About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, November 21, 2011

மழலைகள் உலகம் மகத்தானது





மழலைகள் உலகம் மகத்தானது

'மழலைகள் உலகம் மகத்தானது' என்ற தலைப்பில் பலரும் பலவிதமாக தொடர் பதிவாக எழுதி வருவது மிகச்சிறப்பாகவே உள்ளன. அவர்கள் தங்கள் பதிவுகளில் சொல்லாத கருத்துக்களை நான் எதுவும் புதிதாகச் சொல்லிவிடப் போவதில்லை.  

என்னை இந்தத் தொடர்பதிவைத் தொடருமாறு திருமதி சாந்தி மாரியப்பன் [அமைதிச்சாரல்] அவர்கள் 14.11.2011 அன்றே அழைப்பு விடுத்திருந்தார்கள்.

அமைதிச்சாரல் said...
”உங்களைத் தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்.”



தமிழ்மண நட்சத்திரப் பதிவராக 7.11.2011 முதல் 13.11.2011 வரை ஒரு  வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்புப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும், அதைத் தொடர்ந்து, எனக்கு மட்டுமல்லாது என் வீட்டு கணினிக்கும் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததும், வீட்டில் அடுத்தடுத்த விருந்தினர்கள் வருகையும், அடிக்கடி விருந்தினர்களுடன் வெளியில் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது போன்ற பல்வேறு காரணங்களால் என்னால் அவர்களின் வேண்டுகோளை உடனடியாக நிறைவேற்ற முடியாமல் போனது. 

சரி, ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்பது போல ’நாளடைவில் அவர்களும் மறந்து விடுவார்கள்; நாமும் மறந்து விடலாம்’ என்று தான், நான்
நினைத்திருந்தேன்.

ஆனால் நாம் ஒன்று நினைக்க [தப்பிக்க நினைக்க] தெய்வம் ஒன்று

நினைக்கிறது என்பார்கள். அதுபோலவே ஆகிவிட்டது.





வலைப்பதிவர் மணிராஜ் அவர்கள், ”மழலைகள் உலகம் மகத்தானது” 

என்ற தலைப்பில் நான் தொடர்பதிவு எழுத வேண்டும் என்று

நேற்றைய தன் பதிவினில் அன்புக்கட்டளை இட்டுள்ளார்கள். எனக்கு

மிகவும் பிடித்தமான தெய்வாம்சம் பொருந்திய தெய்வீகப்பதிவர்

அல்லவா! அதுதான் தெய்வ சங்கல்ப்பம் என்று நானும் நினைத்து

எழுதிவிடுவது என்று தீர்மானித்தேன்.





 இராஜராஜேஸ்வரி said


'தொடர அசாதாரண பன்முகத்திறமையாளரான திருவாளர் வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களையும் அழைக்கிறேன்.


இந்த என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய மணிராஜ் என்ற

வலைப்பதிவருக்கு நானும் கூட ஒரு மழலைக்குழந்தை தான்.  






மிகச்சாதாரணமானவனாகிய என்னை, அசாதாரண

பன்முகத்திறமையாளர் என்று ஒரேயடியாகப் புகழ்ந்து

தள்ளியுள்ளார்கள். 




அவர்களின் மழலைக் குழந்தையை அவர்கள் எப்படி

வேண்டுமானாலும் அழைக்கலாம் தானே!



மழலைகளை யார் தூக்கிச்சென்றாலும், என்ன விளையாட்டுக்

காட்டினாலும், கொஞ்சி மகிழ்ந்தாலும், அந்தச் சேயின் மழலை

உள்ளத்தில், தாயின் ஞாபகமும், ஏக்கமும் மட்டும் தானே எப்போதும்

இருந்து கொண்டு இருக்கும்?





அதனால் இவர்களின் அன்பான அழைப்பை என்னால் தட்ட

முடியவில்லை. ஏதோ யாரும் இதுவரை எழுதாத ஒருசில புதிய

விஷயங்களையும், என் சொந்த அனுபவங்களையும் சேர்த்து,

ஞாபகத்திற்கு வந்த ஒரு சிலவற்றை மட்டும் திரட்டி எழுதலாம் என

நினைத்து இதோ ஆரம்பித்து விட்டேன்.




இதை வெளியிடும் நேரத்தில் என் அன்புக்குரிய திருமதி மனோ

சுவாமிநாதன் [முத்துச்சிதறல்] அவர்களிடமிருந்து மேலும் ஒரு

அழைப்பு ..... இதோ:


இந்தத் தொடர்பதிவிற்கு நான் அன்புடன் அழைப்பது:




1. பேரன்களுடன் கொஞ்சி விளையாடும்

திரு.வை.கோபாலகிருஷ்ணன்.



ஒரே கல்லில் இரண்டல்ல, மூன்று மாங்காய்கள்! அதுபோல இந்த என்

ஒரே பதிவினில் எனக்கு அழைப்பு விடுத்துள்ள மூவரையும் திருப்தி

படுத்திவிட்டோம் என்பதில் எனக்கும் கொஞ்சம் திருப்தியே. 




அன்புடன் என்னைப் பதிவிட அழைத்துள்ள மூவருக்கும்

[முப்பெருந்தேவிகளுக்கும்] என் நெஞ்சார்ந்த நன்றிகள். 





என் எழுத்துக்களும் ஒருவேளை மழலை மொழியாகவே கூட 

படிப்பவர்களுக்குத் தோன்றலாம். 




அவ்வாறு இருப்பின் பொருத்தருள்க!  மன்னித்தருள்க!!

”குழல் இனிது, யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.”

எனக்கு மிகவும் பிடித்தமான ஒருசில திருக்குறள்களில் இதுவே

முதலிடம் பெறுவது என்றால் அது மிகையாகாது.


நாம் பெற்றெடுத்த குழந்தைகள் பேசும் மழலைச் சொற்களில் இனம்

நுகராதவரே, புல்லாங்குழல் கேட்க இனிமையுடையது, யாழ் கேட்க

இனிமையுடையது என்பார்கள் என்கிறார், திருவள்ளுவர்.


இந்தக் குறளில் எனக்கு மிக மிகப்பிடித்தது முதல் வரியில்

ஆறாவதாக வரும் “தம்” என்ற வார்த்தையே. 


அது அங்கு ’தம் மக்கள்’ என்று வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ளது. 




அந்த மழலைச்சொல்லை

தம் மகன், தம் மகள், தம் பேரன், தம் பேத்தி மூலம் அனுபவித்து

மகிழ்ந்தவர்களுக்கே இது சுலபமாகப் புரியக்கூடியது.





’குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று; 


குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று’ என்பதனால் அடுத்த

வீட்டுக்குழந்தையை அல்லது அடுத்தவர் குழந்தையைக்

கொஞ்சினாலே நமக்கு இன்பம் ஏற்படுகிறது. 




நாம் அதுபோல் கொஞ்சுவது நமது சொந்த மகனோ அல்லது மகளோ

என்றால்! அதே இன்பம் பேரின்பம் ஆகிவிடுகிறது. 





அதையும் தாண்டி, நாம் கொஞ்ச வாய்ப்புக்கிடைக்கும் குழந்தையானது,

நமது மகனின் மகனோ/மகளோ அல்லது நமது மகளின்

மகனோ/மகளோ, அதாவது நம் சொந்தப் பேரனோ அல்லது

பேத்தியோ என்றால் அதுவே பேரின்பத்தின் உச்சக்கட்டமாகி

விடுகிறது.





உலக ஜனத்தொகை எழுநூறு கோடியை எட்டிவிட்டதாகச்

சொன்னாலும், நம் வீட்டில் புதியதாக ஒரு குழந்தை இன்று

பிறக்கிறது என்றால் அந்த மகிழ்ச்சியை நாம் வார்த்தைகளால்

சொல்லிவிட முடியுமா என்ன! ஜனனம் என்பது ஒரு வரவல்லவோ!!

அதற்கு மிகவும் ஒரு கொடுப்பிணை இருக்க வேண்டுமல்லவோ!!! 




எனக்குத் தெரிந்த ஒரு பாட்டி இருந்தார்கள். 


தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியருகே வரஹூர் 


என்ற சிறிய கிராமம் உள்ளது.



ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியின் போது இங்கு நடைபெறும் உரியடி

உத்ஸவம் உலகப்புகழ் பெற்றது. [ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்வேத

வராகமாக (வெள்ளைப்பன்றியாக) தோன்றி மறைந்து அங்கு வரஹூர்

பெருமாளாக ஸ்ரீ கிருஷ்ணராகக் கோயில் கொண்டுள்ளார்.  ]





எனக்குத் தெரிந்த அந்தப்பாட்டி அந்தக்கோயில் பெருமாளிடம்,

[அதாவது ஸ்ரீ கிருஷ்ணரிடம்] தனக்கு சந்ததி விருத்தியாக வேண்டும்

என்ற நோக்கத்தில் வேண்டிக்கொள்கிறாள்: 

“என் வீட்டு வாசல்படியை பீயால் நீ மொழுகு, 

உன் கோயில் வாசல்படியை நெய்யால் நான் மொழுகுகிறேன்”. 

அதாவது அந்தப்பாட்டிக்கு ஸ்ரீ குட்டிக்கிருஷ்ணன் போல ஒரு  பேரனோ 


அல்லது பேத்தியோ பிறந்து அவர்கள் வீட்டு வாசல்படியில்

அந்தக்குழந்தை மலம்+ஜலம் கழித்து மகிழ்விக்க வேண்டுமாம்.





அவ்வாறு பிராப்தம் ஏற்பட்ட உடனே இவள் ஸ்ரீ கிருஷ்ணனின் 


அந்தக்கோயில் வாசல்படி முழுவதும் நெய்யால் அபிஷேகம் செய்வாளாம். 




எப்பேர்ப்பட்ட ஒரு பிரார்த்தனை! 


நான் மிகவும் வியந்து போனேன்!!



குழந்தைச்செல்வம் என்பது கிடைக்க மிகவும் கொடுத்துத்தான்

வைத்திருக்க வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.


புராணக்கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு கதாபாத்திரம்

“குசேலர்” என்ற ஓர் ஏழை அந்தணர். 




ஸ்ரீகிருஷ்ணர் குட்டிக்கிருஷ்ணராக இருந்தபோது அவரின் பால்ய ஸ்நேகிதர் 


தான் இந்த குசேலர். 



அந்தக் குசேலருக்கு மொத்தம் 27 குழந்தைகள். இதில் எனக்குக்

கொஞ்சம் கூட ஆச்சர்யமே கிடையாது. சொல்லப்போனால் அவர்

மேல் எனக்கு ஒரு பொறாமையே உண்டு. ஏனென்றால், நானும் அதே

புராணகால குசேலர் போல 27 குழந்தைகளுடன், நவீனகால

குசேலனாக இருந்திருக்க வேண்டியவன் தான்!  




குழந்தைகள் மேல் எப்போதுமே எனக்குக் கொள்ளை ஆசை தான்!! 


