள் உஷா அன்பரசு,வை.கோ சார்..அனைத்து பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Asiya Omar October 1, 2013 at 2:03 AM

      வாங்கோ ... வணக்கம்.

      //நல்வாழ்த்துக்கள் உஷா அன்பரசு, வை.கோ சார்.. அனைத்து பகிர்வுக்கும் நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. பக்தி பலத்தோடு, சங்கல்ப பலத்தோடு ஆரம்பித்தால், அதிலே தெரிகிற நல்ல பலனைப் பார்த்தே, நாளுக்கு நாள் உபவாஸ நியமத்தில் ஈடுபாடு வலுக்கும்.


    உபவாச மகத்துவத்தைப்பற்றி
    அருமையான பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
  14. ”பிரம்மாக்கள்”என்ற சிறுகதை படைத்து
    பரிசினை வென்றுள்ள உஷா டீச்சருக்கு
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 1, 2013 at 2:42 AM

      வாங்கோ, வணக்கம்.

      //”பிரம்மாக்கள்”என்ற சிறுகதை படைத்து பரிசினை வென்றுள்ள உஷா டீச்சருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் உஷா டீச்சருக்கான அழகான இனிய நல்வாழ்த்துகளுக்கும், மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. யானை நாய் போன்ற ஐந்தறிவு ஜீவன்களுக்கும் புரிந்த மகானின் மகத்துவத்தை அருமையாக விளக்கிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  16. அடியேன் எழுதிய முதல் சிறுகதை “தாயுமானவள்”இதே பரிசினை 2005ம் ஆண்டு வென்று, என்னையும் ஓர் எழுத்தாளன் என அங்கீகரித்தது.மேலும் மேலும் என்னை எழுதத்தூண்டிய பெருமையும் தினமலர் நிறுவனர் TVR நினைவுச் சிறுகதைப் போட்டி’யையே சாரும் ////////////////

    வலை உலகத்தின் பெருமைமிகு நட்சத்திரங்களை அடையாளம் காட்டிய TVR நினைவுச் சிறுகதைப் போட்டி’க்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 1, 2013 at 2:49 AM

      //வலை உலகத்தின் பெருமைமிகு நட்சத்திரங்களை அடையாளம் காட்டிய TVR நினைவுச் சிறுகதைப் போட்டி’க்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..! //

      ஆஹா, நட்சத்திரங்கள் ஜொலித்து ஒளிர ஒளி கொடுத்துப் பெருமைப் படுத்துவதே நிலா என்ற நிலவு தான்.

      ’ஆயிரம் நிலவே வா .... ஓர் ஆயிரம் நிலவே வா’ என்ற புகழ்பெற்ற, சாதனை படைத்த நிலவே நேரில் இங்கு வந்து இதைச்சொல்லியுள்ளது மேலும் சிறப்பாக உள்ளது. சந்தோஷம். நன்றிகள்.

      நீக்கு
  17. உபவாசத்தின் பெருமையை உணர்த்திய பதிவுக்கும் ஐந்தறிவு ஜீவன்களிடம் அன்பு கொண்ட பெரியவரின் கருணை பற்றிய பகிர்வுக்கும் மிக்க நன்றி. தினமலர் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற உஷா அன்பரசு அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். தகவல் தெரிவித்த தங்களுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி October 1, 2013 at 2:51 AM

      வாங்கோ ... வணக்கம்.

      //தினமலர் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற உஷா அன்பரசு அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். தகவல் தெரிவித்த தங்களுக்கு நன்றி சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நன்றிக்கு நன்றிகள்.


      நீக்கு
  18. அன்பின் வை.கோ

    உஷா அன்பரசு எழுதிய பிரம்மாக்கள் கதை போட்டியில் வெற்றி பெற்று பரிசினைத் தட்டிக் கொண்டு வந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா) October 1, 2013 at 3:55 AM

      வாங்கோ அன்பின் திரு சீனா ஐயா, மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

      //அன்பின் வை.கோ

      உஷா அன்பரசு எழுதிய பிரம்மாக்கள் கதை போட்டியில் வெற்றி பெற்று பரிசினைத் தட்டிக் கொண்டு வந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      ஆம் ஐயா, அவர்களைவிட எனக்குத்தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நம் பதிவர், நம்முடன் அன்புடன் பழகி வரும் பதிவருக்கு ஓர் பரிசு கிடைக்கிறது என்றால் நம் எல்லோருக்குமே சந்தோஷம் தானே ஐயா. ;)

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மீண்டும் என் நன்றிகள், ஐயா.

      நீக்கு
  19. பக்தி பலத்தோடு, சங்கல்ப பலத்தோடு ஆரம்பித்தால், அதிலே தெரிகிற நல்ல பலனைப் பார்த்தே, நாளுக்கு நாள் உபவாஸ நியமத்தில் ஈடுபாடு வலுக்கும்.

