என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 21 ஏப்ரல், 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-7]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-7]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-11


[நாடக மேடையின் ஒரு ஓரமாக பெரிய பாறாங்கல்லின் மேல் சங்கரனின் ஒரு கால் இருப்பது போலவும், மறு கால் கல்லின் மறைவில் முதலை ஒன்று கவ்விப்பிடித்திருப்பது போலவும், நாடகப் பார்வையாளருக்குக் காட்டலாம்] 



ஆர்யா: 

சங்கரா! என்னடா ஆச்சு? 

ஏண்டா நமக்கு இப்படி சோதனை மேல் சோதனையாக வருகிறது?

சங்கரன்: 


அம்மா, என் காலை இந்த முதலை பிடித்து விட்டது. 


நான் என்ன செய்வேன்?


உங்களை விட்டுப்பிரிந்து இந்த முதலைக்கு என் உடல் விருந்தாகி விடுமோ என அஞ்சுகிறேன். 


என் பிரிவால் நீங்கள் வருந்தி அழுவீர்களே! நான் இப்போது என்ன செய்ய?


ஆர்யா:


சங்கரா! அப்படியெல்லாம் சொல்லாதேடா.


எப்படியாவது அதனிடமிருந்து மெதுவாகத் தப்பித்து வருவதற்கு வழியைப்பாரு. 


உன்னையும் நான் பிரிவதா? 


என்னால் முடியவே முடியாது.


உன்னைப் பறி கொடுத்து விட்டு என்னால் ஒரு நிமிஷம் கூட உயிர் வாழ முடியாதுடா!


கனகதார ஸ்தோத்ரம் சொல்லி அந்த லக்ஷ்மிதேவியையே வரவழைத்து தங்க மழை பெய்யச்செய்தாயே!


உனக்குத் தெரியாத உபாயமா?


நீ படும் இந்த மரண அவஸ்தையை என்னால் பார்க்கச் சகிக்கவில்லை.


உடனே ஏதாவது செய்து தப்பித்து வந்துவிடு சங்கரா!


சங்கரன்:


அம்மா! இந்த முதலையிடமிருந்து இப்போது நான் தப்பிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதற்கு நீங்கள் தான் உதவ வேண்டும்.


ஆர்யா:


சொல்லு, சங்கரா; எதுவாக இருந்தாலும் உடனே சொல்லு. நான் உனக்காக என் உயிரையும் கொடுக்கத்தயாராக உள்ளேன்.


சங்கரன்:


நான் சந்நியாஸம் வாங்கிக் கொள்வதாக சங்கல்ப்பம் செய்து கொண்டால், இந்த ஜன்மா போய் மறுஜன்மா எடுத்தது போல ஆகிவிடும். 


இந்த ஜன்மாவில் என் காலைப் பிடித்துள்ள இந்த முதலை என்னை விட்டுவிட்டு ஓடிவிடும். 


நான் சந்நியாஸம் வாங்கிக்கொள்ள, என்னைப் பெற்ற தாயாராகிய, உங்களால் மனப்பூர்வமாக சம்மதம் தரப்பட வேண்டும்.


அது ஒன்று தான், நான் இப்போது இந்த முதலையிடமிருந்து தப்பிக்க இருக்கும் ஒரே வழி.


ஆர்யா: 


உடனே அதுபோல சங்கல்ப்பம் செய்துகொள், சங்கரா!


இதற்கு நான் என் மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன்.


நீ எப்படியாவது இந்த முதலையிடமிருந்து காயம் ஏதும் இல்லாமல் தப்பித்து வந்து, ஆயுஷோடு இருந்தாலே போதும், எனக்கு.


[சங்கரன் தன் கண்களை மூடிக்கொண்டு தன் இடது உள்ளங்கையின் மேல், வலது உள்ளங்கையைக் கவிழ்த்து மூடி வைத்துக்கொண்டு, சங்கல்ப்ப மந்திரங்கள் ஏதோ உச்சரித்து விட்டு, குனிந்து தன் கைகள் இரண்டினாலும் தண்ணீரை மொண்டு கீழே அர்க்யம் போல ஊற்றி விட்டு, கால்கள் இரண்டையும் உதறிக்கொண்டு வெளியே வருதல். 


மார்பினில் உள்ள பூணூலையும், இடுப்பு வஸ்த்ரங்களையும் கழட்டி எறிந்து விட்டு, பட்டு கொடுக்கும், காவி வஸ்த்ரம் ஒன்றைக் கட்டிக்கொள்ளுதல்.