பல்வேறு நடைமுறைச் சிக்கல்களால் என்னால் இன்று குசேலனாகவும் 


ஆக முடியாமல் குபேரனாகவும் ஆக முடியாமல் ஒரு ரெண்டுங்கெட்டானாக


மட்டுமே ஆக முடிந்துள்ளது.




 

 


  

 


 

 







குசேலர் அபார சம்சாரியாக இருந்து, 27 குழந்தைகளுடன் அவர்

குடும்பமே வறுமையில் வாடியதால், அவர் மனைவியின்

ஆலோசனைப்படி, அந்த ஊருக்கே இராஜாவாக இருந்த பகவான்

ஸ்ரீகிருஷ்ணரை சந்திக்க மிகுந்த தயக்கத்துடன் செல்கிறார்.



நமக்கொரு கஷ்டகாலம் ஏற்படும்போது மட்டும் தானே நமக்குக்

கடவுள் ஞாபகமே வருகிறது! அது போலத்தான் குசேலரின்

மனைவிக்கு அன்று ஸ்ரீகிருஷ்ணரின் ஞாபகம் வந்தது. 





யாரையாவது நாம் பார்க்கச்சென்றால், அதுவும் நமக்கொரு ஒரு

காரியம் அவரால் சாதகமாக முடிய வேண்டும் என்றால், வெறும்

கையை வீசிக்கொண்டு செல்லக்கூடாது. 


மஹாராஜாவையோ, நம்மைவிடப் பெரியவர்களையோ, கோயிலில்

உள்ள தெய்வத்தையோ, குழந்தைகளையோ சந்திக்கச்செல்லும்போது,

நாம் நம் சக்திக்கு ஏற்றபடி ஏதாவது கொஞ்சமாவது புஷ்பமோ, பழமோ,

தின்பண்டமோ எடுத்துச்செல்லவேண்டும் என்பது அந்தக்காலம் முதல்

இன்றுவரை பலராலும் கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கமே.  






தனது அழுக்கடைந்த கிழிந்த வஸ்திரத்தில் (ஆடையில்) சிறிதளவு ஸ்ரீ

கிருஷ்ணருக்கு சிறுவயதில் பிடித்தமான அவல் எடுத்துக்கொண்டு

செல்கிறார். அவரால் முடிந்தது அவ்வளவு தான்.


அரண்மனைக்குள் நுழையவே அனுமதி மறுக்கப்படுகிறது.


மிகவும் சிரமப்பட்ட பின்னரே, தான் வந்துள்ள செய்தியை அரசருக்குத்

தெரிவிக்க வேண்டி மன்றாடுகிறார். 




காவலர்கள் கடைசியாக அவர்மேல் இரக்கம் கொண்டு அரசரான பகவான் 


ஸ்ரீகிருஷ்ணரிடம் குலேசர் என்ற பெயரில் ஒரு ஏழை அந்தணர் அரண்மனை 


வாசலில் நெடுநேரமாக காத்திருப்பதாகவும், ராஜாவை தான் பார்த்தே 


ஆகவேண்டும் என பிடிவாதம் செய்வதாகவும் லேசாகத் தெரிவிக்கின்றனர்.  



குசேலர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டதுமே, ராஜாதிராஜாவான

ஸ்ரீகிருஷ்ணரே தன் பட்டுப்பீதாம்பரங்களுடன், அரண்மணை

வாசல்வரை ஓடிவந்து, பரம ஏழையான குசேலரைக்

கட்டித்தழுவிக்கொண்டு வரவேற்று, விருந்தளித்து உபசரிக்கிறார். 






அவர்கள் இருவரும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று

விடுகிறார்கள். அவர்களிடையே ஏழை பணக்காரர்; ராஜா குடிமகன்;

செல்வம் வறுமை என்ற எந்த பாகுபாடும் இல்லை. 




இருவருமே மழலைகால மலரும் நினைவுகளுக்குத் திரும்பி, 


மிகுந்த நட்புடன் பழகிய அந்த அருமையான, இனிமையான 


நாட்களுக்குச் சென்று குழந்தைகளாகவே மாறி விடுகின்றனர். 



குசேலருக்கு ஸ்ரீகிருஷ்ணரிடம் எதுவுமே உதவி கேட்கத்

தோன்றவில்லை. மிகவும் பிரமித்துப்போய் உள்ளார். 




”எனக்கு நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்?” என்று

பகவானே குசேலனிடம் கேட்கிறார். 





தான் கொண்டுவந்துள்ள அவலைக்கூட கொடுக்கத்தோன்றாமல்

மிகுந்த வெட்கத்துடன், குசேலர் திரும்பிச்செல்ல நினைக்கிறார். 


பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குத் தெரியாத விஷயமா என்ன?  






பகவான் குசேலரரின் அழுக்கு வஸ்திரத்தில் முடிந்து

வைத்துள்ள அவலைத் தானே கேட்டு வாங்கி, மிகுந்த மகிழ்வுடன்

தன் வாயில் சிறிது போட்டுக்கொள்ள, உடனே அந்த ஏழைக் 


குசேலரின் குடும்பம் பெரிய பணக்கார குபேரர் குடும்பமாக மாறி விடுகிறது. 





மிகச் சாதாரண மிகவும் மலிவான பொருட்களாயினும்,

பக்தன் உள் அன்புடன் தனக்கு அளிக்கும் பொருட்களில் தான்

பகவான், தானும் ஆனந்தம் அடைந்து, அவனையும்

ஆனந்தப்படுத்துகிறான் என்பதே இதிலிருந்து நாம் உணர வேண்டிய

விஷயமாகும். 




மழலைப் பருவத்தில் மனதில் அன்பு மட்டுமே பெருக்கெடுத்து

ஓடுகிறது. 





குழந்தைகள் மனதில் மட்டும் தான் அன்பு பெருக்கெடுத்து ஓடும். 


மழலைகள் இருக்குமிடம் தான் அன்புகள் பரிமாறப்படும் இடம். 


அதுவே பூத்துக்குலுங்கும் புஷ்பங்கள் நிறைந்த நந்தவனம். 


அங்கு அன்பென்னும் அருமையான வாசனையுள்ள மலர்களைத் தவிர  


வேறு எந்த பாகுபாடுகளுக்கும் இடமே இல்லை. 


இந்த அன்பென்னும் மழலைகள் தோட்டத்துக்குள் நாம் 


சென்று விட்டால், இறைவனை மிகவும் எளிதாகவே அடைந்து 


விடலாம் என்பதையும் நாம் இந்தக்குசேலர் கதை மூலம் 


நன்கு அறிய முடிகிறது.



”அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்”

என்கிறார் திருவள்ளுவர் தனது மற்றொரு குறளில்.

அதாவது, தம் குழந்தைகள் தம் பிஞ்சுக்கைகளால் இட்டும், தொட்டும்

துழாவிய உணவு, பெற்றோருக்கு அமிர்தத்தைவிட மிகுந்த இனிமை

தருவதாகும் என்று பொருள்படக் கூறியுள்ளார்.    



நன்றிப் பயந்தூக்கா நாண் இலியும் சான்றோர்முன்

மன்றில் கொடும்பாடு உரைப்பானும், நன்று இன்றி

வைத்த அடைக்கலம் கொள்வானும், - இம்மூவர்

எச்சம் இழந்து வாழ்வார். 

[ திரிகடுகம் ]  

செய்நன்றி மறந்த நாணமில்லாதவனும், சான்றோர் முன்னிலையில்

பொய்ச்சாட்சி சொல்பவனும்

, அடைக்கலப் பொருளைக் கவர்ந்து கொள்பவனும், மக்கள் பேறு

இல்லாமல் துன்புறக்கூடும் என்கிறது, இந்தச்செய்யுள்.


குலாமை, சூலின் படும் துன்பம், ஈன்றபின்

ஏலாமை, ஏற்ப வளர்பு அருமை, சால்பவை
வல்லாமை, வாய்ப்ப அறிபவர் உண்ணாமை,
கொல்லாமை நன்றால், கொழிந்து.
[ சிறுபஞ்சமூலம் ]


மலட்டுத்தன்மையால் துன்பம், கர்ப்பம் தரித்துக் குழந்தை

பெறும்போது துன்பம், பெற்றபின் ஏற்காமையால் வரும் துன்பங்கள்,

குழந்தையை வளர்ப்பதில் உள்ள துன்பங்கள், வளர்த்தால் குழந்தை

நல்ல குணங்களைப் பெறாது இருத்தலால் வரும் துன்பங்கள்

ஆகியவற்றை அறிந்தவர் உயிர்களைக் கொல்லாதிருத்தலும், புலாலை

உண்ணாதிருத்தலும் நல்லது என்று சிறுபஞ்சமூலத்தில் இந்த

செய்யுளில் சொல்லப்பட்டுள்ளது.


குழவி தளர்நடை காண்டல் இனிதே;

அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே

வினையடையான் வந்து அடைந்து வெய்து உறும்போழ்து;

மனன் அஞ்சான் ஆகல் இனிது.

[ இனியவை நாற்பது ]

குழந்தையின் தளர் நடையைக் காணுதல் இனியது. அக் குழந்தையின்

மழலைச் சொற்களைக் கேட்டல் அமிர்தத்தைவிட இனியது.

தீவினைகளுக்கு உரிய விளைவு நம்மை வந்து அடைந்து

துன்பப்படுத்தும் போது அஞ்சாத மனம் கொண்டிருத்தல் இனியது,

என்கிறது ‘இனியவை நாற்பது’ விலுள்ள இந்தச்செய்யுள்.


கற்பு உடுத்து, அன்பு முத்து, நாண் மெய்ப் பூசி,

நற்குண நற்செய்கை பூண்டாட்கு - மக்கட்பேறு

என்பது ஓர் ஆக்கமும் உண்டாயின், இல் அன்றே
,
கொண்டாற்குச்செய் தவம் வேறு.

[ நீதிநெறிவிளக்கம் ]


பொருள்: 

கற்பினையே நல்ல ஆடையாக உடுத்திக் கணவர் மேல் காட்டும்

அன்பை மலராகச் சூடி, நாணம் எனும் பெண்மை குணத்தை

உடம்பெல்லாம் சாந்தாகப்பூசி நற்குணங்களும், நற்செய்கைகளும்

ஆகிய ஆபரணங்களை அணிந்துள்ள நல்ல மனைவிக்குக் குழந்தைப்

பேறு மேலும் கூடுதலான ஒரு செல்வமாகும். இத்தகு மனைவியை

அடைந்தவனுக்கு, நன்மை கருதி, வேறு எந்தத் தவமும் செய்ய

வேண்டுவது இல்லை.  