    கரும்பைக் கசக்கி கிலேசப்படுத்துவதாலேயே கருப்பஞ்சாற்றை எடுத்து பானம் பண்ணுகிற இன்பம் கிடைக்கிறது.

    இதேபோல் உடம்பைக் கிலேசப் படுத்துவதால்தான் உள்ளத்துக்கு ஸுக ரஸம் கிடைக்கிறது.//
    பக்தியும், மனபலமும், உறுதியும் சேரும் போது உபவாஸம் சித்தியாகிறது. அதனல் கிடைக்கும் ஆன்ம பலம் கருப்பஞ்சாறு போன்ற இனிமைதான்.
    அருமையான விளக்கம்.
    சகல ஜீவராசிகளிடமும் பெரியாவாள் வைத்து இருந்த அன்புக்கு எடுத்து காட்டு தான் யானை, நாய் . விலங்குகளிடம் அன்பு காட்டினால் அவை திருப்பி தரும் அன்பு மிக அதிகம்.
    உஷா அன்பரசு அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    அவர்கள் தளம் சென்று வாழ்த்துகிறேன்.
    நன்றி.

    அடியேன் எழுதிய முதல் சிறுகதை

    “தாயுமானவள்”

    இதே பரிசினை 2005ம் ஆண்டு வென்று,
    என்னையும் ஓர் எழுத்தாளன்
    என அங்கீகரித்தது.//
    உங்கள் கதை படித்து மகிழ்ந்து இருக்கிறேன்.
    நீங்களும் சிறந்த எழுத்தாளர் தான்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு October 1, 2013 at 4:55 AM

      வாங்கோ... வணக்கம்.

      //உஷா அன்பரசு அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அவர்கள் தளம் சென்று வாழ்த்துகிறேன்.
      நன்றி. //

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். அவர்களின் தளத்திற்கும் சென்று வாழ்த்தியுள்ளீர்கள். பார்த்தேன். மிகவும் சந்தோஷம்.

      //உங்கள் கதை படித்து மகிழ்ந்து இருக்கிறேன். நீங்களும் சிறந்த எழுத்தாளர் தான். வாழ்த்துக்கள்.//

      அப்படியா சொல்கிறீர்கள் மேடம். மிக்க மகிழ்ச்சி. 2006 முதல் 2010 வரை பல பத்திரிகைகளில் எழுதினேன். பல முறை பல பரிசுகள் கிடைக்கப்பெற்றேன்.

      வலைப்பூவினில் எழுத ஆரம்பித்தபிறகு [2011 முதல்] பத்திரிகைத் தொடர்புகளிலிருந்து என்னை நானே விலக்கிக்கொண்டு விட்டேன். எந்தப்போட்டிகளிலும் நான் கலந்து கொள்வதும் இல்லை.

      அதற்கெல்லாம் திறமை மட்டுமின்றி, நிறைய பொறுமையும் தேவைப்படுகிறது. என்னால் பொறுமையாகக் காத்துக் கிடப்பது என்பது இப்போதெல்லாம் முடியாததாக உள்ளது.

      ஒரு பதிவு வெளியிட்டோமா, அதற்கு ஒரு 25 முதல் 50 வரை கமெண்ட்ஸ் உடனடியாக வருகிறதா, அது போதும். அதிலேயே ஆத்ம திருப்தி ஏற்பட்டு விடுகிறது. அதைவிட எந்தப்பரிசும் தேவையில்லை என்ற மனோ நிலைக்கு நான் வந்து ரொம்ப நாள் ஆயாச்சு. ;)

      ஆரம்ப நிலையில் உள்ள புது எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த இதுபோன்ற போட்டிகள் + பரிசுகள் நிச்சயமாக உதவக்கூடும் என்பதில் சந்தேகமே இல்லை.

      நீக்கு
  20. பட்டினியைப் பற்றி மஹா பெரியவாளின் அருளமுதம் வெகு நேர்த்தி! பல பேர் பட்டினிக்கு அர்த்தம் புரியாமல், தங்கள் உடலை வருத்திக் கொள்ளுகிறார்கள். உடல் வருத்தத்தை நினைத்துக் கொண்டு பரமாத்மாவை நினைக்க மறந்து விடுகிறார்கள்.

    தினமணி கதைப் போட்டியில் வெற்றி பெற்ற திருமதி உஷா அன்பரசுவிற்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan October 1, 2013 at 5:01 AM

      வாங்கோ, வணக்கம்.

      // கதைப் போட்டியில் வெற்றி பெற்ற திருமதி உஷா அன்பரசுவிற்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளுக்கும் என் இனிய நன்றிகள்.


      நீக்கு

  21. பகிர்வுகளுக்கு நன்றி. பல இடங்களில் உபவாசம் என்ற பெயரில் பலகாரங்கள்( பல ஆகாரங்கள்.?) உட்கொள்ளப் படுகின்றன. உபவாசம் உடல் எனும் மெஷினுக்கு உகந்தது.