கிட்டு கொடுக்கும் ஓர் தண்டத்தை {தண்டம் = மெல்லிய குச்சி ஒன்று அதன் தலைப்பகுதியில் சிறிய காவி வஸ்த்ரத்தில் பூணூல் சுற்றப்பட்டிருக்கும்} கையில் வாங்கிக்கொள்ளுதல்.


ஒரு சிறிய அறிவிப்பு

[இதன் தொடர்ச்சி இன்று [21.04.2012] 
இரவு 9 மணி சுமாருக்கு வெளியிடப்படும்]

28 கருத்துகள்:

  1. நீ எப்படியாவது இந்த முதலையிடமிருந்து காயம் ஏதும் இல்லாமல் தப்பித்து வந்து, ஆயுஷோடு இருந்தாலே போதும், எனக்கு.

    That Is Mother!

    பதிலளிநீக்கு
  2. கனகதார ஸ்தோத்ரம் சொல்லி அந்த லக்ஷ்மிதேவியையே வரவழைத்து தங்க மழை பெய்யச்செய்தாயே!


    உனக்குத் தெரியாத உபாயமா?

    So she knows "He" is God!

    பதிலளிநீக்கு
  3. கனகதார ஸ்தோத்ரம் சொல்லி அந்த லக்ஷ்மிதேவியையே வரவழைத்து தங்க மழை பெய்யச்செய்தாயே!


    உனக்குத் தெரியாத உபாயமா?

    So she knows "He" is God!

    பதிலளிநீக்கு
  4. சந்நியாசம் வாங்க அம்மாவை சம்மதிக்க வைத்து விட்டார்.

    இனி, என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலுடன்....

    பதிலளிநீக்கு
  5. கனகதார ஸ்தோத்ரம் சொல்லி அந்த லக்ஷ்மிதேவியையே வரவழைத்து தங்க மழை பெய்யச்செய்தாயே!


    உனக்குத் தெரியாத உபாயமா?

    வரழைத்துக்கொண்ட அபாயத்துக்கு ஒரு உபாயம் ஆபத்சந்நியாசம் ???!!!

    பதிலளிநீக்கு
  6. நீ எப்படியாவது இந்த முதலையிடமிருந்து காயம் ஏதும் இல்லாமல் தப்பித்து வந்து, ஆயுஷோடு இருந்தாலே போதும், எனக்கு.

    தாயுள்ளத்தை வெளிச்சமிடும் வாக்கு...

    பதிலளிநீக்கு
  7. நான் சந்நியாஸம் வாங்கிக்கொள்ள, என்னைப் பெற்ற தாயாராகிய, உங்களால் மனப்பூர்வமாக சம்மதம் தரப்பட வேண்டும்.

    தாயின் மனம் கோணாமல்
    தன் சங்கலப்த்தையும் விட்டுக்கொடாமல் எத்தனை சம்த்காரம் ..!!

    பதிலளிநீக்கு
  8. ஒரு அம்மாவின் மனதை மாற்ற செய்த விஷ்யமா?

    பதிலளிநீக்கு
  9. படங்களுடன் மிக மிக எளிமையாகச் சொல்லிப் போகும்
    யுக்தி அருமை தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. முதலைக் காலைக் கவ்வுவதற்கு மேடையில் காட்ட அளித்துள்ள ஐடியா நல்ல ஐடியா.

    பதிலளிநீக்கு
  11. நீ எப்படியாவது இந்த முதலையிடமிருந்து காயம் ஏதும் இல்லாமல் தப்பித்து வந்து, ஆயுஷோடு இருந்தாலே போதும், எனக்கு.//

    சிறு காயம் கூட இல்லாமல் தன் குழந்தை தப்பித்தால் போதும் என்று நினைக்கும் தாயுள்ளம் கண்களில் நீர் வருகிறது.

    தெரிந்த கதை என்றாலும் உங்கள் மூலம் கேட்பது அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. தாயின் அனுமதி பெற்ற நிகழ்வை அழகான நாடக வடிவமாக்கியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. நடுநடுவே நாடகத்திற்குத் தேவையான உத்திகளையும் சொல்லிப் போவது அழகு.

    சந்நியாசி ஆனது வரை வந்துவிட்டோம். அடுத்த பகுதிக்கான காத்திருப்பு எங்களிடமும்....

    பதிலளிநீக்கு
  14. தாயுள்ளம் அழகாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது-அருமை
    காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  15. I was so emotional on reading this. Really i felt I am not write anything.
    Being a mother..............
    viji

    பதிலளிநீக்கு
  16. தெரிந்த கதை தான்... ஆனால் தொய்வில்லாத நடை சுவாரசியத்தை கூட்டுகிறது

    பதிலளிநீக்கு
  17. the crocodile resembles the worldly pleasures.

    well narrated Gopu Sir.