எங்கள் குடும்பம் மிகப்பெரியது. ஆலமர விழுதுகள் போல மழலைச்

செல்வங்கள் நிறைந்து காணப்படுவது. குடும்பத்தில் ஏதாவது ஒரு

சிறிய கொண்டாட்டம் என்றாலும் என் அக்காமார்களின்,

அண்ணாவின், மைத்துனரின் பேரன், பேத்திகள், என் பேரன்கள் பேத்தி

என என்னைச் சுற்றி ஒரு நாற்பது மழலைகள் நிறைந்திருக்கும்.

அவர்களுக்கு ஏற்றாற்போல நகைச்சுவையான கதைகளை நான் கூற,

அவர்கள் அனைவரும் சிரித்து மகிழ்வார்கள். அதுபோன்ற நேரங்களில்

நானும் அவர்களுடன் ஒரு மழலையாகவே மாறிவிடுவேன். அந்த

இன்பத்தை அடிக்கடி அனுபவித்து வரும் எனக்கு மட்டுமே அதில்

உள்ள சுகத்தை நன்கு உணர முடியும்.




இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் என்னிடம் அன்று

சிறுவயதில் கதை கேட்டு மகிழ்ந்த இரண்டு பெண் குழந்தைகளே,

பிற்காலத்தில், எனக்கு மருமகள்களாக வாய்த்தது தான். 


எல்லாம் கடவுள் செயல்! 

    


மழலைகள் உலகம் மகத்தானது! 

அதுவே நம்

மனக்கவலைகளுக்கு மருந்தானது!!




என்றும் அன்புடன் தங்கள்




வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




இந்த மகத்தான மழலைகள் உலகத்தைப் பற்றி அவரவர்கள்

தங்களின் அனுபவத்துடன் கூடிய பதிவாகத் தொடர்ந்து எழுத

வேண்டுமாய் கீழ்க்கண்ட இனிய தோழிகளையும், அருமை

நண்பர்களையும் அன்புடன் அழைக்கின்றேன்:


1) Miss. NUNMADHI அவர்கள்


2) Mrs. ANGELIN அவர்கள்


3) Mr. A.R. RAJAGOPALAN அவர்கள்


4) Mr. K S S  RAJH அவர்கள்

அன்புடன் vgk

104 comments:

  1. மூவர் அழைத்ததால் மூவருக்கு சேர்த்து பெரிய பதிவாக எழுதிவிட்டிர் போல...



    அழகிய வடிவத் மழலைப்பேசுகிறது...

    எனக்கு அழைப்பு வந்திருக்கிறது விரைவில் நானும் என் மழலை உலகை திரும்பி பார்ப்பேன்...

    ReplyDelete
  2. உங்கள் கதைகளையே படித்து மகிழ்ந்த எங்களுக்கு, உங்கள் இந்த பரிமாணம் புதிது! இனிது!

    ReplyDelete
  3. யாரும் இதுவரை எழுதாத ஒருசில புதிய

    விஷயங்களையும், என் சொந்த அனுபவங்களையும் சேர்த்து,

    ஞாபகத்திற்கு வந்த ஒரு சிலவற்றை மட்டும் திரட்டி எழுதலாம் என

    நினைத்து இதோ ஆரம்பித்து விட்டேன்./

    அசத்தலான அனுபவ வரிகளுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் என்னிடம் அன்று
    சிறுவயதில் கதை கேட்டு மகிழ்ந்த இரண்டு பெண் குழந்தைகளே,
    பிற்காலத்தில், எனக்கு மருமகள்களாக வாய்த்தது தான். எல்லாம்
    கடவுள் செயல்./

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்..
    இனிய குடும்பத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. தம் மகன், தம் மகள், தம் பேரன், தம் பேத்தி மூலம் அனுபவித்து

    மகிழ்ந்தவர்களுக்கே இது சுலபமாகப் புரியக்கூடியது./

    புரிந்தவர்களாலேயே புரிந்து மகிழும் அற்புத வரிகளுக்கும்..
    அருமையான ஆக்கத்திற்கும் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. மகத்துவ உலகை பற்றி கவித்துவமாய் சொன்ன விதம்
    பிரமாதம்
    பிரமாண்டம்
    உங்களின் அன்பு கட்டளைக்கு நன்றி.
    வெகு விரைவில் எழுதுகிறேன்.

    ReplyDelete
  7. அழைப்புக்கு நன்றி பாஸ் ஏற்கனவே இந்த தலைப்பில் LAKSHMI மேடம் அழைத்து எழுதிவிட்டேன்

    இங்கே-
    http://www.nanparkal.com/2011/11/blog-post_3893.html

    ReplyDelete
  8. பதிவு அருமை அழகாக சொல்லியிருக்கீங்க.....

    எனக்கு அந்த குழந்தைகள் கண் சிமிட்டும் படம் மிகவும் பிடிச்சிருக்கு

    ReplyDelete
  9. பதிவில் சொல்லப்பட்டிருக்கும் புராண கதைகள் நல்லாயிருக்கு.அந்த குழந்தையின் படத்தை ஆசைதீர பதிந்திட்டீங்க போலருக்கே.

    ReplyDelete
  10. மிகவும் ரசனையான பதிவு நல்லா இருக்கு.

    ReplyDelete
  11. மழலைகள் படங்களும் பதிவும் ஜோர்..

    ங்கா.. ங்கா... என்று சப்புக் கொட்டிக் கொண்டு படித்தேன்..

    ReplyDelete
  12. அழகாக கூறியிருக்கிறீர்கள்//எனக்கு மிகவும் பிடித்தமான ஒருசில
    திருக்குறள்களில் இதுவே// இருவர் அழைத்திருக்கிறார்கள் .வெகு விரைவில் என் பார்வையில் மழலை உலகம் பற்றி எழுதுகிறேன் .

    ReplyDelete
  13. //. அங்கு

    அன்பென்னும் அருமையான வாசனையுள்ள மலர்களைத் தவிர வேறு

    எந்த பாகுபாடுகளுக்கும் இடமே இல்லை. இந்த அன்பென்னும்

    மழலைகள் தோட்டத்துக்குள் நாம் சென்று விட்டால், இறைவனை

    மிகவும் எளிதாகவே அடைந்து விடலாம்//

    அருமையாக சொல்லியிருக்கீங்க.

    குழந்தை படங்கள் அனைத்தும் மனதை கொள்ளைக்கொள்கிறது.

    ReplyDelete
  14. ஐயா... நீளமா இருந்தாலும் அருமையான கட்டுரை...
    மழலைகள் உலகம் நம்மையும் மழலைகளாக்கிடும்

    ReplyDelete
  15. மழலைகள் பற்றிய கருத்துக்கள், 'நீதிநெறி விளக்கம், இனியவை நாற்பது' இவற்றிலிருந்து உதாரணங்கள் அனைத்துமே அருமை!!

    ReplyDelete
  16. கதைகேட்ட குழந்தைகளே மருமகள்களாய்..... ஆஹா அருமை! மழலைகள் பதிவில் உங்கள் இடுகை அற்புதம்!

    ReplyDelete
  17. மனக்கவலைகளுக்கு மருந்தாகும் மழலைகள் உலகம் பற்றி மிக அருமையான பகிர்வு.

    ReplyDelete
  18. குழந்தை மனதில்தான் அன்பு பெருக்கெடுத்து ஓடும். மழலைகள்

    இருக்குமிடம் தான் அன்புகள் பரிமாறப்படும் இடம். அதுவே

    பூத்துக்குலுங்கும் புஷ்பங்கள் நிறைந்த நந்தவனம். அங்கு

    அன்பென்னும் அருமையான வாசனையுள்ள மலர்களைத் தவிர வேறு

    எந்த பாகுபாடுகளுக்கும் இடமே இல்லை. இந்த அன்பென்னும்

    மழலைகள் தோட்டத்துக்குள் நாம் சென்று விட்டால், இறைவனை

    மிகவும் எளிதாகவே அடைந்து விடலாம்//

    மிக அருமையாக மழலைகள் பற்றி சொல்லிவிட்டீர்கள்.

    கதை கேட்ட குழந்தை மருமகளாய் வந்தது மகிழ்ச்சி. அந்த குழந்தை தன் குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது தான் மாமாவிடம் கேட்ட காலங்களை நினைத்துப் பார்ப்பார்கள் அல்லவா! அற்புதம்.

    உங்களை தொடர் பதிவுக்கு அழைத்த
    மூவருக்கும் நன்றிகள்.

    உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. அசத்தலான பகிர்வு... மழலைச் செல்வம் பற்றிய செய்யுள்கள் அதன் அர்த்தம் என அசத்திட்டீங்க....

    ReplyDelete
  20. மிகப் பெரிய பதிவு... மழலைகள் படங்களும் அருமை..

    ReplyDelete
  21. திரிகடுகம் சொல்வது மிகச் சரியே... மழலைச் செல்வத்திற்குக் கொடுத்து வைக்காதவர்கள் மிகப்பாவம்தான். உங்களிடம் கதை கேட்ட குழந்தைகள் மருமகள்களாக... எத்தனை இனிமையான விஷயம். மூவர் அழைத்து எழுதியதல்லவா... முக்கனிபோல் இனித்தது. அருமை... (த.ம.7)

    ReplyDelete
  22. மழலை உலகம் பற்றி ஒரு மகத்தான பதிவு. திருக்குறள், இனியவை நாற்பது, நீதிநெறி விளக்கம் போன்றவற்றிலிருந்து பாடல்கள் எடுத்துக்கூறி பதிவைச் சிறப்பித்துவிட்டீர்கள். குழந்தைகள் உலகில் வாழ நிரந்தர விசா பெற்றவர் என்பது உங்கள் பதிவிலிருந்தே புரிகிறது. பாராட்டுகள் சார்.

    ReplyDelete
  23. பன்முக வித்தகரே, பதிவு அருமை. பாராட்டுக்கள்

    ReplyDelete
  24. அழகான கருத்துக்களாலும், அனுபவங்களாலும் பதிந்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
  25. செய்யுள்களுடனும் அனுபவங்களுடனும் ஒரு அருமையான பகிர்தல் பதிவு.பகிர்விற்கு நன்றி.இதற்கு முன் உங்கள் பதிவுக்கு வந்த போது பதிவைப் படிக்க முடியாமல் ஏதோ பிரச்சனை இருந்தது.இப்பொழுதுதான் மீண்டும் வந்து படித்தேன்.நன்றி

    ReplyDelete
  26. அழகான பகிர்தல்..அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்!

    ReplyDelete
  27. அழகான பகிர்தல்..அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்!

    ReplyDelete
  28. 1. Some one said: "Whenever a child is born, God is not disappointed with humanity".

    2. Every time I read or hear Kuchelar's story, I am really moved. What a wonderful 'Balya' friendship that Lord Krishna and Kuchelar had!

    3. It is my wish that all parents who are not blessed with kids for some reason or the other must adopt a child. It's certain that the parents' life would become 'spring' time again.

    ReplyDelete
  29. தகுந்த இடத்தில் திருக்குறளும், புராணக் கதைகளும் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் அழகாக மழலை உலகிற்கு கொண்டு செல்கிறது சார்.