    பதிலளிநீக்கு
  22. நம்முடைய பூஜை,புநஸ்காரங்கள் யாவும்,சித்தசுத்தியோடு,உபவாஸங்களுடன்தான் ஆரம்பமே. சாப்பிட்டுவிட்டு எந்த பூசையும் ஆரம்பமாவதில்லை. நல்ல நாமாக்களைச் சொல்வதற்குக் கூட கட்டுப்பாடு அவசியமாகிறது. உபவாஸம்.நல்ல விளக்கமாகப் புரிகிரது.
    ஆசாரியாள் ஸம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியும் மிகவும் அர்த்தம் பொதிந்தவைகள்தாம். படித்துப் புரிந்துகொள்ல முடிகிரது. அருமை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  23. உபவாசம் அழகிய விளக்கம் .அன்பினால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு யானை மற்றும் நாய் பற்றிய சம்பவங்கள் அழகிய உதாரணம் பகிர்வுக்கு நன்றி அண்ணா .
    சகோதரி உஷா அன்பரசுவிர்க்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Cherub Crafts October 1, 2013 at 6:39 AM

      வாங்கோ நிர்மலா, வணக்கம்மா.

      //சகோதரி உஷா அன்பரசுவிர்க்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.



      நீக்கு
  24. உபவாசம் குறித்த அமுத மொழிகள் நன்று.

    உஷா அன்பரசு அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் October 1, 2013 at 6:59 AM

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்

      //உஷா அன்பரசு அவர்களுக்கு வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  25. நீங்கள் உஷா அவர்களின் வலைப பதிவில் நாந்தான் சொல்லுவேன் என்று சொல்லும்போதே இதுவாகத்தான் இருக்கும் என்று யூகித்தேன். உஷா அன்பரசு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. T.N.MURALIDHARAN October 1, 2013 at 7:31 AM

      வாருங்கள், வணக்கம்.

      //நீங்கள் உஷா அவர்களின் வலைப பதிவில் நாந்தான் சொல்லுவேன் என்று சொல்லும்போதே இதுவாகத்தான் இருக்கும் என்று யூகித்தேன்.//

      ஓரளவு ஏதோ என்னவோ என்று தாங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும் என்று நான் எழுதிய பின்னூட்டத்தின் மூலம் யூகித்திருக்கவே முடியாது.

      //உஷா அன்பரசு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்//

      வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.

      நீக்கு
  26. உஷா டீச்சருக்கு உளம் நிறைந்த‌ நல்வாழ்த்துக்கள். 'உபவாசம்' குறித்த உன்னதமான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி!!!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்வதி இராமச்சந்திரன். October 1, 2013 at 8:49 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உஷா டீச்சருக்கு உளம் நிறைந்த‌ நல்வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் உளம் நிறைந்த நல்வாழ்த்துகளுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  27. தவறுதலாக தினமணி என்று குறிப்பிட்டு விட்டேன். அதற்கு உங்களிடமும், திருமதி உஷா அவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன். சாரி டீச்சர்! என்ன தண்டனையானாலும் ஓகே தான்.போட்டியில் வெற்றி பெற்றதற்கு மறுபடி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை... அவசரத்தில் நிகழ்வதுதானே! //சாரி டீச்சர்! என்ன தண்டனையானாலும் ஓகே // - அப்படின்னா வகுப்புக்கு வரும் போது வேர்க்கடலை, முட்டாய் எல்லாம் எடுத்துட்டு வந்து கொடுத்திடனும் மேம்... ! ஹா... ஹா... ரொம்ப நன்றிங்க!

      நீக்கு
    2. வாழ்த்துக்கள் சொல்லிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள்!

      நீக்கு
  28. சார்... வை.கோ சார்.... என்ன சார் இதெல்லாம்...? மகிழ்ச்சி பகிர்வு என்று இத்தனை தூரம் என்னை பாராட்டி வாழ்த்தி... என்ன சொல்வதென்றே தெரியவில்லை.... வியப்பாய் இருக்கிறது. உங்களுக்கு என் பணிவான வணக்கமும், நன்றியும்! மற்றவர்களை தக்க சமயத்தில் பாராட்டுவது உங்களின் சிறப்பான குணம். ஒவ்வொரு முறையும் பெண்கள் மலரில், வாரமலரில் என் படைப்புகள் வந்தால் எனக்கு முன் நீங்கள் மிக ஆர்வமாக உங்கள் படைப்பை படித்தேன் என்று உடனே மெசேஜ் அனுப்பி விடுகிறீர்கள். ரொம்ப நன்றி சார்!

    வலைச்சரத்தில் வகுப்பு எடுத்ததால் நான் டீச்சராகவே ஆகிவிட்டேனா? ஹா.. ஹா...