    பதிலளிநீக்கு
  18. Mira,

    Thank you very much for your kind entry & valuable comments to
    Part 2 to 7 & 11 of this drama.

    Affectionately yours,
    Gopu

    பதிலளிநீக்கு
  19. சங்கரனின் மாத்ரு பக்தி பல தத்துவங்களைச் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  20. பெத்த மனம் பித்து.

    தெய்வக் குழந்தையின் தாயாக இருந்தாலும் அவள் தாய் தானே.

    சந்நியாசியாக இருந்தாலும் பரவாயில்லை. மகன் உயிருடன் இருந்தால் போதும் என்று தாயுள்ளம் நினைப்பது சகஜம் தானே.

    பதிலளிநீக்கு
  21. இளவயதிலேயே சந்நியாசம் பூணப்போகிறேன் என்று ஒரு பிள்ளை சொன்னால் எந்தத்தாய்தான் மனதார சம்மதித்து ஆசி வழங்கி அனுப்புவாள்? தாய்மையின் பலவீனத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சமர்த்துப்பிள்ளை சங்கரன்.

    பதிலளிநீக்கு
  22. தன் மகன் சந்நியாசி ஆவதை எந்த தாயால் தான் தாங்கி கொள்ள முடியும்? அப்படியும் மகன் உயிருடன் இருந்தாலே போதும் என நினைக்கும் தாயுள்ளம் அருமை அம்மாவின் அனுமதி யுடன் தான் சந்நியாச ம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் இப்படி ஒரு நாடகளா?

    பதிலளிநீக்கு
  23. அந்த கொளந்த சாமியாரா போக அம்மி பர்மிசன் கொடுக்காகாட்டியும் மொதல விட்டுபோடுமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 20, 2015 at 4:02 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //அந்த கொளந்த சாமியாரா போக அம்மி பர்மிசன் கொடுக்காகாட்டியும் மொதல விட்டுபோடுமா.//

      :) ஆமாம். அப்படித்தான் நிகழ்ந்ததாக இந்தப்புராண சம்பவக் கதை சொல்லுகிறது :)

      நீக்கு
  24. இப்படி பெற்ற மனதை தவிக்க விட்டாவது சன்யாச தர்மம் ஏத்துண்டுதான் ஆகணுமா.

    பதிலளிநீக்கு
  25. நீ எப்படியாவது இந்த முதலையிடமிருந்து காயம் ஏதும் இல்லாமல் தப்பித்து வந்து, ஆயுஷோடு இருந்தாலே போதும், எனக்கு.// பத்து மாதம் சுமந்த தாய் உள்ளம். எக்காலத்திலும் ஒன்றே போல..

    பதிலளிநீக்கு
  26. Comments Received from Mrs. PADMA SURESH ON 01.01.2019 thro' mail

    -=-=-=-=-

    Mama, Namaskarams. Wish you a very happy new year.

    Yesterday only I could manage some time to read the skits on Adi Shankara. Really it is awesome. The introduction of Kittu and Pattu proves your level of creative thinking and it becomes easier to reach out the minds of young children as the names Kittu and Pattu would be quite fascinating for the kids.

    Honestly, even I was not aware of all the stories narrated in the skit except a few. In fact, these stories MUST BE narrated to the children these days as it helps to develop morality in the society, respect our culture and many more positive attributes can be brought about in the community, which is the need of the hour.

    Thank you very much for sharing the skit, mama

    -=-=-=-=-

    பதிலளிநீக்கு
  27. Whats-app message received today (18.5.2021) from one Mr. Libya Vasudevan (9442157457), Retired Senior Manager, BHEL, now residing at T.V.KOIL. 
    -=-=-=-=-=-=-=-=-

    Gopu Ji,

    Your Adhi Shankarar Tamil Drama was forwarded to one of my friends, who is a Music Teacher working in Kothagiri, near Ooty.

    He liked very much your presentation and the compilation of Adhi Shankara's life history.

    He wants to use it 'as it is' without any change for enacting a drama by his students.

    I need your clearance cum acceptance as well permission  to conduct a drama in school stage in the near future.

    Hope you will approve. Please confirm.

    My brothers and sisters have well received this Drama and eagerly to read further and other creations by you. 

    --oOo--

    My Dear Vasu,

    Thanks for your Comments. As discussed over phone, I have no objection in using my script for School Stage Drama or Radio Audio Drama or in any other form by school children.

    All the Best. - vgk - 19.05.2021

    பதிலளிநீக்கு