    மேலும், அந்த நீதி நெறி விளக்கம் அருமை. மிகவும் ரசித்துப் படித்தேன்.

    என்னையும் தொடர் பதிவிட அழைத்தமைக்கு நன்றி சார்.

    விவரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில், எழுதுகிறேன் VGK சார்.

    ReplyDelete
  30. படங்களுடன் நீங்கள் சேகரித்து பகிர்ந்த அனுபவங்கள் ,நீதி நெறி விளக்கம், இனியவை நாற்பது போன்றவை மிக அருமையாக இருந்தது...நாற்பது குழந்தைகளுக்கு நடுவே நீங்கள் நினைக்கவே அற்புதமாக இருக்கிறது...!!

    உங்களுக்கு என் பாராட்டுகள் + வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. குழந்தைகள் படத்துடனும், செய்யுள்களுடனும் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  32. @ கவிதை வீதி... // சௌந்தர் /
    மிக்க நன்றி. தாங்களும் எழுதுங்கள்.
    இணைப்பை எனக்கு மெயிலில் அனுப்புங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. middleclassmadhavi said...
    //உங்கள் கதைகளையே படித்து மகிழ்ந்த எங்களுக்கு, உங்கள் இந்த பரிமாணம் புதிது! இனிது!//

    உங்களின் இந்த விரிவான மனம் திறந்த, மிகப்பெரிய பின்னூட்டமும் எனக்குப் புதியதாகவும் இனிமையாகவும் உள்ளது. நன்றி!

    ReplyDelete
  34. @ இராஜராஜேஸ்வரி
    //புரிந்தவர்களாலேயே புரிந்து மகிழும் அற்புத வரிகளுக்கும்..
    அருமையான ஆக்கத்திற்கும் பாராட்டுக்கள்..//

    என்னை முழுவதுமாகப் புரிந்து கொண்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி.

    தாங்கள் அடிக்கடி அள்ளித்தரும் உற்சாக பானமல்லவா [Energy Tonic] என்னை எழுதத்தூண்டுகிறது!
    பெருமகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

    ஏறிவர உதவிய ஏணி, தோனி, கோணி போன்றவற்றை என்றும் மறக்க மாட்டேன். ;))))))

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  35. A.R.ராஜகோபாலன் said...
    //மகத்துவ உலகை பற்றி கவித்துவமாய் சொன்ன விதம்
    பிரமாதம்; பிரமாண்டம்
    உங்களின் அன்பு கட்டளைக்கு நன்றி.
    வெகு விரைவில் எழுதுகிறேன்.//

    பிரமாதமான, பிரும்மாண்டமான கருத்துக்களுக்கு நன்றிகள்.

    தொடரை எழுத ஏற்றுக்கொண்டதற்கு நன்றிகள். வாழ்த்துக்கள். வெளியிட்டதும் LINK மெயில் மூலம் தயவுசெய்து அனுப்புங்கள்.

    ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  36. K.s.s.Rajh said...
    //அழைப்புக்கு நன்றி பாஸ் ஏற்கனவே இந்த தலைப்பில் LAKSHMI மேடம் அழைத்து எழுதிவிட்டேன்

    இங்கே-
    http://www.nanparkal.com/2011/11/blog-post_3893.html//

    மிக்க நன்றி.இப்போது தான் படித்தேன். பின்னூட்டமும் கொடுத்துள்ளேன்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  37. K.s.s.Rajh said...
    //பதிவு அருமை அழகாக சொல்லியிருக்கீங்க.....

    எனக்கு அந்த குழந்தைகள் கண் சிமிட்டும் படம் மிகவும் பிடிச்சிருக்கு//

    நன்றி. அந்தக்குழந்தை கண் சிமிட்டி, கழுத்தை அசைக்கும் படம், முதன்முதலாக நம் ஆச்சி மேடம் அவர்களின் வலைப்பக்கத்தின் முகப்பில் தான் பார்த்தேன். எவ்ளோ அழகு! கஷ்கு முஷ்கு என்று வியந்து போனேன்.

    அதே நினைவலைகளில் இருந்து வந்த எனக்கு 24.04.2011 அன்று பிறந்த புதுப்பேரன் இன்று அதைவிட சூப்பராக நேரிலேயே தரிஸனம் கொடுத்து என் மேல் படுத்துக்கொண்டு என் தொந்தியில் தொப்தொப் என்று தன் பிஞ்சு விரல்களால் அடித்து மகிழ்விக்கிறான். இவனும் சரியான கஷ்கு, முஷ்குப்பேர்வழியே! ))))

    மழலைச் செல்வம் மகத்தானதே!
    மனக்கவலைகளைத் துடைத்து
    மனமகிழ்ச்சி அளிப்பவையே!

    மகிழ்ச்சியுடன் vgk

    ReplyDelete
  38. thirumathi bs sridhar said...
    //பதிவில் சொல்லப்பட்டிருக்கும் புராண கதைகள் நல்லாயிருக்கு.அந்த குழந்தையின் படத்தை ஆசைதீர பதிந்திட்டீங்க போலருக்கே.//

    நன்றி மேடம்.
    ஆம் உங்கள் வலைப்பக்க முகப்பிலிருந்து திருடப்பட்டக் குழந்தைதான் அது.

    இதற்கு முன் மேலேயுள்ள பின்னூட்டத்திற்கு நான் எழுதியுள்ள பதிலையும் படியுங்கள்.

    குசேலருக்கு பிறந்தது 27 குழந்தைகள் எனக்காட்டுவதற்காகவே, அந்தக்குழந்தையின் படத்தை 27 முறைகள் ஆசைதீரக் காட்டியுள்ளேன்.

    என் பேரன் அநிருத் அதைவிட மிகவும் சூப்பரோ சூப்பராக இருக்கிறேன்.

    எல்லாம் இறைவன் அருள். )))))))

    அன்புள்ள vgk

    ReplyDelete
  39. @ Lakshmi said...
    மிக்க நன்றி, அம்மா.

    @ ரிஷபன் said...
    மிக்க நன்றி, சார்.

    @ angelin said...
    மிக்க நன்றி, மேடம்.
    அதற்குள் வெகு வேகமாகவே எழுதி வெளியிட்டு விட்டீர்களே! பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    நன்றிகள், மகிழ்ச்சிகள்!; ))))))

    ReplyDelete
  40. @ RAMVI said...
    அதே போல தங்கள் பின்னூட்டமும் என் மனதைக்கொள்ளை கொள்கிறது. நன்றி.

    @ தமிழ்வாசி பிரகாஷ் said...
    மிகவும் சந்தோஷம், பிரகாஷ்.

    @ மனோ சாமிநாதன் said...
    //மழலைகள் பற்றிய கருத்துக்கள், 'நீதிநெறி விளக்கம், இனியவை நாற்பது' இவற்றிலிருந்து உதாரணங்கள் அனைத்துமே அருமை!!//

    மிக்க நன்றி, மேடம்.
    நான் எழுதி முடித்து வெளியிடும் நேரம் தங்கள் அழைப்பும் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    என்னை தங்கள் நினைவில் இன்றும் நிலை நிறுத்தியுள்ளது, நான் செய்த புண்ணியம் அல்லவோ?)))))))

    தாங்கள் சீமந்த முஹூர்த்தத்திற்கு நேரில் வருகை தந்து சிறப்பித்து, அதன் மூலம் பிறந்த பொடியன் (7 மாதமே ஆகும் பேரன்) சூப்பரோ சூப்பராக மகிழ்வித்து வருகிறான்.

    என் மனக்கவலைகளுக்கு நல்ல மருந்தாக உள்ளான்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  41. ஷைலஜா said...
    //கதைகேட்ட குழந்தைகளே மருமகள்களாய்..... ஆஹா அருமை! மழலைகள் பதிவில் உங்கள் இடுகை அற்புதம்!//

    மிக்க நன்றி!
    கிளி கொஞ்சும் கருத்துக்கள். ))))
    மிகவும் சந்தோஷம்.
    எல்லாமே இறைவன் செயல் தான்.
    vgk

    ReplyDelete
  42. @ ராமலக்ஷ்மி said...
    மிக்க நன்றி.

    @ கோமதி அரசு said...
    ////குழந்தை மனதில்தான் அன்பு பெருக்கெடுத்து ஓடும். மழலைகள்
    இருக்குமிடம் தான் அன்புகள் பரிமாறப்படும் இடம். அதுவே
    பூத்துக்குலுங்கும் புஷ்பங்கள் நிறைந்த நந்தவனம். அங்கு அன்பென்னும் அருமையான வாசனையுள்ள மலர்களைத் தவிர வேறு எந்த பாகுபாடுகளுக்கும் இடமே இல்லை. இந்த அன்பென்னும் மழலைகள் தோட்டத்துக்குள் நாம் சென்று விட்டால், இறைவனை மிகவும் எளிதாகவே அடைந்து விடலாம்////

    மிக அருமையாக மழலைகள் பற்றி சொல்லிவிட்டீர்கள்.

    கதை கேட்ட குழந்தை மருமகளாய் வந்தது மகிழ்ச்சி. அந்த குழந்தை தன் குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது தான் மாமாவிடம் கேட்ட காலங்களை நினைத்துப் பார்ப்பார்கள் அல்லவா! அற்புதம்.

    உங்களை தொடர் பதிவுக்கு அழைத்த
    மூவருக்கும் நன்றிகள்.

    உங்களுக்கு வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி.

    எல்லாமே இறைவன் அருள். இதில் நம் முயற்சிகள் பெரிதாக ஏதும் இல்லை. பிராப்தம் அதுபோல அமைந்தது. )))))

    என்னைத் தொடர்பதிவிட அழைத்த முப்பெரும் தேவியருக்கும் தாங்கள் நன்றி கூறியிருப்பது எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. Great! ))))

    வாழ்த்துக்களுக்கும், பெரியதொரு பின்னூட்டத்திற்கும், என் நன்றிகள்.
    அன்புடன் vgk

    ReplyDelete
  43. @ வெங்கட் நாகராஜ் said...
    மிக்க நன்றி, வெங்கட்.

    @ சிநேகிதி said...
    மிக்க நன்றி.

    @ கணேஷ் said...
    //திரிகடுகம் சொல்வது மிகச் சரியே... மழலைச் செல்வத்திற்குக் கொடுத்து வைக்காதவர்கள் மிகப்பாவம்தான். உங்களிடம் கதை கேட்ட குழந்தைகள் மருமகள்களாக... எத்தனை இனிமையான விஷயம். மூவர் அழைத்து எழுதியதல்லவா... முக்கனிபோல் இனித்தது. அருமை... (த.ம.7)//

    தங்களின் விரிவான பின்னூட்டமும் முக்கனிபோல சுவை மிகுந்தது, சார்.
    மிக்க நன்றி ;))))))

    கீதா said...
    //மழலை உலகம் பற்றி ஒரு மகத்தான பதிவு. திருக்குறள், இனியவை நாற்பது, நீதிநெறி விளக்கம் போன்றவற்றிலிருந்து பாடல்கள் எடுத்துக்கூறி பதிவைச் சிறப்பித்துவிட்டீர்கள். குழந்தைகள் உலகில் வாழ நிரந்தர விசா பெற்றவர் என்பது உங்கள் பதிவிலிருந்தே புரிகிறது. பாராட்டுகள் சார்.//

    தங்களின் அழகான பின்னூட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். புதிய Follower ஆகியுள்ளதற்கும் நன்றிகள்.
    Welcome to you, Madam ! ))))) vgk

    ReplyDelete
  44. G.M Balasubramaniam said...
    //பன்முக வித்தகரே, பதிவு அருமை. பாராட்டுக்கள்//
    மிக்க நன்றி, ஐயா.