    அப்புறம் ... மனம் நிறைந்த பாராட்டில் என்னை எவ்வளவு உயர்த்தி விட்டீர்கள்... என்னை விட வயதும், அனுபவமும் உடைய நீங்கள்தான் பெரிய எழுத்தாளர்.

    உங்கள் உபசரிப்பும், வாழ்த்துக்களும் ஜொலி ஜொலிக்கிறது.ஐஸ் கீரிம் எனக்கு பிடிக்கும் தேங்க்யூ.

    வை.கோ சார் பதிவில் வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஷா அன்பரசு October 1, 2013 at 9:35 AM

      வாங்கோ ..... வணக்கம்.

      //சார்... வை.கோ சார்.... என்ன சார் இதெல்லாம்...? மகிழ்ச்சி பகிர்வு என்று இத்தனை தூரம் என்னை பாராட்டி வாழ்த்தி... என்ன சொல்வதென்றே தெரியவில்லை.... வியப்பாய் இருக்கிறது. உங்களுக்கு என் பணிவான வணக்கமும், நன்றியும்! //

      தங்களின் இந்த சாதனை மிகவும் மகத்தானது. அதனால் அந்த சந்தோஷத்தை நான் மற்ற பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். அவ்வளவு தான்.

      //மற்றவர்களை தக்க சமயத்தில் பாராட்டுவது உங்களின் சிறப்பான குணம்.//

      நம்முடன் ஆத்மார்த்தமாகப் பழகி வருபவர்களின் இதுபோன்ற சாதனைகளை பாராட்டுவது நம் கடமையல்லவா ! அவர்களே அவர்களின் சாதனைகளையும், வெற்றிகளையும் சொல்லிக்கொண்டு பெருமைப்பட, தற்பெருமையாக இருக்குமோ என்ற ஓர் தயக்கமோ கூச்சமோ இருக்கலாம் அல்லவா !! அதனால் இவற்றை நான் பொறுப்பாகச் செய்து வருகிறேன். என் கவனத்திற்கு கொண்டு வரப்படும் இதுபோன்ற சாதனைகளை + வெற்றிகளை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி மகிழ வேண்டும் என்ற ஓர் ஆவல் மட்டுமே இதற்குக்காரணம்.

      // ஒவ்வொரு முறையும் பெண்கள் மலரில், வாரமலரில் என் படைப்புகள் வந்தால் எனக்கு முன் நீங்கள் மிக ஆர்வமாக உங்கள் படைப்பை படித்தேன் என்று உடனே மெசேஜ் அனுப்பி விடுகிறீர்கள். ரொம்ப நன்றி சார்! //

      என் கண்களில் அவைகள் பட்டால் உடனடியாக, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என நான் ஆசைப்படுவேன்.

      இப்போது சமீபகாலமாக பெண்கள் மலரில் ஹரிணி என்பவர் நல்ல பயனுள்ள கட்டுரைகள் எழுதி வருகிறார்.

      அதுபோல ஹரிணி என்ற பெயரில் என் பதிவுகளில் சமீப காலமாக ஒருவர் பின்னூட்டங்கள் கொடுத்து வருகிறார்.

      அவரும் இவரும் ஒன்றோ என எனக்கு ஓர் சந்தேகம் வந்தது. என் பதிவுகளுக்குப் பின்னூட்டம் கொடுப்பவரிடம் இதுபற்றி கேட்டே விட்டேன்.

      அவர் தான் இல்லை என்றும், அவர் வேறு யாரோ என்றும் சொல்லிவிட்டார்.

      //வலைச்சரத்தில் வகுப்பு எடுத்ததால் நான் டீச்சராகவே ஆகிவிட்டேனா? ஹா.. ஹா...//

      ஆமாம். என்னைப் பொறுத்தவரை நீங்க எனக்குச் டீச்சர் தான். ;) எவ்வளவோ விஷயங்களை நான் இதுவரை உங்களிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளேனே ! ;)))))

      அதுமட்டும் அல்ல “பின்னூட்டப்புயல்” என்று எனக்கு ஒரு பட்டம் கொடுத்து மகிழ்வித்திருந்தீர்களே!. அதனால் எனக்கு மறைமுகமாக நிறைய இலாபங்கள் கிடைத்தன. என்னைத்தேடி எவ்வளவோ பரிசுகள் ஓடி வந்தன.

      //அப்புறம் ... மனம் நிறைந்த பாராட்டில் என்னை எவ்வளவு உயர்த்தி விட்டீர்கள்... என்னை விட வயதும், அனுபவமும் உடைய நீங்கள்தான் பெரிய எழுத்தாளர். //

      அப்படியா டீச்சர். சந்தோஷம். டீச்சரே இதுபோலச் சொன்னால் என்னால் என்ன செய்ய முடியும்? அடக்கத்துடன் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

      இந்தக்காலத்தில் இளம் ரத்தங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு போவதே என்னைப்போன்றோருக்கு மிகவும் நல்லது.