    @ நம்பிக்கைபாண்டியன் said.
    //நம்பிக்கையளிக்கும் கருத்துக்களுக்கு நன்றிகள், சார்//

    @ raji said...
    மிக்க நன்றி.
    ஆமாம். நேற்று இந்தப்பதிவை வெளியிடுவதில் எனக்கு பலவித சோதனைகள் அடுத்தடுத்து ஏற்பட்டு வெறுப்பேற்றி விட்டது. என் கம்ப்யூட்டரில் கொஞ்ச நாட்களாகவே பலவித கோளாறுகள்.

    வெளியிட்ட உடனேயே மூன்று பேர்கள், ”ஒன்றும் சரியாகப் படிக்க முடியவில்லை” Jam ஆகியுள்ளது என்று தெரிவித்து விட்டனர். ஆனால் என் பதிவை நான் பார்த்தால் அழகாகவே தெரிந்தது.

    ஒரே குழப்பமாகி விட்டது. பிறகு அதை Withdraw செய்து ஏதேதோ adjustment செய்து alignment சரிவராமல், முழு திருப்தியில்லாமல், இரண்டாவதாக ஒரு பதிவு வெளியிட்டேன்.

    என் பொறுமைக்கு பெரிய ஒரு சோதனை கொடுத்துவிட்டது. பிறகு வெளிநாட்டிலிருந்து இங்கு வந்துள்ள என் பெரிய பையன் ஏதேதோ செய்தார். அப்படியும் alignment சரியில்லாமல் 100% Perfection இல்லாமல் வெளியிட்டதில் எனக்கு கொஞ்சம் வருத்தமே.

    அதனால் உங்களைப்போன்ற சிலருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    மழலையைப்பற்றிய பதிவாகையால் அது ஒரு maturity இல்லாமல் அமைந்து விட்டதோ என்னவோ?

    ReplyDelete
  45. @ ஸாதிகா said...
    //அழகான பகிர்தல்..அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்!//

    மிக்க நன்றி, மேடம்.

    @ D. Chandramouli said...
    மிக்க நன்றி, சார். தாங்கள் சொல்லியுள்ள ஆலோசனை அருமை.

    @ nunmadhi said...
    வருகைக்கு மிக்க நன்றி கெளரி.

    என் அழைப்பை அன்புடன் ஏற்றதற்கும் மிக்க நன்றி லக்ஷ்மி.

    தங்கள் பதிவை ஆவலுடன் படிக்கக் காத்திருக்கிறேன், ராணி.

    பதிவிட்டவுடன் மெயில் மூலம் லிங்க் அனுப்பவும், நுண்மதி.

    மிக்க நன்றி ராணி ஆனந்த்; ராணி கிருஷ்ணன்; கெளரி லக்ஷ்மி; நுண்மதி வேறு ஏதாவது பெயர்கள் விடுபட்டிருக்குமோ? ; ))))))

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  46. நீங்கள் அனுபவித்த மழலை உலகத்தை மிக நேர்த்தியாக பகிர்ந்தமை அருமை.

    ReplyDelete
  47. Kousalya said...
    //படங்களுடன் நீங்கள் சேகரித்து பகிர்ந்த அனுபவங்கள் ,நீதி நெறி விளக்கம், இனியவை நாற்பது போன்றவை மிக அருமையாக இருந்தது...நாற்பது குழந்தைகளுக்கு நடுவே நீங்கள் நினைக்கவே அற்புதமாக இருக்கிறது...!!

    உங்களுக்கு என் பாராட்டுகள் + வாழ்த்துக்கள்//

    என் இஷ்டதெய்வம் ஸ்ரீராமரின் தாயாரின் வருகை, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    40 குழந்தைகளின் நடுவே நான் ....

    உங்கள் பின்னூட்டமும் நினைக்கவே அற்புதமாக உள்ளது, எனக்கும்.
    நன்றி ! ;))))


    கோவை2தில்லி said...
    //குழந்தைகள் படத்துடனும், செய்யுள்களுடனும் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்.//

    மிக்க நன்றி, மேடம்.

    ReplyDelete
  48. asiya omar said...
    //நீங்கள் அனுபவித்த மழலை உலகத்தை மிக நேர்த்தியாக பகிர்ந்தமை அருமை.//

    அன்பான வருகைக்கும், நேர்த்தியான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. vgk

    ReplyDelete
  49. anbulla gopu,

    "mazhalaigal ulagam" padithen. Migavum arpudam; therinda kuchelar kadaidan; aanal neengal solliya vidam pramadam. Ella kadaigalaiyum, neengal sonnadupola, en kanini sowkiamaga irukkumpodu padithu varigiren.

    m j raman, vashi.

    ReplyDelete
  50. குசேலரின் 27 குழந்தைகளும் இங்கே விளையாடிக்கிட்டிருக்காங்க .. ரொம்ப அழகாருக்கு.

    அனுபவ வரிகள் அசத்தல்..

    நேத்து வந்த இடுகை எனக்கு சரியா தெரிஞ்சுதே.

    ReplyDelete
  51. Manakkal said...
    //anbulla gopu,

    "mazhalaigal ulagam" padithen. Migavum arpudam; therinda kuchelar kadaidan; aanal neengal solliya vidam pramadam. Ella kadaigalaiyum, neengal sonnadupola, en kanini sowkiamaga irukkumpodu padithu varigiren.

    m j raman, vashi.//

    Dear Sir,

    Namaskarams. Well & would like to hear the same from you.

    Thanks for your Comments.

    As you said, you may start reading my earlier articles one by one & Please do not forget to offer your valuable comments then & there.

    You are requested to start from "ஜாங்கிரி" to "HAPPY இன்று முதல் HAPPY" released by me recently, when I was selected as a STAR WRITER BY TAMILMANAM FOR 1 WEEK FROM 7.11.2011 TO 13.11.2011.

    LINK FOR ஜாங்கிரி:
    http://gopu1949.blogspot.com/2011/11/blog-post.html

    LINK FOR
    ”HAPPY இன்று முதல் HAPPY”
    http://gopu1949.blogspot.com/2011/11/happy-happy.html

    Total 28 articles.

    Affectionately yours,
    vgk [GOPU]

    ReplyDelete
  52. அமைதிச்சாரல் said...
    //குசேலரின் 27 குழந்தைகளும் இங்கே விளையாடிக்கிட்டிருக்காங்க .. ரொம்ப அழகாருக்கு.

    அனுபவ வரிகள் அசத்தல்..

    நேத்து வந்த இடுகை எனக்கு சரியா தெரிஞ்சுதே.//

    வருகைக்கும் அசத்தலான அருமையான பின்னூட்டத்திற்கும் மிக்க ந்ன்றி, மேடம்.

    நான் உள்ளே நுழைய எப்போதும் உபயோகிப்பது GOOGLE CHROME. அதை உபயோகிப்பவர்களுக்கு அது சரியாகத் தெரிந்திருக்கும் என்றும், INTERNET EXPLORER மூலம் உள்ளே செல்பவர்களுக்கு மட்டும் பிரச்சனையாக அது படிக்க முடியாமல் எழுத்துக்கள் ஜாம் ஆகிப்போய் இருக்கும் என்றும் என் மூத்த மகன் எனக்கு விளக்கி நிரூபித்தும் காட்டினார். இதுவரை இவ்வாறு இல்லாமல் நேற்று மட்டும் இப்படி ஆனது ஏன் என்றே எனக்குப் புரியவில்லை.

    இந்தக்கோளாறை சரிசெய்ய, ஒவ்வொரு வரியாக double line space கொடுத்து மீண்டும் வெளியிட்டதில் Justify என்பது சரிவர வேலைசெய்யாமல், Rightside Margin ஒழுங்கற்ற முறையில் தாறுமாறாக உடைந்து அழகில்லாமல் போய் விட்டது. வார்த்தைகள்,வாக்கியங்கள், பத்திகள் (Paragraph)எல்லாமே உடைந்து போய் ஏதோ ஆகிவிட்டதில் எனக்கு வருத்தமே. அழாக்குறையாக ஆகி விட்டது. மொத்தத்தில் ஒருவித Perfection இல்லாமல் போய் விட்டது.

    எப்படியோ நான், தங்கள் அழைப்புக்கு, தங்களிடம் சொல்லியபடி நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளாமல், உடனே பதிவு தர முடிந்தது. அதில் மட்டும் எனக்கு கொஞ்சம் சந்தோஷம்.

    அன்புடன்’vgk

    ReplyDelete
  53. அந்த உலகத்தினுள் எம்மையும் அழைத்துச் சென்றமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.... அந்தப் படங்களைக் பார்த்தாலே அத்தனை கவலையும் பறந்தோடிவிடுமே...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

    ReplyDelete
  54. ♔ம.தி.சுதா♔ said...
    //அந்த உலகத்தினுள் எம்மையும் அழைத்துச் சென்றமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.... அந்தப் படங்களைக் பார்த்தாலே அத்தனை கவலையும் பறந்தோடிவிடுமே...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா//

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரரே. அன்புடன் vgk

    ReplyDelete
  55. உழைப்பு தெரிகிறது, பாராட்டுக்கள்.
    பாட்டியின் பிரார்த்தனை பிரமிக்க வைத்தது.

    ReplyDelete
  56. அப்பாதுரை said...
    //உழைப்பு தெரிகிறது, பாராட்டுக்கள்.
    பாட்டியின் பிரார்த்தனை பிரமிக்க வைத்தது.//

    தங்களின் அன்பான வருகைக்கும், பிரமிக்க வைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார். vgk

    ReplyDelete
  57. உண்மையில் உங்களின் இடுகைக்கு வந்தால் பல செய்திகளை/ உங்களின் பட்டறிவை தெரிந்து கொள்ள முடிகிறது சிறந்த இடுகை பாராட்டுகளும் நன்றியும்

    ReplyDelete
  58. மாலதி said...
    //உண்மையில் உங்களின் இடுகைக்கு வந்தால் பல செய்திகளை/ உங்களின் பட்டறிவை தெரிந்து கொள்ள முடிகிறது சிறந்த இடுகை பாராட்டுகளும் நன்றியும்
    //

    மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, மேடம்.