      //உங்கள் உபசரிப்பும், வாழ்த்துக்களும் ஜொலி ஜொலிக்கிறது. ஐஸ் கீரிம் எனக்கு பிடிக்கும் தேங்க்யூ.//

      அனைத்தையும் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்..

      //வை.கோ சார் பதிவில் வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி!//

      தங்களை என் தளத்தில் வாழ்த்தியுள்ளவர்களுக்கு நன்றி சொல்லியுள்ளதற்கு என் நன்றிகள். நானும் அவர்களுக்கு தனித்தனியே நன்றி கூறியுள்ளேன்.

      பிரியமுள்ள VGK

      நீக்கு
  29. Let me first appologise for not commenting in Tamil. I am facing problems with my computer.
    My heartiest congratulations to Mrs. UshaAnbarasu.
    Iam amazed at the way you complement friends at the right moment. Not everyone have this kind of mental status.
    Thank you for sharing the information.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam October 1, 2013 at 7:17 PM

      வாங்கோ, வணக்கம்.

      //Let me first APOLOGIZE for not commenting in Tamil. I am facing problems with my computer.//

      அதனால் பரவாயில்லை. அடிக்கடி பலருக்கும் ஏற்பட்டு வரும் தொல்லைகள் தான் இவைகள். இதற்கெல்லாம் மன்னிப்பு எதற்கு? வேண்டாமே !

      //My heartiest congratulations to Mrs. Usha Anbarasu.//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      //I am amazed at the way you complement friends at the right moment. Not everyone have this kind of mental status.//

      She is one of my Best Friends. I like her Special Talents very much. Moreover She is well deserved for all our Appreciations, Madam.

      //Thank you for sharing the information.//

      Thank You very much. Madam.

      அன்புடன் VGK

      நீக்கு
  30. // சாப்பாடு இல்லாமல் இருப்பது என்பது போஜன நிவ்ருத்தி என்று அர்த்தம் இல்லை. வெறுமனே போஜனத்தை விட்டால் பிராணந்தான் போகுமே தவிர, ஆத்மஞானம் வந்து விடாது. //

    பெரியவரின் வாக்கு இது. ஆனால் நிறையபேர் விரதம் என்ற பெயரில், ஓரிரு மணி நேரம் சாப்பிடாமல் இருந்து விட்டு, தனக்குப் பிடித்த பலகாரங்களை மூச்சு முட்ட சாப்பிடுகிறார்கள்.

    // உஷா டீச்சருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
    அன்பான இனிய நல்வாழ்த்துகள். //

    உஷா அன்பரசு அவர்களை பாராட்டுவதில் உங்களோடு என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ October 2, 2013 at 2:19 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      *****உஷா டீச்சருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
      அன்பான இனிய நல்வாழ்த்துகள்.*****

      //உஷா அன்பரசு அவர்களை பாராட்டுவதில் உங்களோடு என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்! //

      தங்களின் அன்பான வருகைக்கும் என்னோடு சேர்ந்து அவர்களைப் பாராட்டி வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
  31. உஷா டீச்சருக்கு இனிய வாழ்த்துகள் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேல் October 2, 2013 at 2:23 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உஷா டீச்சருக்கு இனிய வாழ்த்துகள் பாராட்டுக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அவர்கள் நிஜமாகவே பள்ளி ஆசிரியை [டீச்சர்] அல்ல.

      அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் CHIEF ACCOUNTANT ஆகப் பணியாற்றி வருபவர்கள், என நினைக்கிறேன்.

      இருப்பினும் அவர்கள் எனக்கு மட்டுமே டீச்சர்.

      விபரங்களுக்கு http://blogintamil.blogspot.in/2012/12/6.html

      பல வாழ்வியல் உண்மைகளையும், யதார்த்தங்களையும், இங்குமங்கும் நடைபெறும் உண்மை நிகழ்ச்சிகளையும், அவ்வப்போது எங்களுக்குள் பகிர்ந்துகொள்வோம். அதுவே நாங்கள் எழுதும் கதைகளுக்கு கருவாக அமைந்து விடுவதும் உண்டு.

      இதனாலெல்லாம் கூட, என்னைப் பொறுத்தவரை ”திருமதி உஷா அன்பரசு அவர்கள்” ஓர் உன்னதமான டீச்சர் தான்.

      இது அனைவரின் தகவலுக்காகவும் சொல்லியுள்ளேன்.

      நீக்கு
  32. உஷா அன்பரசு அவர்களுக்கு என் மணமார்ந்த வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jaleela Kamal October 2, 2013 at 4:01 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உஷா அன்பரசு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  33. உஷா அன்பரசு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் October 2, 2013 at 5:46 AM

      வாங்கோ Sir, வணக்கம்.

      //உஷா அன்பரசு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் Sir.

      அன்புடன்
      வீ..........ஜீ

      நீக்கு
  34. " பட்டினி கிடத்தல் " பற்றிய பதிவு உளவியல் ரீதியான சில உண்மைகளைப் புரிய வைத்தது. உயிரற்ற ஜீவன்களை வசியம் செய்வதும் ஒரு உளவியலே ! என்பதை உணர்த்திய பதிவு அருமை ! உஷா டீச்சருக்கு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருச்சந்திரன் October 2, 2013 at 6:14 AM

      வாருங்கள், வணக்கம்.

      //உஷா டீச்சருக்கு வாழ்த்துக்கள் !//

      இந்தத்தொடருக்கு தங்களின் அன்பான முதல் வருகைக்கும், உஷா டீச்சர் அவர்களை வாழ்த்தியுள்ளதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..

      நீக்கு
  35. சகோதரியார் உஷா அன்பரசு அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் October 2, 2013 at 7:50 AM

      வாங்கோ, வணக்கம்.

      //சகோதரியார் உஷா அன்பரசு அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் .

      நீக்கு
  36. இப்படியாக உடல் நலத்தோடு, உயிர் நலத்தையும், இம்மையோடு, மறுமையையும், சேர்த்து ஆன்றோர்கள் உபவாஸ விதிகளைத் தந்திருக்கிறார்கள். முதலில் கஷ்டமாக இருந்தாலும், அப்யாஸத்தால் சமாளித்து விடலாம்.//

    அருமையான விளக்கம்! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!
    உஷா அன்பரசு அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s.October 3, 2013 at 2:08 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உஷா அன்பரசு அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் .

      நீக்கு
  37. வணக்கம் அய்யா, தங்களின் பதிவும், பாராட்டும் குணமும், எளிமையும் வியக்க வைக்கிறது. தங்களது சுறுசுறுப்பு இறைவனின் பரிசு அய்யா. அன்பு சகோதரி உஷா அன்பரசு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. பாண்டியன் October 3, 2013 at 9:25 AM

      வாங்கோ, வணக்கம்.

      //வணக்கம் ஐயா, தங்களின் பதிவும், பாராட்டும் குணமும், எளிமையும் வியக்க வைக்கிறது. தங்களது சுறுசுறுப்பு இறைவனின் பரிசு அய்யா. அன்பு சகோதரி உஷா அன்பரசு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் .

      நீக்கு
  38. நவராத்திரி விரதம் அண்மிக்கும் காலத்தில் இப்பதிவு அவசியம் . உடல் பசித்திருக்க உளம் எங்கே இரையை நாடும் .அது உடலை வருத்துவதாகும் என அழகாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள் . நன்றியுள்ள நாயும், யானையும் கண்ணீர்மல்க பாசத்தைக் காடுவதைக் கண்டிருக்கின்றேன். காஞ்சிப் பெரியாரைக் கண்டால் அடிபணியாமலா போகும். அருமையான செய்திகள் . மிக்க நன்றி சார். உஷா டீச்சருக்கும் பாராட்டுக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திரகௌரி October 3, 2013 at 10:54 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உஷா டீச்சருக்கும் பாராட்டுக்கள் .//

      தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் .

      நீக்கு
  39. மாதம் ஒருதடவையாவது உபவாசம் இருத்தல் உடலுக்கு நல்லதென்கிறார்கள். யானைக்கதை படிக்க என்னவோ போலாகிவிட்டது மனது.

    பதிலளிநீக்கு
  40. சமீபத்திய சாதனைக்கிளி.. உஷா அன்பரசு ரீச்சர் அவர்களுக்கு என் வாழ்த்தும் உரித்தாகட்டும்...

    ////அதற்காக நம் உஷா டீச்சருக்கு
    3 ஐஸ்க்ரீம் + 2 இளநீர் + 1 கப் மோர்
    ///// எப்பூடியெல்லாம் வாழ்த்திவிட்டு கடசில ஒருகப் இளநீரோடு அலுவலை முடிச்சிட்டீங்களே கோபு அண்ணன்?:) இது உங்களுக்கே நியாயமாப் படுதா?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira October 3, 2013 at 2:11 PM

      வாங்கோ அதிரா, வாங்கோ, வணக்கம். பார்த்து ரொம்ப நாட்கள் ஆச்சு.

      பகுதி-52க்கு மட்டும் வருகை தராமல் 59 வரை வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள். எனினும் நன்றி.

      பகுதி-52 என் 400வது பதிவு. அதிராவின் வாழ்த்துகள் கிடைக்காமல் என் கிளியும் தவிக்குது.