    ReplyDelete
  59. என் அழைப்பினை ஏற்று “மழலைகள் உலகம் மகத்தானது” என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டுள்ள Miss: நுண்மதி அவர்களுக்கு என் மனமார்ந்த ஆசிகளும், நன்றிகளும், வாழ்த்துக்களும்.

    படிக்க விரும்புவோர் கீழ்க்கணட இணைப்புக்குச் செல்லவும்:


    http://nunmadhi.wordpress.com/2011/11/25/%e0%ae%ae%e0%ae%b4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81/

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  60. உங்களிடம் கதை கேட்ட குழந்தைகளில் நானும் ஒருவன் .

    எல்லா குழந்தைகளுக்கும் சொடுக்கு போட்டு விட்டு கொண்டு
    நகைச்சுவை கலந்து நீங்கள் கதை சொல்லும் பாங்கு .. அடேங்கப்பா ....!!

    இன்னமும் பசுமை மாறாத நினைவுகள்..

    மிகைப்படுத்துவதாக எண்ண வேண்டாம் .
    நான் இன்றும் என்னுடைய ஆறு வயது மகளுக்கு சுமார் முப்பது வருடங்கள் முன்பு நீங்கள் எனக்கு கூறிய

    கண்ணாயி, மூக்காயி .....
    கண்ணுக்கும் மூக்குக்கும் கேடு வந்துடுச்சு ... போன்ற கதைகளை கூறுகிறேன் .
    மிகவும் ஆர்வமாய் கேட்கிறாள்.

    ReplyDelete
  61. மாலதி said...
    //உண்மையில் உங்களின் இடுகைக்கு வந்தால் பல செய்திகளை/ உங்களின் பட்டறிவை தெரிந்து கொள்ள முடிகிறது சிறந்த இடுகை பாராட்டுகளும் நன்றியும்//

    ரொம்ப சந்தோஷம். தங்களின் அன்பான அருமையான கருத்துக்கள் மகிழ்விப்பதாக உள்ளன. vgk

    ReplyDelete
  62. கணேஷ் said...
    //உங்களிடம் கதை கேட்ட குழந்தைகளில் நானும் ஒருவன் .

    எல்லா குழந்தைகளுக்கும் சொடுக்கு போட்டு விட்டு கொண்டு
    நகைச்சுவை கலந்து நீங்கள் கதை சொல்லும் பாங்கு .. அடேங்கப்பா ....!!

    இன்னமும் பசுமை மாறாத நினைவுகள்..

    மிகைப்படுத்துவதாக எண்ண வேண்டாம.

    நான் இன்றும் என்னுடைய ஆறு வயது மகளுக்கு சுமார் முப்பது வருடங்கள் முன்பு நீங்கள் எனக்கு கூறிய

    கண்ணாயி, மூக்காயி .....
    கண்ணுக்கும் மூக்குக்கும் கேடு வந்துடுச்சு ... போன்ற கதைகளை கூறுகிறேன்.

    மிகவும் ஆர்வமாய் கேட்கிறாள்.//

    ரொம்ப சந்தோஷம் கணேஷ். உன்னுடைய ஞாபகசக்தியை நினைத்து நான் மிகவும் வியந்து போகிறேன்.

    துபாயிலிருந்து வந்துள்ள நம் பவித்ரா + ஷிவா இருவருக்கும் நேற்று தான் அதே கதையைச் சொன்னேன்.

    அன்புடன் கோபு மாமா.

    ReplyDelete
  63. பல்வேறு நடைமுறைச் சிக்கல்களால் என்னால் இன்று குசேலனாகவும்


    ஆக முடியாமல் குபேரனாகவும் ஆக முடியாமல் //:)

    உங்க‌ அக்க‌றையும் செய்நேர்த்தியும் ப‌திவில் ஜொலிக்கிற‌து ஐயா. த‌மிழில‌க்கிய‌த்தில் ம‌ழ‌லைக‌ள் ப‌ற்றிய‌ க‌ருத்த‌மைந்த‌ பாட‌ல்க‌ளையெல்லாம் தேடித் தேடி இணைத்த‌ திறனாய்வுப் ப‌திவாக்கிய‌ உழைப்பு பாராட்டுக்குரிது. கிராபிக் ப‌ட‌ங்க‌ள் அழ‌கு. குழ‌ந்தை என்றாலே அழ‌குதானே! அநிருத் ப‌ட‌ம் போட்டால் இன்னும் ம‌கிழ்வோம். ந‌ம்முள் அமிழ்ந்திருக்கும் குழ‌ந்த‌மையெல்லாம் ஒரு குழ‌ந்தையே வெளிக்கொண‌ர‌ முடிகிற‌து! ரீசார்ஜ் ஆகிவிடுகிறோம் நாம்!

    ReplyDelete
  64. நிலாமகள் said...
    ////பல்வேறு நடைமுறைச் சிக்கல்களால் என்னால் இன்று குசேலனாகவும் ஆக முடியாமல் குபேரனாகவும் ஆக முடியாமல் ////:)

    ==========

    //உங்க‌ அக்க‌றையும் செய்நேர்த்தியும் ப‌திவில் ஜொலிக்கிற‌து ஐயா.//

    மிக்க நன்றி, மேடம்.

    //த‌மிழில‌க்கிய‌த்தில் ம‌ழ‌லைக‌ள் ப‌ற்றிய‌ க‌ருத்த‌மைந்த‌ பாட‌ல்க‌ளையெல்லாம் தேடித் தேடி இணைத்த‌ திறனாய்வுப் ப‌திவாக்கிய‌ உழைப்பு பாராட்டுக்குரிது. //

    ஆம் மேடம். சற்று கஷ்டப்பட்டே சேகரித்தேன்.

    //கிராபிக் ப‌ட‌ங்க‌ள் அழ‌கு. குழ‌ந்தை என்றாலே அழ‌குதானே!

    அநிருத் ப‌ட‌ம் போட்டால் இன்னும் ம‌கிழ்வோம். //

    அவன் பிறந்த 11 ஆம் நாள் புண்ணியாஹாவாசனத்திலும், பிறகு ஒரு மாதமே ஆன நிலையிலும் எடுத்த போட்டோ இரண்டை ஏற்கனவே வெளியிட்டு இருந்தேன்.

    லிங்க்:
    http://gopu1949.blogspot.com/2011/07/1.html

    அதற்கு என் மேலிடத்திலிருந்து சிறிய ஆட்சேபனை வந்தது. அதனாலும், இப்போது இன்னும் அவன் 7 மாதக் குழந்தையாக ஜொலிப்பதாலும், வெளியிட ஓர் தயக்கம். தங்கள் மின்னஞ்சல் அனுப்பினால் தங்கள் ஆசீர்வாதம் வேண்டி தங்களுக்கு மட்டும் அனுப்பி வைப்பேன்.

    //ந‌ம்முள் அமிழ்ந்திருக்கும் குழ‌ந்த‌மையெல்லாம் ஒரு குழ‌ந்தையே வெளிக்கொண‌ர‌ முடிகிற‌து! ரீசார்ஜ் ஆகிவிடுகிறோம் நாம்!//

    தங்களின் கருத்துக்களை வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீகள்.

    படித்ததும் பரவஸம் அடைந்தேன்.

    ரீ-சார்ஜ் என்பது தான் மிகச்சரியான
    சொல்லாடல். அது என்னை மிகவும் கவர்ந்தது.

    அன்புடன் vgk

    [தங்களின் நேற்றையப் பதிவான “யாவாரம்” சிறுகதை என்னை மிகவும் பாதித்து விட்டது. என் மனதைக் கலங்க அடித்து விட்டது. என் உணர்வுகளை உங்களுக்கு எப்படி வெளிப்படையாக வார்த்தைகளில் விவரித்துச் சொல்வது என்றே எனக்குப் புரியவில்லை.

    தங்களின் அதுபோன்ற மிகச்சிறப்பான எழுத்துகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.}

    அன்புடன் vgk

    ReplyDelete
  65. மாதேவி said...
    //அழகிய பதிவு.//

    மிக்க நன்றி. vgk

    ReplyDelete
  66. Replies
    1. Jaleela Kamal October 7, 2012 10:39 AM
      piraku varukiReen. பிறகு வருகிறேன்.

      OK Madam. No problem at all. Take your own time. vgk

      Delete
  67. //குழந்தையின் தளர் நடையைக் காணுதல் இனியது. அக் குழந்தையின்

    மழலைச் சொற்களைக் கேட்டல் அமிர்தத்தைவிட இனியது. ///

    மிகச்சரியே ---

    குசேலர் கதை எத்தனை தடவை படித்தாலும் நல்ல இருக்கு..

    நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் உங்கள் பேரன் பேத்திகளுக்கு நகைச்சுவை கதை சொல்லி எல்லாரையும் அன்பால் கட்டி போட்டு வைத்து இருக்கீங்க.

    எப்ப எப்ப பார்த்தாலும் உங்களை சுற்றி மழலை கூட்டம் தான்னு சொல்லுங்கள்.



    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் Mrs. JALEELA KAMAL Madam, WELCOME to you ! ;)

      //நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் உங்கள் பேரன் பேத்திகளுக்கு நகைச்சுவை கதை சொல்லி எல்லாரையும் அன்பால் கட்டி போட்டு வைத்து இருக்கீங்க.

      எப்ப எப்ப பார்த்தாலும் உங்களை சுற்றி மழலை கூட்டம் தான்னு சொல்லுங்கள்.//

      ஆமாம் மேடம். பெரும்பாலும் அப்படித்தான். எங்க குடும்ப விசேஷங்களில் என்னைச்சுற்றி மழலைகள் கூட்டம் கூடி விடும்.

      குழந்தைகளின் தாயார்கள் “இந்த அங்கிள் நல்லா ஜோரா கதை சொல்லுவாங்க, சமத்தா உட்கார்ந்து நீ கேட்டுட்டு அதே கதையை அப்புறமா எனக்குச் சொல்லணும் OK யா செல்லம்” ன்னு சொல்லி, குழந்தை என் அருகே உட்கார வைத்துவிட்டு, அவர்கள் தங்கள் புடவை, நகைகள், டி.வி. சீரியல் பற்றியெல்லாம், விழாவுக்கு வருகை தந்துள்ள தங்கள் தோழிகளுடன் அரட்டை அடிக்கப்போயிடுவாங்க. ;)

      எனக்கும் இதில் ரொம்ப சந்தோஷமே. இதுலே வேடிக்கை என்னவென்றால் அதுபோல தன் குழந்தையை என்னிடம் விட்டுச்செல்லும் [இன்றைய] அந்தத் தாய்மார்களும், குழந்தைப்பருவத்தில் என்னிடம் மிகுந்த ஆர்வத்துடன் கதை கேட்டவர்களாகவே இருப்பது தான்.

      VGK

      Delete
  68. ”குழல் இனிது, யாழ் இனிது என்ப தம் மக்கள்
    மழலைச் சொல் கேளாதவர்.”//

    மிக மிக அருமையான குறள் எடுத்து சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
    Replies
    1. //Jaleela Kamal October 10, 2012 11:29 PM
      ”குழல் இனிது, யாழ் இனிது என்ப தம் மக்கள்
      மழலைச் சொல் கேளாதவர்.”//

      மிக மிக அருமையான குறள் எடுத்து சொல்லி இருக்கீங்க//

      ஆமாம் மேடம். இந்தக்குறளும் அதில் வரும் ”தம் மக்கள்” என்ற வார்த்தைகளும் எனக்கு மிகவும் பிடித்தவை, தான்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK

      Delete
  69. ஆஆஆ எந்தாப் பெரிய பதிவூஊஊஊஊஊ படிச்சே களைச்சிட்டேன், கொஞ்சம் நில்லுங்கோ ஒரு ரீ குடிச்சிட்டுத்தான் பின்னூட்டம் போடுவேன்...

    ReplyDelete
    Replies
    1. athira October 15, 2012 8:22 AM
      //ஆஆஆ எந்தாப் பெரிய பதிவூஊஊஊஊஊ படிச்சே களைச்சிட்டேன், கொஞ்சம் நில்லுங்கோ ஒரு ரீ குடிச்சிட்டுத்தான் பின்னூட்டம் போடுவேன்...//

      வாங்கோ அதிரா, ”ரீ” என்றால் நிச்சயம் “டீ” யாகத்தான் இருக்கோணும்ன்னு புரிந்து கொண்டேன்.

      றீச்சர் என்றால் டீச்சர் என்று ஏற்கனவே நான் தெரிந்து கொண்டதால் ரீ என்ற டீ சரிதானே!

      கொலம்பஸ் போன்ற என் இந்தக் கண்டுபிடிப்புக்கு ஒரு பாராட்டோ ரீ [டீ] யோ கிடையதா?

      அன்பான வருகைக்கு என் இனிய நன்றிகள்.

      கோபு அண்ணா

      Delete
  70. சுவையாகவும் அழகாகவும் சொல்லி முடிச்சிருக்கிறீங்க. பாட்டியின் பழமொழியை எண்ணி வியக்கிறேன்.. எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்.

    கதை சொல்லிக் கொடுத்துக் கொடுத்தே இருவரை மருமகள்கள் ஆக்கிட்டீங்களே:))))...

    ஆ.. படங்கள் அத்தனையும் சூப்பர் . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. athira October 15, 2012 8:24 AM
      //சுவையாகவும் அழகாகவும் சொல்லி முடிச்சிருக்கிறீங்க. பாட்டியின் பழமொழியை எண்ணி வியக்கிறேன்.. எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்.//

      சந்தோஷம் அதிரா.

      கதை சொல்லிக் கொடுத்துக் கொடுத்தே இருவரை மருமகள்கள் ஆக்கிட்டீங்களே:))))...

      ஆமாம். அது ஒரு பெரிய கதை. வேண்டாம் .. உங்களிடம் நான் அந்தக்கதையைச் சொல்லப்போய், அதைக் கேட்டபின் நீங்களும் மருமகளாக வந்துட்டீங்கன்னா ... என்னால தாங்கவே முடியாது. அண்ணனாகவே இருக்கிறேன், அதிரடி அதிராவுக்கு நான் மாமனாராக வேண்டாம்.

      //ஆ.. படங்கள் அத்தனையும் சூப்பர் . வாழ்த்துக்கள்.//

      இந்த மழலைப்பதிவுக்கு மட்டும் தங்களின் வழக்கமான கிளிகொஞ்சும் மழலை மொழிகள் ஏதும் இல்லாமல், எங்கள் தமிழ்நாட்டுத் தமிழில் கருத்து அளித்துள்ளீர்கள். ஆனால் அது இப்போது எனக்கு [உங்களிடம் பழகியதிலிருந்து] மறந்து போச்சு. அதனால் நீங்க என்ன சொல்றீங்கன்னு புரிவது கஷ்டமாக இருக்கு.

      அதனால் அதை அப்படியே copy & paste போட்டு, அஞ்சுவுக்கு மெயிலில் அனுப்பி, புரிய வைக்கச்சொல்லி, அவங்களையே பதிலும் எழுதித்தரச்சொல்லி, வாங்கி இப்போ அனுப்பியிருக்கிறேனாக்கும்.

      பிரியமுள்ள கோபு அண்ணா.

      Delete
    2. அனைத்தையும் படிச்சிட்டேன்:)).. அது உங்களுக்கும் தெரியோணுமெல்லோ அதுதான்.. இந்தப் பின்னூட்டம்:)) அதிரா வந்து படிச்சிட்டுப் போறாவாம் எனச் சொல்லிடுங்கோ கோபு அண்ணனிடம்:)

      Delete
    3. athira October 17, 2012 4:07 AM
      //அனைத்தையும் படிச்சிட்டேன்:)).. அது உங்களுக்கும் தெரியோணுமெல்லோ அதுதான்.. இந்தப் பின்னூட்டம்:)) அதிரா வந்து படிச்சிட்டுப் போறாவாம் எனச் சொல்லிடுங்கோ கோபு அண்ணனிடம்:)//

      ??????????????????????

      அதிரா, இதை யாருக்காகவோ எழுதி எங்கேயோ அனுப்புவதற்கு பதிலாக, தவறுதலாக இங்கேயே
      எனக்கே அனுப்பிச்சிட்டீங்களே !

      ??????????????????????

      அட ராமா!

      ஒண்ணுமே புரியலே உலகத்திலே
      என்னவோ நடக்குது...... ;)))))

      மீண்டும் மீண்டும் வருகைக்கு நன்றிகள், அதிரா.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      Delete
  71. நீங்க ரொம்ப ரொம்ப மோசம் கோபு சார்

    ஏற்கனவே நான் ரொம்ப லேட்டா உங்களுக்கு அறிமுகம் ஆகி இருக்கேனே. இவ்வளவு நாட்களா ப்ளாக் ஆரம்பிக்காமப் போனோமேன்னு வருத்தத்துல இருக்கேன். இதெல்லாம் படிக்கப் படிக்க எவ்வளவோ மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தமா இருக்கு.

    சரி பரவாயில்லை. ரஜினி மாதிரி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தேன்னு நினைச்சுக்கறேன்.

    அப்புறம் நான் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். (விவரம் மெயிலில் சொல்லுகிறேன்) அதுல உங்க கட்டுரையில இருந்து கொஞ்சம் திருடிக்கப் போறேன், அனுமதி கொடுக்காவிட்டாலும், கொடுத்தாலும்.

    ReplyDelete
  72. JAYANTHI RAMANI January 2, 2013 2:13 AM

    வாங்கோ திருமதி ஜயந்தி ரமணி மேடம். வணக்கம்.

    //நீங்க ரொம்ப ரொம்ப மோசம் கோபு சார்//

    ஏன்?????? என்னாச்சு??????

    //ஏற்கனவே நான் ரொம்ப லேட்டா உங்களுக்கு அறிமுகம் ஆகி இருக்கேனே. இவ்வளவு நாட்களா ப்ளாக் ஆரம்பிக்காமப் போனோமேன்னு வருத்தத்துல இருக்கேன். இதெல்லாம் படிக்கப் படிக்க எவ்வளவோ மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தமா இருக்கு.//

    ஓஹோ அப்படியா?

    நான் என்னவோ ஏதோன்னு ஒரு நிமிஷம் பயந்தே பூட்டேன்.

    //சரி பரவாயில்லை. ரஜினி மாதிரி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தேன்னு நினைச்சுக்கறேன்.//

    சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்க லேடஸ்டே தான், எனக்கும்.

    கடைசியாக வந்து பின்னூட்டம் இடுபவர்கள் எப்போதுமே லேடஸ்டு தானே! ;)))))

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. கோபு To திருமதி ஜயந்தி ரமணி [2]

      //அப்புறம் நான் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். (விவரம் மெயிலில் சொல்லுகிறேன்) அதுல உங்க கட்டுரையில இருந்து கொஞ்சம் திருடிக்கப் போறேன்,//

      கொஞ்சம் என்ன நிறையவே திருடிக்கோங்கோ.

      பதிவுலகில் தங்களின் தங்கமான எழுத்துக்களாலும், எனக்கு அளித்த பல அழகான சுவையான பின்னூட்டங்களாலும் என் மனதைத் திருடியவர்கள் சிலர் உண்டு.

      அதில் நீங்களும் ஒருவர் என்று தான் நான் நினைத்துக் கொள்கிறேன்.

      //அனுமதி கொடுக்காவிட்டாலும், கொடுத்தாலும்.//

      தங்களுக்கு என் அனுமதி தேவையே இல்லை.

      நேற்றே எனக்கு எல்லாமே சொல்லிப் புரிய வெச்சுட்டீங்க.

      அதனால் தயங்காமல் தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

      No objection at all for me.

      பிரியமுள்ள
      கோபு

      Delete
  73. பாராட்டுக்கள்

    அருமையான் பதிவு.
    நன்றாக அனுபவித்து எழுதப்பட்ட பதிவு.
    அதனால் அதில் உயிரோட்டம் உள்ளத்தில் வியப்பில்லை.


    குழந்தையின் முகத்தை கண்டால்
    கோடி துக்கம் தொலையும் என்பார்கள்.

    மழலை உலகத்திற்குள் நுழைந்தேன்
    மலரும் நினைவுகளோடு வெளி வந்தேன்.

    கொண்டாடினால் குதூகலிக்கும்
    குழந்தைகள் ,தானும் இன்புற்று
    நமக்கும் இன்பத்தை அள்ளித்தரும்
    கற்பக விருஷங்கள்.

    இறைவனே நம்மிடையே
    கண்ணனாக வந்தான் குழந்தையாக

    திகட்டாத இன்பங்களை அள்ளித்தான்
    கண்ணெதிரே அன்று அனைவருக்கும்
    அதை படிப்போர்க்கு இன்றும் இன்பம் தருகிறது

    நினைத்தாலே இன்பம் தரும்
    ஆயர்பாடியில் அவதரித்து
    ஆயர்களோடு கூடி ஆவினம் மேய்த்து
    அவன் செய்த லீலைகள்.

    ReplyDelete
  74. Pattabi Raman May 7, 2013 at 2:44 AM

    வாங்கோ வாங்கோ வணக்கம் / நமஸ்காரம் அண்ணா.

    //பாராட்டுக்கள். அருமையான பதிவு. நன்றாக அனுபவித்து எழுதப்பட்ட பதிவு. அதனால் அதில் உயிரோட்டம் உள்ளத்தில் வியப்பில்லை. //

    மிகவும் சந்தோஷம், ஸார்.

    >>>>>

    ReplyDelete
  75. கோபு >>>>> Mr. Pattabi Raman Sir [2]

    //குழந்தையின் முகத்தை கண்டால்
    கோடி துக்கம் தொலையும் என்பார்கள்.//

    மிகவும் கரெக்ட் ஸார். அதே அதே !

    //மழலை உலகத்திற்குள் நுழைந்தேன்
    மலரும் நினைவுகளோடு வெளி வந்தேன்.//

    மிக்க மகிழ்ச்சி.

    //கொண்டாடினால் குதூகலிக்கும்
    குழந்தைகள் ,தானும் இன்புற்று
    நமக்கும் இன்பத்தை அள்ளித்தரும்
    கற்பக விருஷங்கள். //

    ஆமாம் ஸார், ;)))))

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கோபு >>>>> Mr. Pattabi Raman Sir [3]

      //இறைவனே நம்மிடையே கண்ணனாக வந்தான் குழந்தையாக

      திகட்டாத இன்பங்களை அள்ளித்தான். கண்ணெதிரே அன்று அனைவருக்கும் அதை படிப்போர்க்கு இன்றும் இன்பம் தருகிறது

      நினைத்தாலே இன்பம் தரும் ஆயர்பாடியில் அவதரித்து
      ஆயர்களோடு கூடி ஆவினம் மேய்த்து அவன் செய்த லீலைகள். //

      ஆமாம் ஸார், குட்டிக்கிருஷ்ணனின் பால்ய லீலைகளை, படித்தாலும் கேட்டாலும் ருசியோ ருசியாகத்தான் உள்ளன. அதைப்பற்றி அழகானதொரு பதிவு எழுதி வெளியிடணும்ன்னு ரொம்ப நாளா நானும் ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்.

      பிராப்தம் சரியாக அமையவில்லை.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸார்.

      இந்தக்கீழ்க்கண்ட பதிவினையும் படியுங்கோ ஸார். உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். அதை வைத்தே நீங்க உங்க பாணியில் ஏதாவது சொல்லி ஓர் பதிவிடவும் வசதியாக இருக்கும், ஸார். http://gopu1949.blogspot.in/2012/04/17.html

      அன்புடன் VGK

      Delete
  76. மழலைகளைப் பற்றிப் பேசினால் நேரம் போவதே தெரியாது என்பது முழு உண்மைதான்.

    ReplyDelete
    Replies
    1. பழனி. கந்தசாமி April 23, 2015 at 6:37 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //மழலைகளைப் பற்றிப் பேசினால் நேரம் போவதே தெரியாது என்பது முழு உண்மைதான்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      Delete
  77. ஒவ்வொரு குழந்தைப் படமும் அருமை. மனதைக்கொள்ளைக் கொள்கிறது. அதிலும் அந்த குறள் சிறு கை அளாவிய கூழ்,
    மழலையர் உலகம் மகத்தானது தான். எல்லா கவலையும் போக்கும் உலகம்.மொத்தத்தில் முத்தம் தரும் பதிவு. 26 குழந்தை குசேலருக்கு சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. mageswari balachandran May 5, 2015 at 4:29 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஒவ்வொரு குழந்தைப் படமும் அருமை. மனதைக்கொள்ளைக் கொள்கிறது. அதிலும் அந்த குறள் சிறு கை அளாவிய கூழ், மழலையர் உலகம் மகத்தானது தான். எல்லா கவலையும் போக்கும் உலகம்.மொத்தத்தில் முத்தம் தரும் பதிவு.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பிரத்யேகமான ரசனைகளுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      // 26 குழந்தை குசேலருக்கு சூப்பர்.//

      ஆஹா, குசேலரின் 27 குழந்தைகளில் ஒன்றைக் காணோமே எனத் தேடிக்கொண்டு இருந்தேன். தாங்கள்தான் தூக்கிக்கொண்டு சென்றுள்ளீர்கள் என இப்போதுதான் தெரிந்துகொண்டேன். :) சந்தோஷம். அந்த 27வது குழந்தையை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோங்கோ, ப்ளீஸ்.

      Delete
  78. குழந்தைகளின் படங்களும் பதிவும் கொள்ளை அழகு. அந்த வரத்துக்கு ஆண்டவன் அருள் வேணும் ஊட்டுவித்தால் யாரொருவர் ஊடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டிலிலே ஆடூதாரே கண்ணா. நீ நடத்தும் நாடகத்தில்
    இதுக்கு மேல எழுத முடியல.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் May 21, 2015 at 10:19 AM

      //குழந்தைகளின் படங்களும் பதிவும் கொள்ளை அழகு. //

      சந்தோஷம். மிக்க நன்றி.

      //அந்த வரத்துக்கு ஆண்டவன் அருள் வேணும். ”ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா. நீ நடத்தும் நாடகத்தில் .........” //

      அருமையான பாடல். :)

      நான் நடத்தும் நாடகமா ? என்ன சொல்றீங்கோ? :)

      //இதுக்கு மேல எழுத முடியல.//

      சரி, சரி, ஓக்கே.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்ம்மா.

      Delete
  79. கொளந்தக போட்டோ படங்க பதிவு அல்லாமே சூப்பராகீதுஙுக.

    ReplyDelete
  80. மழலையர் உலகம் மகத்தானதுதான் சந்தேகமே இல்ல.படங்கள் கொள்ளை அழகு பதிவோ அழகோ அழகு.

    ReplyDelete
  81. இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் என்னிடம் அன்று சிறுவயதில் கதை கேட்டு மகிழ்ந்த இரண்டு பெண் குழந்தைகளே,பிற்காலத்தில், எனக்கு மருமகள்களாக வாய்த்தது தான்.//என்ன ஒரு கொடுப்பினை...இரு பக்கமும்...
    எல்லாம் கடவுள் செயல்! //

    ReplyDelete
  82. மேற்கோள்களுடன் கூடிய பதிவு அருமை ஐயா!

    ReplyDelete
  83. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரிக்க, நானே உங்களுக்கு போன் செய்யலாம் என்று இருந்தேன். நீங்களே எனது பதிவிற்கு வந்து இந்த பதிவின் சுட்டியினை எனது வலைத்தளத்தில் தந்து விட்டீர்கள்.

    நீங்கள் இங்கு சுட்டிக் காட்டிய ”மழலைகள் உலகம் மகத்தானது” என்ற http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html உங்களுடைய பதிவினைப் படித்தேன். திருக்குறள் வரிகளுடன் சுவாரஸ்யமான செய்திகள். நீங்கள் சொன்ன குசேலர் கதையைக் கேட்டவுடன், பள்ளிப் பருவத்தில் நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் இந்த கதையினைச் சொன்ன ஆசிரியர் (பெயர் நினைவில் இல்லை) முகம் நினைவுக்கு வந்தது. குசேலருக்கு 27 குழந்தைகள் என்பதனைக் காட்ட 3 x 9 = 27 குழந்தைகள் படங்கள். இதுபோல் புதுமையான சிந்தனை வலைப்பதிவர்களில் உங்கள் ஒருவருக்கே தோன்றும். உங்களிடம் கதை கேட்ட குழந்தைகளே, உங்களது மருமகள்கள் என்பது மகிழ்வான செய்தி.

    சாந்தி மாரியப்பன் (ஆமைதிச் சாரல்), ஆன்மீகப் பதிவர் ராஜேஸ்வரி (மணிராஜ்), மனோசாமிநாதன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க தொடர்பதிவு என்றதும் அன்றைய இவர்களது பழைய பதிவுகள் நினைவுக்கு வந்தன. அதிலும் மறைந்த சகோதரி ராஜேஸ்வரி (மணிராஜ்) அவர்களது பெயரைக் கண்டதும், அம்மட்டோ இவ்வாழ்வு என்று கண்ணீர் வந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ June 13, 2016 at 7:39 AM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம் ......... அம்மட்டோ இவ்வாழ்வு என்று கண்ணீர் வந்து விட்டது. //

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான மனதுக்கு ஆறுதலான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGK

      Delete
    2. குசேலர் கதை தெரிந்த கதை தான் என்றாலும், உங்கள் எழுத்து நடை அதை மேலும் சுவாரஸ்யமாக்கியது என்றே சொல்ல வேண்டும்.
      அங்கங்கே திருக்குறள், இனியவை நாற்பது,புறநாநூறு என்று மேற்கோள்களுடன் படிக்கும் போது, குசெலோபாக்கியாயணம் உபன்யாசம் கேட்ட திருப்தி உண்டாகிறது.

      கதை கேட்ட மழலைகளில் உங்கள் மருமகள்களும் இருந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி.
      அருமையானப் பதிவு.

      Delete
    3. rajalakshmi paramasivam June 13, 2016 at 3:58 PM

      வாங்கோ மேடம், வணக்கம். நன்னா செளக்யமா இருக்கேளா?

      //குசேலர் கதை தெரிந்த கதை தான் என்றாலும், உங்கள் எழுத்து நடை அதை மேலும் சுவாரஸ்யமாக்கியது என்றே சொல்ல வேண்டும்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //அங்கங்கே திருக்குறள், இனியவை நாற்பது, புறநாநூறு என்று மேற்கோள்களுடன் படிக்கும் போது, குசேலோபாக்கியாயணம் உபன்யாசம் கேட்ட திருப்தி உண்டாகிறது.//

      ஆஹா .... சந்தோஷம்.

      //கதை கேட்ட மழலைகளில் உங்கள் மருமகள்களும் இருந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி.//

      ஏதோ அதுபோல ஒரு பாக்யம் எதிர்பாராமலேயே அமைந்துள்ளது.

      //அருமையானப் பதிவு.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான பதிவு என்ற அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      Delete
    4. மிக்க ஸௌக்கியம் சார். சில பல காரனங்களால்
      பதிவுலகம் பக்கம் அதிகம் வர முடியவில்லை. இனி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.

      நலன் விசாரிப்பிற்கு மிக்க நன்றி சார்.

      Delete
    5. rajalakshmi paramasivam June 13, 2016 at 8:07 PM

      //மிக்க ஸௌக்கியம் சார்.//

      மிகவும் சந்தோஷம்.

      //சில பல காரணங்களால் பதிவுலகம் பக்கம் அதிகம் வர முடியவில்லை...

      என் நிலைமையும் அதேதான். இப்போதெல்லாம் எப்போதாவது கொஞ்சம் நான் பதிவுலகம் பக்கம் எட்டிப்பார்ப்பதோடு சரி.

      //இனி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //நலன் விசாரிப்பிற்கு மிக்க நன்றி சார்.//

      ஆஹா .... மிகவும் சந்தோஷம் மேடம்.

      Delete
  84. இந்த பதிவு படங்கள் தூள் தூள்...பின்னூட்டங்களையும் ரசிச்சு படிக்க எவ்வளவு விஷயங்கள் தெரியமுடியுது...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. June 14, 2016 at 12:27 PM

      வாங்கோ முன்னா, வணக்கம்.

      //இந்த பதிவு படங்கள் தூள் தூள்... பின்னூட்டங்களையும் ரசிச்சு படிக்க எவ்வளவு விஷயங்கள் தெரியமுடியுது...//

      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      அன்புடன் கோபூஜி

      Delete