      //சமீபத்திய சாதனைக்கிளி.. உஷா அன்பரசு ரீச்சர் அவர்களுக்கு என் வாழ்த்தும் உரித்தாகட்டும்...//

      ஆஹா, மிக்க சந்தோஷம் அதிரா. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      *****அதற்காக நம் உஷா டீச்சருக்கு 3 ஐஸ்க்ரீம் + 2 இளநீர் + 1 கப் மோர்*****

      //எப்பூடியெல்லாம் வாழ்த்திவிட்டு கடசில ஒருகப் இளநீரோடு அலுவலை முடிச்சிட்டீங்களே கோபு அண்ணன்?:) இது உங்களுக்கே நியாயமாப் படுதா?:))//

      அதாவது அதிரா ..... எனக்கும் உஷா டீச்சருக்கும் இந்த இளநீருக்கும் நிறைய சம்பந்தங்கள் உண்டு. உங்க பாஷையில் சொல்வதானால் ‘கொப்பி வலது உண்டு’.

      அதைப்பற்றியெல்லாம் உங்களுக்கு முழு விபரம் தெரிய வேண்டுமானால், நீங்க அவசியமா வலைச்சர இணைப்புக்குப்போய் அங்குள்ள என் பின்னூட்டங்களைப் பொறுமையாகப் படிக்கணும்.

      http://blogintamil.blogspot.in/2012/12/6.html

      அன்புடன் கோபு அண்ணன்

      நீக்கு
  41. ////அடியேன் எழுதிய முதல் சிறுகதை

    “தாயுமானவள்”

    இதே பரிசினை 2005ம் ஆண்டு வென்று,
    என்னையும் ஓர் எழுத்தாளன்
    என அங்கீகரித்தது.///
    ஹா..ஹா..ஹா.. ஜேமாமி சொன்ன ~சந்தடி சாக்கில் பக்கத்து இலைக்குப் பாயாசம் ஊத்துவது” :) என்பதை நினைவு படுத்திட்டீங்க:)).. ஆனாலும் கோபு அண்ணன் கீப் இட் அப்:) ஏன் தெரியுமோ? இந்தக் காலத்தில எங்களைப் பற்றி நாங்களே சொன்னால்தான் உண்டு:) இல்லாவிட்டால் ஆருக்கும் எதுவுமே தெரிய நியாயமில்லையே:).. இதுதான் என் பொலிசியும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira October 3, 2013 at 2:14 PM

      //ஹா..ஹா..ஹா.. ஜேமாமி சொன்ன ~சந்தடி சாக்கில் பக்கத்து இலைக்குப் பாயாசம் ஊத்துவது” :) என்பதை நினைவு படுத்திட்டீங்க:)).. //

      ’ஜே’ மாமி எங்கே அதிரா? ஒரே கவலையாக்கீதூஊஊஊ.

      புதுக்கல்யாணம் ஆகி ஹனிமூன் போனாங்கோ ! அப்புறம் ஆளையே காணும். ஒருவேளை மஸக்கைப் பிரச்சனைகளாக இருக்குமோ? ;)))))

      உங்களைப் போலவே ரெட்டைக் குழந்தைகளாக இருக்குமோ ? ;)))))

      விசாரித்து தகவல் சொல்லுங்கோ ....... இரகசியமாக எனக்கு மட்டும். ;)))))

      தங்களிடமிருந்து ஸ்வீட்டான தகவல் கிடைத்ததும் ஸ்வீட்ஸ், வேர்க்கடலை, வேப்பிலைக்கட்டி, வடாத்து மாவு, வடுமாங்கா ஊறுகாய் என வாய்க்குப்பிடிச்ச எல்லாவற்றையும் வாயும் வயிறுமா உள்ளவங்களுக்கு நான் கொடுத்துட்டு வரணுமாக்கும். ;)))))

      நீக்கு
  42. உஷா டீச்சருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.Menaga October 4, 2013 at 6:45 AM

      வாங்கோ மேனகா, வணக்கம்.

      //உஷா டீச்சருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!..//

      தங்களின் அன்பான வருகைக்கும் உஷா டீச்சருக்கான மனமார்ந்த பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் .

      நீக்கு
  43. மனம் கவர்ந்த அருமையான பதிவு
    நாமும் காலை மாலை ஆச்சாரியாரின்
    அருளுரையின்படிச் செய்து உய்ய
    முயற்சிக்கலாம்
    பதிவர் உஷ அன்பரசு அவர்களுக்கு
    சாதனை தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S October 4, 2013 at 7:13 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //பதிவர் உஷா அன்பரசு அவர்களுக்கு சாதனை தொடர வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும், பதிவர் உஷா அன்பரசு அவர்களுக்குச் சொல்லியுள்ள வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் .

      நீக்கு
  44. உபவாஸம் குறித்த அமுத மொழிகள் அருமை.

    உஷா டீச்சருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  45. கோவை2தில்லி October 5, 2013 at 1:07 AM

    வாங்கோ, வணக்கம்.

    //உஷா டீச்சருக்கு வாழ்த்துகள்.//

    தங்களின் அன்பான வருகைக்கும், உஷா டீச்சரை வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  46. பெரியவாளின் கருணைக்கு அளவேது?!!
    உஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. middleclassmadhavi October 5, 2013 at 9:01 PM

      வாங்கோ, வணக்கம்.

      //உஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும் திருமதி. உஷா அவர்களை வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  47. Sir, Through your blog I am able to read so many writings. Thanks sir.
    My congragulations to Usha Mam.
    It is great that you appreciated a co writer in your blog. It is so nice.
    Waiting to read further.
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji October 6, 2013 at 10:44 AM

      வாங்கோ விஜி, வணக்கம்.

      //Sir, Through your blog I am able to read so many writings. Thanks sir. My congragulations to Usha Mam. It is great that you appreciated a co writer in your blog. It is so nice. Waiting to read further. - viji//

      தங்களின் அன்பான வருகைக்கும் திருமதி. உஷா அவர்களை வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  48. Congratulations to Usha mam, and very interesting post about fasting. Thank you very much sir for sharing...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Priya Anandakumar October 6, 2013 at 2:35 PM

      வாங்கோ, வணக்கம்.

      //Congratulations to Usha mam//

      தங்களின் அன்பான வருகைக்கும் திருமதி. உஷா அவர்களை வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  49. உஷா அன்பரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    உபவாச கருத்துக்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி October 8, 2013 at 4:53 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உஷா அன்பரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் திருமதி. உஷா அவர்களை வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  50. திருமதி உஷா அன்பரசு அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள் தாங்கள் மற்றொருவரின் சாதனைகளை அனைவருக்கும் கொண்டுசெல்வதில் புதிய சாதனையே படைக்கிறீர்கள்
    உபவாஸம் பற்றிமஹாபெரியவாளின் உபதேஸம் நம்மால் கடைப்பிடிக்கத்தக்க வகையில் உள்ளது ஒரு நாள் ஏகாதாஸிக்கு இருக்கும்போதே பசி முன் கூட்டியே வந்துவிடுகிறது நன்றி

    பதிலளிநீக்கு
  51. உஷா டீச்சருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  52. அடேயப்பா - எவ்வளவு பாராட்டுகள் - உஷா அன்பரசு பரிசுகளும் பாராட்டுகளும் பெறத் தகுதியானவர் தான். நல்வாழ்த்துகள் உஷா அன்பரசு .உபவாஸம் பற்றிமஹாபெரியவாளின் உபதேஸம் நம்மால் கடைப்பிடிக்கத்தக்க வகையில் தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  53. // சாப்பாடு இல்லாமல் இருப்பது என்பது போஜன நிவ்ருத்தி என்று அர்த்தம் இல்லை. வெறுமனே போஜனத்தை விட்டால் பிராணந்தான் போகுமே தவிர, ஆத்மஞானம் வந்து விடாது. //

    அளவோடு சாப்பிட்டு, வளமோடு வாழ்வதில் தான் அர்த்தமே இருக்கு.

    பெரியவாளின் அருளைப் பற்றிப் படிக்கப் படிக்க மனம் நெகிழ்கிறது.

    உஷா அன்பரசுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இப்படி அடுத்தவரை உற்சாகப் படுத்தும், ஊக்கப் படுத்தும் கோபு அண்ணாவிற்கு நிகர் அவரே தான்.

    என்னைத் தேடி இருக்கீங்க. அதிராவின் பின்னூட்டத்துல பார்த்தேன். ம்ம்ம். என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே.

    ஆசையிருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்கன்னு இருக்கு என் கதி.

    பதிலளிநீக்கு
  54. @ Jayanthi Jaya September 8, 2015 at 8:56 PM

    வாங்கோ ஜெயா, வணக்கம்.

    //என்னைத் தேடி இருக்கீங்க. அதிராவின் பின்னூட்டத்துல பார்த்தேன்.//

    அடாடா, அதிராவுக்கு நான் எழுதின பதிலைப்படிச்சுட்டேளா? :)

    எப்படியோ, அதுபோலவே நம் ஆத்தில் யாருக்கோ மஸக்கை ஏற்பட்டுள்ளதில் மகிழ்ச்சியே. அதில் உள்ளதையெல்லாம் [வேப்பிலைக்கட்டி, வடாத்து மாவு, வடுமாங்கா ஊறுகாய்] நீங்களே செய்து கொடுங்கோ.

    பதிலளிநீக்கு
  55. உஷா மேடம் அவுகளுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  56. உஷா அன்பரசு டீச்சருக்கு நல் வாழ்த்துகள். பெரியவா மேல நமக்கு போட்டி போட்டுண்டு யானை நாய் என்று வாயில்லா ஜீவன்கள் கூட பக்தி காட்டறதே. பெரியவாளின் அநுக்கிரகம் அனைத்து உயிர் களுக்கும் கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  57. படிப்பினையூட்டும் பதிவு... சகோதரி உஷா அன்பரசு அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  58. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (02.07.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=430674564101910

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு